திருவிதாங்கூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
இவ்வேணாட்டின் கடைசி மன்னன் [[மார்த்தாண்ட வர்மர்|மார்த்தாண்ட வர்மனுக்கு]] பின்பு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணியின் மன்னன் கார்த்திகை திருநாள் ராமவர்மனால் [[திருவிதாங்கூர்]] அரசாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 
===பால மார்த்தாண்டன் (1728-1758)===
== மார்த்தாண்ட வர்மா ==
[[படிமம்:marthandan.jpg|thumbnail|left|மன்னர் [[மார்த்தாண்ட வர்மா]]]]
வேணாட்டின் புகழ்பெற்ற பேரரசரும் இறுதி அரசரும் இவராவர். கி.பி 1724-28 காலத்தில் ஆட்சி செய்த இராமவர்மன் அரசருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லாத நிலையில், இராமவர்மனின் ஆசை நாயகி காஞ்சிபுரம் அபிராமி என்னும் பிராமணப் பெண்ணுக்குப் பிறந்த பப்புத் தம்பிக்கு முடிசூட்ட [[யோகக்காரர்]]களும் [[மாடாம்பி]]களும் முயற்சி செய்த வேளையில் [[தச்சன் விளை]] அனத்தன் என்னும் [[அனந்த பத்மநாபன் நாடார்|அனந்தபத்மநாபன் நாடாரின்]] தலைமையில் 108 களரி ஆசான்களும் முயற்சி செய்து [[மார்த்தாண்ட வர்மர்|மார்த்தாண்டனுக்கு]] முடிசூட்டினர். இவர் அரசனின் சகோதரி மகன். [[திற்பாப்பூர் பரம்பரை]]யில் வந்தவர். இவர் [[மருமக்கள் வழி]] வந்தவர் என்ற கூற்றுமுள்ளது. இவருக்கு முன் வந்த வேணாட்டு அரசர்கள் யாரும் மருமக்கள் வழியில் பதவிக்கு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.
திருவிதாங்கூரின் தற்கால வரலாறு, வேணாட்டு அரச மரபில் வந்து திருவிதாங்கூர்வரை தனது நாட்டை விரிவாக்கிய [[மார்த்தாண்ட வர்மர்]] காலத்துடனேயே (1729–1758) தொடங்குகிறது. இவர் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினருடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டு அவர்கள் உதவியுடன் தனக்கு எதிராகக் கிளம்பிய உள்ளூர் நிலப்பிரபுக்களான ''எட்டுவீட்டில் பிள்ளைமார்'' முதலியோரையும், மன்னர் மகாராஜ ராம வர்மரின் மக்களை ஆதரித்தவர்களையும் அடக்கினார். அடுத்தடுத்து நிகழ்ந்த போர்களில், கொச்சி வரை இருந்த [[அட்டிங்கல்]], [[கொல்லம்]], [[காயம்குளம்]], [[கொட்டாரக்கரை]], [[கோட்டையம்]], [[சங்கனசேரி]], [[மீனச்சில்]], [[அம்பலப்புழா]] ஆகிய அரசுகளைத் தோற்கடித்துத் தனது அரசுடன் இவர் சேர்த்துக்கொண்டார்.
 
திருவிதாங்கூர்-டச்சுப் போரில், [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]]யை இவர் தோற்கடித்தார். இப் போரில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வு [[குளச்சல் போர்]] ஆகும். 1741 ஆகஸ்ட் 10 ஆம் நாள் இடம்பெற்ற போரில் டச்சுத் தளபதியான [[இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய்]] (Eustachius De Lannoy) என்பவன் பிடிபட்டான். 1750 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் நாள், தனது அரசைத் திருவனந்தபுரத்திலுள்ள இறைவன் ஸ்ரீபத்மநாபனுக்குக் காணிக்கையாக்கினார். அன்றிலிருந்து திருவாங்கூர் அரசர்கள் தங்களை இறைவன் ஸ்ரீபத்மநாபனின் அடியவர்களாகக் கொண்டு நாட்டை ஆண்டுவந்தனர். 1753 ஆம் ஆண்டில் டச்சுக்காரர் மன்னருடன் ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டனர். 1754 ஜனவரி 3 ஆம் நாள் அம்பலப்புழாவில் நடைபெற்ற சண்டையில் கொச்சி அரசரதும், நாடிழந்த ஏனைய அரசர்களினது கூட்டுப்படைகளைத் தோற்கடித்து அவரை எதிர்த்தவர்கள் அனைவரையும் மார்த்தாண்ட வர்மர் முறியடித்தார். 1757 இல் திருவிதாங்கூர், கொச்சி ஆகிய அரசுகளிடையே செய்யப்பட்ட ஒப்பந்தம் திருவிதாங்கூரின் வட எல்லையில் அமைதி ஏற்பட வழி வகுத்தது. <br />
இவர் சிறந்த போர் வீரர். இவருக்கு அந்தரங்க ஆலோசகரும் முதன்மை தளபதியுமான அனந்தபத்மநாபன் நாடாரின் கீழ் அனைத்து களரி ஆசான்களும் ஆதரவு தெரிவித்தனர். இவர் காலத்தில் நாடு வடக்குப் பகுதியில் விரிவாக்கம் கண்டு [[கொச்சி]] வரை விரிந்து பரவியிருந்தது. இவர் சிறந்த நிர்வாகியாயிருந்தார். நாட்டின் நிலங்கள் அளந்து முறை செய்யப்பட்டன. நிர்வாக வசதிக்காக நாடு 80 கரைகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இவர்கள் கரைகாரர் என அழைக்கப்ட்டனர். அரசருக்கு ஆலோசனை சொல்ல துரத்துக்காரர் என எண்மர் நியமிக்கப்பட்டனர். யோகக்காரரை அடக்கி நாட்டை வழிநடத்த எட்டுதுரம் நாடார்களை திருவனந்தபுரத்தில் குடியமர்த்தினார்<ref> பக் 18, முனைவர் ப. சர்வேசுரன், ஓட்டன் கதை</ref>. மார்த்தாண்டவர்மன் நாட்டை [[திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்|பத்மநாபசாமிக்கு]] அர்பணித்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் இம்மன்னர் காலத்தில் நாட்டின் தலைநகர் [[கல்குளம்]] ஆகும். தான் ஆட்சிக்கு வர உதவியதற்காகவும், நாட்டை விரிவாக்க உதவியதற்காகவும் [[தலைநகரம்|தலைநகரின்]] பெயரை [[பத்மநாபபுரம்]] என்று மாற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற போர்களில் அவர், கொச்சிவரை உள்ளடக்கிய அரசுகளாம், ஆற்றின்கல், கொல்லம் காயம்குளம், கொட்டாரக்கரா மற்றும் அம்பலப்புழா ஆகியவற்றை போரில் வெற்றி கொண்டு தனது அரசுடன் சேர்த்துக் கொண்டார்.
 
10-08-1741-ல் நடைப்பெற்ற குளச்சல் போரில், வெற்றி வாகை சூடி, டச்சு கப்பற்படைத் தலைவன் யுஸ்டாச்சின்ஸ் டிலன்னாய் என்பவரைச் சிறைப்பிடித்து, போர்க்கைதியாக்கி அவனையே பெரிய கப்பற்படைத்தலைவன் (வலிய கப்பீத்தான்) என்று நியமனமும் செய்தார். இதனால் டிலன்னாய் திருவிதாங்கூர் படையில், நவீன ஆயுதங்களைக் கையாள பயிற்சிக் கொடுத்து மேலும் வலிமையுறச்செய்தார்.
வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர் இந்தியாவின் பெரும்பகுதியை அடக்கியாண்ட போதும் வேணாடு பகுதியில் [[வணிகம்|வணிகக்]] குழுக்களாகவே செயல்படமுடிந்தது. பால மார்த்தாண்டவர்மன் காலத்தில் [[ஆங்கிலேயர்]], [[போர்த்துக்கீசர்|போர்ச்சிகீசியர்]], டச்சுக்காரர் ஆகியோர் எவ்வளவோ முயன்றும் அவரவர் வணிக வளாகங்களுக்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டனர்<ref> கே.கே. குசும்பன், History of Trade and commerce in Travancore</ref>. ஆத்திரமுற்ற டச்சுக்காரர்கள் ரகசியமாக படைகளை வருவித்து தாக்குதலில் ஈடுபட்ட போதும் [[குளச்சல் சண்டை|குளச்சல் சண்டையில்]] தோல்வியையே தழுவினர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையின் போது டச்சுக்கார அதிகாரிகளின் அதிகப்படியான கோரிக்கைகளை எழுப்பிய போது வெகுண்டெழுந்த மார்த்தாண்டவர்மன் 'நான் ஐரோப்பா மீது படையெடுக்க முடிவு செய்துள்ளேன், அங்கு சந்தித்துக்கொள்வோம்' என்று கூறியதால் டச்சு அதிகாரிகள் வேணாட்டை விட்டு வெளியேறினர்<ref> R.G. Alexander, Monumental remanis of Dutch East India</ref>. கி.பி 1758ம் ஆண்டு மர்மமான முறையில் [[மரணம்]] அடைந்தார்.
 
கி.பி 10 ம் நூற்றாண்டளவில் சேரநாட்டின் வடபகுதியை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நாயர்-நம்பூதிரி கூட்டணி பால மார்த்தாண்டவர்மன் காலம் வரை கொச்சிக்கு தெற்கே காலூன்றவில்லை. கி.பி 1758ம் ஆண்டு மார்த்தாண்டவர்மன் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த கார்த்திகை திருநாள் ராமவர்மன் தலைநகரை கல்குளத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றினார். இவர் திற்பாப்பூர் பரம்பரையில்லை. ஆட்சியதிகாரம் நம்பூதிரி-நாயர் தலைமைக்கு மாறியது. நாட்டின் பெயர் [[திருவாங்கூர்]] என பதிவு செய்யப்பட்டது.
 
== கார்த்திகைத் திருநாள் இராமவர்மா ==
"https://ta.wikipedia.org/wiki/திருவிதாங்கூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது