மனித மூளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
[[படிமம்:Skull and brain normal human ta.svg|thumb|மனித மூளை, மண்டையோட்டின் வரைபடம்.]]
'''மனித மூளை''' மனித [[நரம்புத் தொகுதி|நரம்பு மண்டலத்தின்]] தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், [[இச்சையின்றிய செயற்பாடு|இச்சை இன்றிய செயற்பாடுகளான]] [[மூச்சுவிடுதல்]], [[சமிபாடு]] (செரிமானம்), [[இதயத்துடிப்பு]], [[கொட்டாவி]]<ref>V.S. Ramachandran, {{cite web | url =http://www.edge.org/3rd_culture/ramachandran/ramachandran_p1.html | title = Mirror Neurons and imitation learning as the driving force behind "the great leap forward" in human evolution | accessdate = 2006-11-16 }}</ref> போன்ற செயற்பாடுகளையும்,<ref name='nih'>{{cite web|url=http://science.education.nih.gov/supplements/nih4/self/guide/info-brain.htm |title=Information about the Brain (மூளையைப் பற்றிய தகவல்கள்) |accessdate=2009-07-02 |publisher=National Institutes of Health }}</ref> விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.
 
மனிதனின் [[மூளை]], மற்ற [[பாலூட்டி]]களின் மூளையின் பொது வடிவத்தினை பலவாறு ஒத்திருப்பினும், அவற்றின் மூளைகளைக் காட்டிலும் உடல் எடை-மூளை அளவு விகிதத்தில் குறைந்தது ஐந்து மடங்கு பெரியது. இதற்குக் காரணம், மனித மூளையின் நன்கு விரிவடைந்த [[பெருமூளைப் புறணி]]ப் (''cerebral cortex'') பகுதியாகும். [[நரம்பிழையம்|நரம்பிழையத்தால்]] (''neural tissue'') உருவாகி, பல தொடர் மடிப்புகளை கொண்ட இப்பகுதி மனிதனின் [[முன்மூளை]]யில் அமைந்துள்ளது. குறிப்பாக, பிற [[விலங்கு]]களில் இருந்து [[மனிதர்|மனிதனைப்]] பிரித்துக்காட்டும் சிறப்பு செயல்பாடுகளான, தற்கட்டுப்பாடு, திட்டமிடல், [[பகுத்தறிவு|பகுத்தறிதல்]], [[கல்வி|கற்றறிதல்]] ஆகியவற்றிக்குக் காரணமான [[மூளையின் முன் மடல்]]கள் மனித மூளையில் நன்கு விரிவடைந்து காணப்படுகின்றன. மேலும், [[கண்]] பார்வைக்குக் காரணமான பகுதியும் மனித மூளையில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
வரிசை 6:
மூளையின் [[படிவளர்ச்சி]]யில், மிக முந்திய சிறிய பாலுட்டியான [[மூஞ்சூறு|மூஞ்சூறில்]] இருந்து [[மனிதக் குரங்கு]] வழியாக உயர்நிலை விலங்கினங்களில் ஒன்றான மனிதன் வரை மூளை-உடல் அளவு விகிதம் படிப்படியாக உயர்ந்துள்ளது; இதை ''மூளைப் பருமனாக்கம்'' (''encephalisation'') என்று அழைக்கின்றனர். மனித மூளையில் உள்ள சுமார் 50–100 [[பில்லியன்]] (5000-10000 கோடி) [[நரம்புக் கலங்கள்|நரம்பணு]]க்களில் (10<sup>11</sup>), சுமார் 10 பில்லியன் நரம்பணுக்கள் (10<sup>10</sup>) [[புறணிக் கோபுர உயிரணுக்கள்]] (cortical pyramidal cells) ஆகும். இவ்வுயிரணுக்கள் தமக்குள் சமிக்கைகளை (குறிகைகளை) அனுப்பி கொள்ள ஏறத்தாழ 100 [[டிரிலியன்]] (10<sup>14</sup>) நரம்பிணைப்புகளைப் பயன்படுத்துகின்றன.
 
மனித மூளை, தடிப்பான [[மண்டையோடு|மண்டையோட்டின்]] [[எலும்பு]]களாலும், [[மூளை முதுகுத் தண்டுநீர்மம்]] (''cerebrospinal fluid'') என்னும் [[நீர்மம்|நீர்மத்தாலும்]], அதிர்வுகளிலிருந்தும், வெளிச் சேதங்களிலிருந்தும், [[குருதி-மூளை வேலி]] (''blood-brain barrier'') என்னும் அமைப்பின் மூலம் இரத்த மண்டத்திலிருந்தும், [[இரத்தம்]] மூலம் பரவும் [[நோய்]]களில் இருந்தும் தீங்குறாமல் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது. ஆனாலும், அதன் மென்மையான தன்மையால் பல வகை நோய்களாலும், சேதங்களாலும் தீங்குகள் ஏற்படுவது தவிர்க்க இயலாதது.
 
பொதுவாக மூளையில் ஏற்படும் சேதங்கள், [[உள் தலை காயங்கள்]] (''closed head injuries'') எனப்படும் வகையை சார்ந்த, தலையில் ஏற்படும் காயம், மூளையில் இரத்த தடை ஏற்படுவதால் ஏற்படும் [[பக்கவாதம்]] (''stroke''), [[நரம்பு நச்சு]]கள் (''neurotoxin'') எனப்படும் [[வேதியியல்]] [[நச்சுப்பொருள்|நச்சுப் பொருட்களால்]] பாதிக்கப்படுதல் ஆகியன குறிப்பிடத் தக்கவை. மூளை [[தொற்றுநோய்]]களால் பாதிக்கப்படுவது மிக அரிதானது. ஏனெனில், இரத்த மண்டலத்தில் கலந்து [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களைத்]] தாக்கக் கூடிய பெரும்பாலான [[பாக்டீரியா]] கிருமிகளை, மனித மூளையில் [[குருதி-மூளை வேலி]] என்ற அமைப்பு வடிகட்டி விடுவதன் மூலம், மூளை தொற்றுநோய் [[நுண்ணுயிரி]]களில் இருந்து பெரும்பாலும் பாதுகாக்கப் படுகிறது. இருப்பினும், மூளை பாக்டடீரியாவால் அரிதாக தாக்கப்படும் போது, [[பிறஒருளெதிரி]] (''antibodies'') மூலம் சிகிச்சை அளிப்பது மிக கடினமானதாகிறது. ஏனெனில் இதே [[குருதி-மூளை வேலி]] அமைப்பு நோய் எதிர்ப்பு மருந்துகளையும் தடுத்து நிறுத்தி விடுவதே காரணம். [[தீநுண்மம்]] (வைரசு) எளிதாக குருதி-மூளை வேலியை தாண்ட வல்லவை. இவை இரத்தத்தில் உள்ள [[வெண்குருதியணு]]க்களுடன் சேர்ந்து தாண்டுகின்றன. இவை தவிர பொதுவாகக் காணப்படும் பல [[மரபியல்]] நோய்களும் மூளையைத் தாக்க வல்லவை. அவற்றுள், [[நடுக்குவாதம்]] (பார்கின்சன் நோய்), உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே நரம்பு மண்டலத்தை தாக்கும் [[மல்டிபிள் சுகுலோரோசிஸ்]] (''multiple sclerosis'') ஆகியவை முக்கியமானவை. [[உளவியல்]] நோய்களான [[மனத்தளர்ச்சி|உளச்சோர்வு]], [[தாழ்வு மனப்பான்மை]], [[மந்த அறிவு]] ஆகியவையும் மூளையில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றுகின்றன.
வரிசை 23:
2. [[சுவர் மடல்]] (parietal lobe) <br />
3. [[பக்க மடல்]] (temporal lobe)<br />
4.[[பிடரி மடல்]] (occipital lobe)<br />]]
]]
[[படிமம்:Gray188 skull left lateral index.png|350 px|thumb|right| மனித மண்டையோட்டின் எலும்புகள்.]]
பெருமூளைப் புறணி தோராயமாக ஈடான வலது-இடது அரைக் கோளங்களாக பிரிக்கப்படுகிறது.[[உடற்கூறு வல்லுநர்]]கள் ஒவ்வொரு அரைக் கோளத்தையும் நான்கு மடல்களாக பிரிக்கின்றனர். அவையாவன, [[முன் மடல்]] (''frontal lobe''), [[சுவர் மடல்]] (''parietal lobe''), [[பக்க மடல்]] (''temporal lobe''), மற்றும் [[பிடரி மடல்]] (''occipital lobe''). இப்பிரிவுகளின் பெயர்கள் அப்பிரிவுகளின் அருகில் இருக்கும் மண்டையோட்டு எலும்புகளின் பெயருக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வரி 83 ⟶ 82:
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
* <cite id="refAndrews">{{cite book
வரி 202 ⟶ 201:
 
{{Link FA|uk}}
 
[[ar:دماغ بشري]]
[[bg:Човешки мозък]]
"https://ta.wikipedia.org/wiki/மனித_மூளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது