வரகுணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB |
|||
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''வரகுணன்''' கி.பி. 792 முதல் 835 வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்.[[இரண்டாம் இராசசிம்மன்|இரண்டாம் இராசசிம்மனின்]] மகனான இம்மன்னன் இவன் பாட்டன் பெயரான '''சடையவர்மன்''' என்ற பெயரை சிறப்புப்பெயராகப் பெற்று சிறப்புற்றவன்.முதல் வரகுணப் பாண்டியனுமான வரகுணனைக் "கொற்றவர்கள் தொழுகழற்கால் கோவரகுண மகாராசன்" என [[சின்னமனூர் செப்பேடு|சின்னமனூர் செப்பேட்டில்]] இவனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.[[நந்திவர்மன்]] [[சோழ நாடு|சோணாட்டை]] ஆட்சி செய்த பொழுது வரகுணப் பாண்டியன் அவனுடன் [[போர்]] செய்தான் என சோழநாட்டில் அமையப்பெற்றிருக்கும் இவனைப் பற்றிக் குறிக்கும் கல்வெட்டுக்கள் பல கூறுகின்றன.
== சோழ நாட்டிலும்,தொண்டை நாட்டிலும் ஆட்சி ==
பாண்டிய அரசர்களுள் வரகுணப்பாண்டியன் காலத்துக் கல்வெட்டுகளே அதிக அளவில் காணப்பட்டன.இவனின் நான்காம் ஆட்சிக்காலக் கல்வெட்டு சோழநாட்டு [[திருவியலூர்]],[[திருநெய்த்தானம்]] ஆகிய ஊர்களிலும்.இவனின் ஆறாம்,மற்றும் எட்டாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டுக்கள் [[ஆடுதுறை]],[[கும்பகோணம்]],[[செந்தலை]] ஆகிய ஊர்களிலும்.இவனின் பதினொன்றாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டுகள் [[திருச்சிராப்பள்ளி]],[[திருக்கோடிகா]] ஆகிய ஊர்களிலும் மேலும் [[திருச்சோற்றுத்துறை|திருச்சோற்றுத்துறையில்]] சில [[கல்வெட்டு|கல்வெட்டுக்களும்]] இருப்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு சோழ நாடெங்கும் இவனது கல்வெட்டுக்கள் பல இருப்பதன் மூலம் [[சோழ நாடு]] முழுவதும் இவன் ஆட்சியில் இருந்திருக்கலாம் எனப் பொதுவான ஒரு கருத்து நிலவுகின்றது.மேலும் நந்திவர்மனுடன் போர் செய்து வென்று [[தொண்டை நாடு|தொண்டை மண்டலத்தினையும்]] தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான் என்பது வரலாறு.
== வரகுணப் பாண்டியனின் சமயப்பணிகள் ==
நியமத்தில் தங்கியிருந்த இவன் சீராப்பள்ளி இறைவனுக்குத் [[திருவிளக்கு|திருவிளக்குகள்]] வைத்து,125 [[கழஞ்சு]] [[பொன்]] கொடுத்து விளக்கிட வைத்து வேம்பிலும்,நியமத்திலும் கோயில் பணிகள் செய்தான்.[[திருநெல்வேலி]] [[அம்பாசமுத்திரக் கோயில்|அம்பாசமுத்திரக் கோயிலுக்கு]] 290 பொன்காசுகள் நாள் வழிபாட்டிற்கு அளித்தான் என அப்பகுதியில் உள்ள இவனின் பதினாறாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
== வரகுண பாண்டியனைப் பற்றிய புகழுரைகள் ==
வரி 17 ⟶ 14:
திருவாதவூரடிகளாகிய [[மணிவாசகர்]] வரகுண பாண்டியனோடு இருந்த சமயம் இவனைப் பற்றித் [[திருச்சிற்றம்பலக் கோவை|திருச்சிற்றம்பலக் கோவையில்]] இரு பாடல்களைப் பாடினார்.அவையாவன:
{{cquote|
"''மன்னவன் தெம்முனை மேற்செல்லமாயினும்''<br>
''மால்அரியேறு''
''அன்னவன் தேர்புறத்தல்கல் செல்லாது''
''வரகுணனாந்''
''தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் மற்றைத்''
''தேவர்க்கெலாம்''
''முன்னவன் மூவலன் ஆளும்மற்றோர்''
''தெய்வம் முன்னவளே''" |40px|40px|(306)}}
{{cquote|
''"புயலோங்குஅலர்சடை ஏற்றவன் சிற்றம்பலம்''
''புகழும்''
''மயலோங்கிருங்களியானை வரகுணன் வெற்பில்''
''வைத்த''
''கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன்கோபமும்''
''காட்டிவரும்''
''செயலோங்குஎயில் எரிசெய்தபின் இன்றோர்''
''திருமுகமே''" |40px|40px|(307)}}
வரி 53 ⟶ 50:
[[பட்டினத்தடிகள்]] திருவிடைமருதூர் [[மும்மணிக் கோவை|மும்மணிக் கோவையில்]] வரகுணன் ஆற்றிய தொண்டுகள் அனைத்தினையும் பாடலாகக் கூறியுள்ளார் அப்பாடலில்-
{{cquote|
"''வெள்ளைநீறு மெய்யிற்கண்டு''
''கள்ளன் கையில் கட்டவிழ்ப்பித்தும்''
''பாடினவென்று படாம்பல் அளித்தும்''
''ஈசந்தன்னை ஏத்தின என்று''
''காசும் பொன்னுங்கலந்து தூவியும்''
''வழிபடும் ஒருவன் மஞ்சனத்தியற்றி''
''வேம்புகட்கெல்லாம் விதானம் அமைத்தும்''
''புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த''
''பெரிய அன்பின் வரகுணதேவரும்''"|40px|40px|}}
வரி 76 ⟶ 73:
பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த [[நம்பியாண்டார் நம்பி|நம்பியாண்டார் நம்பிகள்]] [[கோயில் திருப்பண்ணியர்]] என்ற விருத்தம் பாடினார்.அதில் அவர் வரகுணனைப் பற்றிப் பாடுகையில்
{{cquote|
"''பொடியேர் தருமேனியனாகிப் பூசல் புகவடிக்கே''
''கடிசேர் கணைகுளிப் பக்கண்டு கோயில்''
''கருவியில்லார்''
''அடியே படவமையுங்கணை என்றவரகுணன்தன்''
''முடியே தருகழல் அம்பலத்தாடி தன்மெய்''
''கழலே''!"|40px|40px|}}
|