பத்துப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
 
'''பத்துப்பாட்டு''' என்பது [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்கள்]] என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, [[எட்டுத்தொகை]] இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் [[திருமுருகாற்றுப்படை]], [[பொருநராற்றுப்படை]], [[சிறுபாணாற்றுப்படை]], [[பெரும்பாணாற்றுப்படை]], [[முல்லைப்பாட்டு]], [[மதுரைக் காஞ்சி]], [[நெடுநல்வாடை]], [[குறிஞ்சிப் பாட்டு]], [[பட்டினப் பாலை]], [[மலைபடுகடாம்]] ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே '''பத்துப்பாட்டு''' என வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. பத்துப்பாட்டு எனச் சேர்த்துக் குறிப்பிடும் வழக்கமும் பிற்காலத்தில் எழுந்ததென்பதே பலரது கருத்து. இந்த அரிய தொகுப்புக்கு [[நச்சினார்க்கினியர்]] உரை எழுதியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/பத்துப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது