இந்திய தேசிய காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி The file Image:INC-flag.svg has been replaced by Image:Flag_of_the_Indian_National_Congress.svg by administrator commons:User:Steinsplitter: ''File renamed: File renaming criterion #2: Change... |
clean up using AWB |
||
வரிசை 1:
{{Infobox_Indian_Political_Party |
party_name = இந்திய தேசிய காங்கிரஸ் |
party_logo = [[படிமம்:
leader = [[சோனியா காந்தி]] |
foundation = [[1885]] |
வரிசை 11:
}}
''' இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress)''' ('''காங்கிரஸ் கட்சி''' அல்லது '''காங்கிரஸ் (I)''' என்றும் அழைக்கப்படுகிறது, சுருக்கமாக '''INC''') [[இந்தியா]]வின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தை]] முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 [[மில்லியன்]] இந்திய மக்களும், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர். 1947ல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. [[பதினைந்தாவது மக்களவை|15வது இந்திய நாடாளுமன்றத்தில்]] 206 உறுப்பினர்களை பெற்றிருக்கும் இக்கட்சி, அதிக உறுப்பினர்களை கொண்டிருக்கும் தனிப்பெரும் கட்சியாகத் திகழ்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதன்மை உறுப்பினராகவும் இக்கட்சி விளங்குகிறது.
== வரலாறு ==
வரிசை 17:
== விடுதலைக்கு முன்பான கால பகுதி ==
1885 ம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது இதன் குறிக்கோள் கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கி தருவது தான். [[உமேஸ் சந்திர பானர்ஜி]], [[சுரேந்திரநாத் பானர்ஜி]], [[ஆலன் ஆக்டவியன் குமே]] (Allan Octavian Hume), [[வில்லியம் வெட்டர்பர்ன்]] (William Wedderburn,), [[தாதாபாய் நௌரோஜி]], [[தின்சா வாச்சா]] (Dinshaw Wacha) ஆகியோரால் தொடங்கப்பட்ட இதன் முதல் தலைவராக பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஸ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். முதல் கூட்டம் [[புனே]]யில் நடப்பதாக இருந்தது, ஆனால் [[பிளேக்]] என்னும் [[கொள்ளை நோய்]] புனேயில் இருந்ததால் அக்கூட்டம் [[பம்பாய்]]க்கு மாற்றப்பட்டது.
பிரித்தானிய அரசின் எதிர்ப்பு காரணமாக காங்கிரஸின் கொள்கை மாற்றம் கண்டது, இக்கட்சி விடுதலைப்போரில் தீவிரம் காட்ட தொடங்கியது. 1907ல் காங்கிரஸில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரபோக்குடையோர் [[பால கங்காதர திலகர்]] தலைமையிலும், மிதபோக்குடையோர் [[கோபால கிருஸ்ண கோகலே]] தலைமையிலும் இயங்கினர். பாலகங்காதர திலகரின் செல்வாக்கால் காங்கிரஸ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக உருவாகியது, இலட்சக்கணக்கான மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக திரட்டியது.
வரிசை 35:
== சின்னம் ==
'''பூட்டிய இரட்டை மாடுகள்''' இதன் சின்னமாக 1969 பிளவுக்கு முன் வரை இருந்தது. பெரும்பான்மை அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்திரா பிரிவுக்கு இரட்டை மாடு சின்னத்தை ஒதுக்கியது. இதை எதிர்த்து [[ஸ்தாபன காங்கிரசு]] (சிண்டிகேட் என இதை அழைப்பார்கள்) பிரிவு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இச்சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் இருக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
<ref>[http://books.google.com/books?id=5xj0g8euumQC&pg=PA45&dq=congress+cow+and+calf&hl=en&ei=b2IaTMHrCoWonQfup9G-Cg&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CDwQ6AEwBDgK#v=onepage&q=congress%20cow%20and%20calf&f=false 320 Million Judges By G.G. Mirchandani பக்கம் 45]</ref>,
இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு '''பசுவும் கன்றும்''' சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு '''ராட்டை சுற்றும் பெண்''' சின்னமும் கிடைத்தன. நெருக்கடி நிலைக்கு பின் நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரசு பெரும் தோல்வி கண்டதை அடுத்து 1978ல் இரண்டாக பிளவுபட்டது. இந்திரா தலைமையிலான் பிரிவை 70 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுவரன் சிங் தலைமையிலான் பிரிவை 76 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தார்கள். சுவரண் சிங் தலைமையிலான குழுவுக்கு '''பசுவும் கன்றும்''' சின்னம் கிடைத்தது, இது காங்கிரசு (S) என அழைக்கப்பட்டது. இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு '''கை''' சின்னம் ஒதுக்கப்பட்டது.2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் தேர்தலில் வென்றனர்.
== காங்கிரஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர்கள் ==
|