இரா. இராகவையங்கார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB |
|||
வரிசை 12:
| ethnicity = [[தமிழர்]]
| field = தமிழிலக்கிய, இலக்கண ஆராய்ச்சி
| work_institution = மதுரை சேதுபதி பள்ளி <
| alma_mater = இராமநாதபுரம் பள்ளி
| known_for = தமிழாராய்ச்சி, சொற்பொழிவு, சமசுகிருத – தமிழ் மொழிபெயர்ப்பு.
| prizes = மகாவித்துவான்<
|education = பள்ளியிறுதி
|employer = சேதுசமத்தானம், சேதுபதி பள்ளி, சேசையர் பள்ளி, மதுரைத் தமிழ்ச் சங்கம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
வரிசை 29:
}}
சேதுசமத்தான மகாவித்துவான், பாசா கவிசேகரர் '''இரா. இராகவையங்கார்''' சிறந்த நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியர், பத்திராசிரியர், ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், சமயநூலறிஞர். மொழிநூலறிஞர் <ref name=
== பிறப்பு==
தமிழ்நாட்டில் [[சிவகங்கை]] நகருக்கு அருகில் உள்ள தென்னவராயன் புதுக்கோட்டையில் [[1870]] – செப்டம்பர் -20 ஆம் நாள் இரா. இராகவையங்கார் பிறந்தார். இராமாநுசையங்காரும் பதுமாசனி அம்மையாரும் இவர்தம் பெற்றோர் ஆவர்.
== கல்வி ==
இரா. இராகவையங்காருக்கு ஐந்தாம் அகவை நிறைவடைந்த பொழுது அவர்தம் தந்தையார் இறந்துவிட்டார். எனவே, தன் தாய்மாமாவும் சேதுசமசுதானத்தின் அரசவைப் புலவராக இருந்தவருமான நூறுகவனகர் (சதாவதானம்) முத்துசாமி ஐயங்கார் ஆதரவில் இரா. இராகவையங்கார் இராமநாதபுரத்தில் வளர்ந்தார். இந்த முத்துசாமி ஐயங்காரின் மகனே தமிழறிஞர் [[மு. இராகவையங்கார்]] ஆவார். இராமநாதபுரத்தில் பள்ளியிறுதி (Matriculation) வரை பயின்று தேறினார். பின்னர் தன் மாமாவிடத்தும் சேதுசமத்தானத்தில் இருந்த பிற புலவர்களிடத்தும் தமிழும் வடமொழியும் பயின்றார்<ref name=
== தமிழாசிரியப் பணி ==
[[1888]]ஆம் ஆண்டில் தன்னுடைய 18ஆம் அகவையில் மதுரையில் உள்ள [[சேதுபதி உயர்நிலைப் பள்ளி]]யில் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். இங்கு பணியாற்றும் பொழுது சானகி அம்மாள் என்பவருக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகளும் இராமானுசையங்கார் என்னும் மகனும் பிறந்தனர்.
அதன் பின்னர் திருச்சிராப்பள்ளியில் உள்ள, பின்னாளில் தேசிய உயர்நிலைப் பள்ளி என அழைக்கப்பட்ட, சேசையங்கார் பள்ளியில் சிலகாலம் இவர் தமிழாசிரியராக இருந்தார்.
==சேது சமத்தான அரசவைப்புலவர் ==
இராமநாதபுர சேதுசமத்தானத்தான அரசராக இருந்த [[பாசுகரசேதுபதி]], தன்னுடைய அரசவையின் தலைமைப் புலவராக இரா. இராகவையங்காரை நியமித்தார். பல்லக்கு முதலிய வரிசைகளை நல்கினார். சமத்தான அறக்கொடையில் இருந்து ஆண்டுதோறும் 635 உருபாயை இரா. இராகவைங்காரின் வாழ்நாள் முழுக்க வழங்கும்படி உரிமைப் பத்திரம் ஒன்றைப் பதிவுசெய்து கொடுத்தார்.
இவர் அரசவைப்புலவராக இருந்த காலத்தில் அந்த அரசவைக்கு வருகைவந்த தமிழ்ப் புலவர்கள், வடமொழிப் புலவர்கள், இசைக்கலைஞர்கள், [[விவேகானந்தர்]] உள்ளிட்ட பல்வேறு சமய விற்பன்னர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார்; தன்னுடைய அறிவுத்திறனை வெளிப்படுத்தினார்<ref name=
== மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் ==
[[1901]] – செப்டம்பர் – 14ஆம் நாள், பாலவநத்தம் நிலக்கிழார் [[பாண்டித்துரைத் தேவர்|பாண்டித்துரைத் தேவரின்]] முயற்சியால் பாசுகர சேதுபதியின் ஆதரவோடு, [[மதுரைத் தமிழ்ச் சங்கம்]] நிறுவப்பட்டது. இச்சங்கத்திலிருந்து தமிழ்ப்பணி புரிய இரா. இராகவையங்காரை பாசுகரசேதுபதி அனுப்பி வைத்தார். அச்சங்கத்தின் நூற்பதிப்பு, ஆராய்ச்சி ஆகிய துறைகளின் தலைவராக இரா. இராகவையங்கார் பொறுப்பேற்றார். அப்பொழுது பல இடங்களுக்கும் சென்று பழஞ்சுவடிகளைத் திரட்டினார். அவற்றை மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பாண்டியன் நூலகத்தில் தொகுத்து வைத்தார்.
அச்சங்கத்தின் சார்பில் 1902 – திசம்பர் 7ஆம் நாள் செந்தமிழ் இதழ் தொடங்கப்பட்டது<ref name=
1906ஆம் ஆண்டு <ref name=
== அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ==
வரிசை 149:
<references/>
[[பகுப்பு:
[[பகுப்பு:
[[பகுப்பு:
|