வி. என். ஜானகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB |
|||
வரிசை 20:
}}
'''ஜானகி இராமச்சந்திரன்''' ([[1924]] [[செப்டம்பர் 23]] – [[1996]] [[மே 19]]) (''Janaki Ramachandran'') அல்லது வைக்கம் நாராயணி ஜானகி என்னும் '''வி. என். ஜானகி''' முன்னாள் திரைப்பட நடிகர். பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய [[ம. கோ. இராமச்சந்திரன்|எம். ஜி. இராமச்சந்திரனுக்கு]] மூன்றாவது மனைவி ஆவார்.
== பிறப்பு ==
வைக்கம் நாராயணி ஜானகி [[கேரளா|கேரள மாநிலம்]] திருவாங்கூர் தனியரசிற்கு உட்பட்ட [[வைக்கம்]] என்னும் ஊரில் வாழ்ந்த [[நாயர்]] குலத்தைச் சேர்ந்த நாணி என்னும் நாராயணம்மாவிற்கு 1924 செப்டம்பர் 23 ஆம் நாள் பிறந்தார்.
== கும்பகோணம் வாழ்க்கை ==
முன்னோர்களின் சூதாட்டம் கேளிக்கைகளால் சொத்தை இழந்து வறுமைக்கு ஆளானது ஜானகியின் குடும்பம். எனவே ஜானகி தனது 12ஆவது வயதில், [[1936]] ஆம் ஆண்டில், தன் தாயாருடன் தமிழ்நாடு|தமிழ்நாட்டில் உள்ள [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] இடம் பெயர்ந்தார்.
அங்கிருந்த சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் (Little Flower High School) சேர்ந்து பயின்றார். அங்கு அவருக்கு ஆசிரியராக இருந்தவர் கவிஞர் [[பாபநாசம் சிவன்|பாபநாசம் சிவனுக்கு]] தம்பியான இராசகோபலய்யர் ஆவார். சிறிதுகாலத்திற்குள்ளவாகவே ஜானகிக்கு அம்மாவான நாராயணியம்மாள் இந்த இராசகோபலய்யருக்கு துணைவி ஆனார். 1936 ஆம் ஆண்டில் வெளிவந்த [[மெட்ராஸ் மெயில்]] <ref name ="b">
== திரை வாழ்க்கை ==
வரிசை 38:
|வ.எண்||ஆண்டு||திரைப்படம்||வேடம்||குறிப்பு
|-
| 01||1937|| இன்பசாகரன்||நடன மாது||படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் <br> இப்படத்தின் படிகள் எரிந்து போயின.
|-
|02||1939||மன்மத விஜயம்|| நடன மாது||
வரிசை 93:
== நடனப் பள்ளியில் ==
அனந்த சயனம் திரைப்படத்தை இயக்கிய [[கே. சுப்பிரமணியம்]] நடன கலா சேவா என்னும் நாட்டியக் குழுவை அமைத்திருந்தார். ஜானகி இக்குழுவில் 1942ஆம் ஆண்டில் இணைந்தார். இக்குழுவில் கே. சுப்பிரமணியத்தின் மனைவியும் நடிகையுமான [[எஸ். டி. சுப்புலெட்சுமி]]க்கு அடுத்த நிலையில் இருந்தார். அவரோடு இணைந்து இந்தியா முழுவதும் பயணம் செய்து இவர்கள் நாட்டிய நாடகங்களை நடத்தினர். [[வள்ளி திருமணம்]] நாடகத்தில் ஜான்கி [[முருகன்|முருகனாகவும்]] சுப்புலெட்சுமி [[வள்ளி|வள்ளியாகவும்]] நடித்தனர்.
== மணவாழ்க்கை==
=== முதல் திருமணம் ===
ஜானகி திரையுலகில் நுழைந்த சில காலத்திற்குள் நடிகரும் ஒப்பனையாளருமான கண்பதிபட் என்னும் கன்னடமொழிக்காருக்கு அறிமுகம் ஆனார். அவ்வறிமுகம் காதலாக மாறி, திருமணமாக முடிந்தது இவர்களுக்கு அப்பு என்கிற சுரேந்திரன் என்னும் ஆண்குழந்தை பிறந்தது.
=== இரண்டாவது திருமணம் ===
[[படிமம்:MGR and Janaki 1.jpg|thumbnail|ம. கோ. இராவும் ஜானகியும்]]
ஜானகி '''இராஜ முக்தி''' படத்தில் கதைத் தலைவியாக நடித்தபொழுது, இரண்டாவது கதைத் தலைவனாக எம். ஜி. ஆர். என்னும் ம. கோ. இராமசந்திரன் நடித்தார். ம. கோ. இரா.வுக்கு முதலாவது மனைவியான பார்கவி என்னும் தங்கமணியின் சாயலின் ஜானகி இருந்ததால், ம. கோ. இரா.வுக்கு இவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.
== குழந்தைகள் ==
ஜானகிக்கு அப்பு என்கிற சுரேந்திரனைத் தவிர வேறு குழந்தைகள் இல்லை. எனவே தன் தம்பியாகிய மணி என்னும் நாராயணன் குழந்தைகளாகிய லதா, கீதா, சுதா. ஜானு, தீபன் ஆகிய ஐவரையும் தன் வளர்ப்புப் பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்டார்.
== அரசியல் வாழ்க்கை ==
===முதலமைச்சர்===
[[படிமம்:JanakiRamachandran.jpg|thumbnail|முதலமைச்சராக 1988 சனவரி 7 ஆம் நாள் பதவியேற்கும் ஜானகி]]
ஜானகி தன் கணவர் ம. கோ. இரா. மும்முரமாக அரசியலில் ஈடுபட்டிருந்த காலங்களில் அதன் நிழல்கூட தன்மீது படாத அளவிற்கு விலகி இருந்தார். ம. கோ. இரா. 1984 ஆம் ஆண்டில் நோய்வாய்ப்பட்ட பின்னர் அவருக்குத் துணையாக அவரோடு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார். ம. கோ. இரா. [[1987]] [[திசம்பர் 24]] ஆம் நாள் மரணமடைந்த பின்னர் ஜானகி [[1988]] [[சனவரி 7]] ஆம் நாள் ஜானகி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். ஆனால் [[தமிழ் நாடு சட்ட மன்றம்|சட்ட மன்றத்தில்]] தனது தலைமை மீதான தனது கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க இயலாததால் 1988 [[சனவரி 30]] ஆம் நாள் ஆட்சிப்பொறுப்பை இழந்தார்.
=== தேர்தலில் போட்டி ===
ம. கோ. இரா.வின் மறைவிற்குப் பின்னர் அவரைப் பொதுச்செயலாளராகக் கொண்டு இயங்கிய [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] நான்கு பிரிவுகளாகப் பிரிந்தது. இதில் ஜானகி, [[ஜெயலலிதா]] தலைமையிலான அணிகள் [[1989]] ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் போட்டி இட்டன. இதில் ஆண்டிபட்டித் தொகுதியில் ஜானகி போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். அ. இ. அ. தி. மு. க. இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டியிட்டதால் தமிழகத்தை ஆளும் வாய்ப்பை இழந்தது. எனவே அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெருமுயற்சி செய்து ஜானகி,. ஜெயலலிதா தலைமையிலான அணிகளை இணைத்தனர். ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். ஜானகி அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகினார்.
== மறைவு ==
ஜானகி அரசியலில் இருந்து விலகி ம. கோ. இரா.வின் இராமவரம் தோட்டத்தில் தன் மகனோடும் வளர்ப்புப் பிள்ளைகளோடும் வாழ்ந்தார். 1996 மே 19 ஆம் நாள் காலமானார்.
==சான்றடைவு==
<references/>
{{
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்]]
|