கொல்லி மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
clean up using AWB
வரிசை 3:
 
==பெயர்க் காரணம்==
[[படிமம்:Kolli_HillKolli Hill.jpg|250px|thumb|right|<center>கொல்லி மலை & கீழுள்ள சமவெளி</center>]]
உயிரினங்களைக் கொல்லும் சூர் வாழ்ந்ததால் இம்மலைக்குக் 'கொல்லி' என்னும் பெயர் அமைந்தது. இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு ''கொல்லி மலை'' என்ற பெயர் வந்தது. ‘கொல்’ என்னும் ஒலிக்குறிப்புச் சொல் ஓசையைக் குறிக்கும். அதன் அடிப்படையிலும் கொல்லிமலை எனப் பெயர் வந்திருக்கலாம் என்பர்.
 
[[படிமம்:Kolli_hillsKolli hills.jpg|250px|thumb|right|<center>கொல்லி மலையின் ஒரு பகுதி</center>]]
[[File:Kollihills from Belukurichi.jpg|thumb|பேளுக்குறிச்சியில் இருந்து கொல்லிமலையின் தோற்றம்]]
[[File:Kollihills from Belukurichi1.jpg|thumb|பேளுக்குறிச்சியில் இருந்து கொல்லிமலையின் தோற்றம்]]
 
==வரலாற்றுக் குறிப்புகள்==
பழந்தமிழ் நூல்களான ''[[சிலப்பதிகாரம்]]'', ''[[மணிமேகலை]]'', ''[[புறநானூறு]]'', ''[[ஐங்குறுநூறு]]'' முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் [[200|கிபி 200]]-ல், இந்தப் பகுதியை [[கடையெழு_வள்ளல்கள்கடையெழு வள்ளல்கள்|கடையெழு வள்ளல்]]களில் ஒருவனான [[ஓரி|வல்வில் ஓரி]] ஆண்டு வந்தார். ஒரே அம்பில் [[சிங்கம்]], [[கரடி]], [[மான்]] மற்றும் [[காட்டுப் பன்றி]]யைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து [[வன்பரணர்]] என்னும் புலவர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது. வல்வில் ஓரியைப் பற்றி அவர் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். [[கழைதின் யானையார்]] என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்றும் புறநானூற்றில் உள்ளது.
 
[[இராமாயணம்|இராமாயணத்தில்]] [[சுக்ரீவன்]] ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.
வரிசை 20:
 
=====பெருஞ்சேரல் இரும்பொறை=====
:பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன் கொல்லிப்பொருநன் என்று குறிப்பிடப்படுகிறான் <br />
:கொல்லிக் கூற்றத்து நீர்கூர் என்னுமிடத்தில் நடந்த போரில் இந்தப் பெருஞ்சேரல் இரும்பொறை அதியமானையும், அவனோடு சேர்ந்துகொண்டு தாக்கிய இருபெரு வேந்தரையும் வென்றான் என்று இப் பதிற்றுப்பத்தின் பதிகம் குறிப்பிடுகின்றது.
::- பதிற்றுப்பத்து 8 பாடல் 73, புலவர் அரிசில் கிழார்
 
=====பொறையன்=====
:கொல்லிமலை நாட்டு அரசன் பொறையன். <br />
::- இளங்கீரனார் – நற்றிணை 346 <br />
:வேல்படை கொண்ட பசும்பூண் பொறையன் இதன் அரசன் <br />
::- ஔவையார் – அகம் 303<br />
:பொறையன் இதன் அரசன் <br />
::– நற்றிணை 185
* சேர மன்னர்களின் கொங்குநாட்டுத் தலைநகரான கருவூர்ப் பகுதியில் சங்ககால நாணயம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் உள்ள எழுத்துக்கள் சங்ககாலத் தாமிழி (அசோகன் காலத்துப் பிராமி) என்று கொண்டு ஐராவதம் மகாதேவன் என்வர் படித்துக் காட்டியுள்ளார். [http://tamilartsacademy.com/books/tavam/chapter24.xml கொல்ஈ, புறை] என்னும் சொற்கள் அதில் உள்ளன. இவற்றை இவர் கொல்லிப்பொறையன் என்னும் பெயரோடு பொருத்திப் பார்ப்பது வலிமை மிக்க சான்றாகும்
 
=====சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை=====
:சேரமான் யானைக்கட் சேய் தாந்தரஞ்சேரல் இரும்பொறை கொல்லியோர் அடுபொருநன் என்று குறிப்பிடப்படுகிறான். <br />
::- குறுங்கோழியூர் கிழார் - புறம் 22
 
=====வானவன்=====
:வெல்போர் வானவன் இதன் அரசன் <br />
::- தாயங்கண்ணனார் – அகம் 213 <br />
:இவன் அதனைப் போரிட்டு வென்றான் <br />
::- மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் – அகம் 33
 
=====அதியமான்=====
:கொல்லிக் கூற்றத்தில் நீர்கூர் என்னும் ஊர்ப்பகுதியில் அதிகமானும் இருபெரு வேந்தரும் இணைந்து சேரனைத் தாக்கியபோது பெருஞ்சேரல் இரும்பொறை வென்றான் <br />
::– பதிற்றுப்பத்து 8ஆம் பத்து பதிகம்
 
=====ஓரி=====
:‘கொல்லி ஆண்ட வல்வில் ஓரி’ <br />
::- பெருஞ்சித்திரனார் – புறம் 158 <br />
:வல்வில் ஓரியும் கொல்லிப் பொருநன் என்று குறிப்பிடப்படுகிறான். <br />
::- வன்பரனர் புறம் 152 <br />
:வல்வில் ஓரி கொல்லிமலை அரசன் <br />
::- கபிலர் – குறுந்தொகை 100, <br />
::பரணர் - அகம் 208<br />
:புகழ்மிக்க ஓரியைக் கொன்று முள்ளூர் மன்னன் காரி கொல்லிமலை நாட்டைச் சேரலர்க்குக் கொடுத்தானாம்.<br />
::- கல்லாடனார் – அகம் 209
* [[கொல்லிப்பாவை]] பார்க்க.
வரிசை 62:
====கொல்லிமலையின் அழகும் ஒப்புமையும்====
காந்தள் போல் கூந்தல் மணம்
:கொல்லியில் பூக்கும் கார்மலர் (கார்த்திகை எனப்படும் காந்தள் பூ) போலத் தலைவியின் கூந்தல் மணந்ததாம். <br />
::- பரணர் - அகம் 208
யானை
:கொல்லிமலைப் பூக்களுக்கு இடையே பிடி(பெண்யானை) மறந்திருப்பது போல இளஞ்சேரல் இரும்பொறையின் பட்டத்தரசி மகளிர் ஆயத்தாரிடையே மறைந்திருந்தாளாம். <br />
::- பெருங்குன்றூர் கிழார் – பதிற்றுப்பத்து 81
மூங்கில்
:தலைவியின் தோள் கொல்லிமலை மூங்கில் போன்றதாம் <br />
::- தாயங்கண்ணனார் – அகம் 213, <br />
::- மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் – அகம் 33
சூர்மகள்
:சூர் மகள் விரும்பும் கொல்லிமலையின் உச்சியிலிருந்து கொட்டும் அருவியின் ஓசை போல அலர் ஊரில் பரவியது. <br />
::- ஔவையார் – அகம் 303
கொல்லிப்பாவை மடப்பத்தன்மை
:கொல்லிப்பாவை போல் தலைவி மடப்பத்தன்மை உடையவளாக விளங்கினாளாம் <br />
::- கபிலர் – குறுந்தொகை 100\882, <br />
:‘கடவுள் எழுதிய பாவை’ (கடவுள் உருவம் எழுதிய ஓவியம்) போல் தலைவி மடப்பத்தன்மை கொண்டவளாம். <br />
::- பரணர் – அகம் 22\1524,
 
வரிசை 101:
===முருகன் கோவில்===
[[அருணகிரிநாதர்|அருணகிரிநாதரின்]] [[திருப்புகழ்]] பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேடர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். [[சிவன்]], [[பார்வதி]], [[விஷ்ணு]], [[இடும்பன்]] மற்றும் [[விநாயகர்|விநாயகருக்கும்]] இங்கு ஆலயங்கள் உள்ளன.
 
 
====படகு சவாரி====
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும்
[[படிமம்:Boat_ride_kolliBoat ride kolli.jpg|thumb|right|250px|வாசலூர்பட்டி படகுத் துறை]]
 
====வியூ பாயிண்ட்====
வரி 115 ⟶ 114:
==போக்குவரத்து==
[[File:Kolli Hills Waterfalls.JPG|210px|right]]
நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு [[நாமக்கல்]], [[சேந்தமங்கலம்]], [[இராசிபுரம்]] மற்றும் [[சேலம்]] நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர். கார் & வேன்களில் சுற்றுலா செல்வோரும் மலைப்பாதையில் கவனமாக செல்வது நன்று.
 
2 அல்லது 3 கொண்டை ஊசி வளைவுகளுடன் அபாயமற்ற மாற்று மலைப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
வரி 126 ⟶ 125:
 
{{ நாமக்கல் மாவட்டம்}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டில் உள்ள மலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொல்லி_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது