ஏ. நேசமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
clean up using AWB
வரிசை 29:
நேசமணி விளவங்கோடு வட்டத்தை சார்ந்த பள்ளியாடி என்னும் இடத்தில் 12, சூலை 1895 ம் ஆண்டு அப்பாவு-ஞானம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்து வளர்ந்தார். தன் தாயின் ஊரான கல்குளம் வட்டத்தை சார்ந்த மாறாங்கோணம் என்னும் இடத்தில் பிறந்தார். இதனால் இவருக்கு நாயர்களின் அடக்குமுறையை நேரடியாக உணர வாய்ப்பு கிடைத்து. நேசமணி இளம் வயதிலேயே சமூக விடு தலைக்காக போராடியவர். நிருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் பி.ஏ. பட்டம் படித்து ஆசிரியர் தொழிலில் ஈடுபட்ட இவர், பின்னர் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றார்.பின்னர் நாகர்கோவில் கோர்ட்டில் 1921 ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து பணியாற்றினார். நாகர்கோவில் நீதிமன்றத்தில் உயர் சாதி வழக்கறிஞர்கள் உட்கார நாற்காலியும் கீழ்சாதி வழக்கறிஞர்களுக்கு குந்துமனையும் (Stool) இடப்பட்டிருந்த்தை, முதல் நாளன்றே காலால் உதைத்து தள்ளிவிட்டு, நார்காலியால் உட்கார்ந்து நீதிமன்றத்தில் சாதி்க் கொடுமையை ஒழித்தார். அதேப் போன்று நாகர்கோவில் Bar Association ல் மேல் சாதி வக்கீல்களுக்கும் கீழ் சாதி வக்கீல்களுக்கும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த குடிநீர் பானையை உடைத்துவிட்டு அனைத்து வக்கீல்களுக்கும் பொதுவாக ஒரேப் பானையை வைத்தார். அந்த அளவிற்கு சமுதாய சீர்திருத்தத்தில் அக்கறை எடுத்துக்கொண்டார். பொது வாழ்க்கையில் ஈடுபட்ட பின்பு நாகர்கோவில் நகர்மன்ற தலைவராகவும் இருந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாகி சட்டசபைக்கும் சென்றார்<ref>http://books.google.co.in/books?id=4JtbP3y05UgC&pg=PA146&lpg=PA146&dq=liberation+of+the+oppressed+class+a+continuous+struggle+peter&source=bl&ots=gFxOUAXW20&sig=Uu36jI2DBxxWkOucDsIH1kxOcmc&hl=en&ei=ZuzgTJXnNseycNzX0ZcM&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CBoQ6AEwAQ#v=onepage&q&f=false</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1951/VOL_1_51_LS.PDF Volume I, 1951 Indian general election, 1st Lok Sabha]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1962/Vol_I_LS_62.pdf Volume I, 1962 Indian general election, 3rd Lok Sabha]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1967/Vol_I_LS_67.pdf Volume I, 1967 Indian general election, 4th Lok Sabha]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1957/StatRep_Madras_1957.pdf 1957 Madras State Election Results, Election Commission of India]</ref>. தொடர்ந்து நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக தான் இறக்கும் வரை பணியாற்றினார்.
 
[[File:Marshal_Nesamony_newMarshal Nesamony new.png|right|thumb|250px|]]
[[File:Marshal_NesamonyMarshal Nesamony.jpg|right|thumb|250px|]]
 
==குமரி விடுதலைப் போராட்டம்==
வரிசை 45:
 
==சுப்பிரமணிப்பிள்ளை என்ற பி.எஸ்.மணியின் குமரித் தந்தை பட்டம்==
சுப்பிரமணிப்பிள்ளை என்ற பி.எஸ்.மணி. அவர் தனது வாயாலே கூறுகிறார்: “கழிந்த 30 ஆண்டுகளாக நான் உங்களை (நேசமணியை) அறிவேன். இதில் கழிந்த 17 ஆண்டுகளாக நான் உங்களுடன் சேர்ந்தும், பிரிந்தும், தூர நின்றும் உங்களை கவனித்திருக்கிறேன். குமரி மாவட்ட மக்களில் பெரும்பான்மையோர் உங்களிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருப்பதை காணுகிறேன்- நீங்களும் இனி கட்சிசார்பற்ற உயரிய நிலையில் குமரி மக்களின் தந்தையாக அறிவுரை கொடுப்பவராக இருக்க ணே;டுமென்று என் எதிர்பார்ப்பு”. <ref>பி.எஸ். மணி 12.06.1964-ல் திரு. நேசமணிக்கு எழுதிய கடிதத்திலிருந்து</ref> திரு. பி.எஸ் மணி நேசமணிக்கு “குமரித் தந்தை” என்ற சிறப்பை அளித்து அளித்தார்
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஏ._நேசமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது