திருத்தந்தை பிரான்சிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB |
சிNo edit summary |
||
வரிசை 305:
{{cquote|அர்ஜென்டீனாவில் விடுதலை அடைந்ததும் நான் அந்நாட்டை விட்டு வெளியேறினேன். பல ஆண்டுகளுக்குப் பின்னரே அருள்திரு பெர்கோலியோவை சந்தித்து, நடந்தது என்னவென்பதைக் குறித்து அவரோடு உரையாட எங்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. அதற்கிடையில் அவர் புவேனோஸ் ஐரேசின் பேராயராக நியமனம் பெற்றிருந்தார். பிறகு நாங்கள் ஒன்றாக இணைந்து கூட்டுத் திருப்பலியை பொதுமக்கள் முன் நிகழ்த்தினோம். எல்லோர் முன்னிலையிலும் ஒருவர் ஒருவரைத் தழுவிக்கொண்டோம். நடந்த காரியங்கள் குறித்து ஏற்கெனவே சமாதானம் ஏற்பட்டுவிட்டது. என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு நடந்துபோன நிகழ்ச்சி மட்டுமே.}}
திருத்தந்தை பிரான்சிசு குற்றமற்றவர் என்று சான்றுகூறுவோரில் ஒரு முக்கிய நபர் அடோல்ஃபோ பேரஸ் எஸ்கிவேல் (''Adolfo Perez Esquivel'') என்பவர். இவர் அர்ஜென்டீனாவின் இராணுவ ஆட்சியின்போது நிகழ்ந்த அட்டூழியங்களை உலகுக்கு வெளிப்படுத்தியதற்காக 1980இல் நோபல் பரிசு பெற்றவர். அவர் புவேனோஸ் ஐரேசில் "ராடியோ டெ லா ரேத்" (''Radio de la Red'') என்னும் ஒலிபரப்பு நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியது
{{cquote|பிற குருக்களுக்கு இருந்த அளவு தைரியம் அவருக்கு (பெர்கோலியோவுக்கு) இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் ஒருபோதுமே சர்வாதிகார ஆட்சியோடு ஒத்துழைத்தது கிடையாது....பெர்கோலியோ சர்வாதிகார ஆட்சிக்குத் துணைபோனது கிடையாது. அக்குற்றச்சாட்டை அவர்மீது சுமத்துவது முறையாகாது}}
|