பதிற்றுப்பத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 1:
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
[[File:Book Extract Pathirrup pathu.gif|thumb|150px|left]]
'''பதிற்றுப்பத்து''' <ref>பத்து + பத்து = பதிற்றுப்பத்து</ref> [[எட்டுத்தொகை]] நூல்களுள் ஒன்றாகும். இது [[சேரர்|சேர மன்னர்கள்]] பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்கள் மூவரும் அந்த 8 பேர்.
வரிசை 11:
== பதிற்றுப்பத்து பதிகங்கள் ==
 
பதிற்றுப்பத்தின் பதிகங்கள் காலத்தால் பிற்பட்டன. இவை ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் நூலின் காலத்துக்குப் பிற்பட்டனவாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றன. இந்நூலின் 10 பதிகங்களில் எட்டு பதிகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இப்பதிகங்களுக்கு கட்டமைப்புச் சிறப்பு உண்டு. பதிகத்தின் முதற்பகுதி கவிதையாகவும் இரண்டாம் பகுதி உரைநடையாகவும் (colophon) உள்ளன. கவிதைப் பகுதி நூலின் பாக்களைப் போன்று ஆசிரிய நடையில் உள்ளது. இந்த பதிகங்களின் முதற்பகுதி சீர்மை மிக்க கவிதைகளாக உள்ளதால் இவற்றை எழுதி நூலைப் பதிப்பித்தவர் சிறந்த கவிஞராக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது.
 
இப்பதிகங்கள் சோழமன்னர்களின் கல்வெட்டுகளிலும் செப்புப்பட்டையங்களிலும் முதலில் காணப்படும் மெய்கீர்த்திகளை ஒத்துள்ளன.முதன் முதலாக கி.பி.989ல் கல்வெட்டு அமைத்த சோழ மன்னன் முதலாம் இராசராசசோழன் என்று டி.வி சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். <ref> பதிற்றுப்பத்து மூலமும் விளக்க உரையும், ஔவை சு. துரைசாமிபிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை -600 018, 1950 (பதிற்றுப்பத்தும் பதிகங்களும், டி.வி. சதாசிவ பண்டாரத்தார்)மேற்கோள்,</ref> பதிற்றுப்பத்துப் பதிகங்கள் இதற்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவைகள் கல்வெட்டு மெய்கீர்த்திகளுக்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் அடிக்குறிப்பில் கண்ட கட்டுரையில் பண்டாரத்தார் அவர்கள் குறிப்பிடுகிறார்.
 
பதிற்றுப்பத்துப் பதிகங்களை கூர்ந்து நோக்கினால் சேர நாட்டை கடைச்சங்க காலத்தில் உதியஞ்சேரலாதன், அந்துவன் சேரலிரும்பொறை ஆகிய இரு சேர மரபினர் இரு இடங்களில் இருந்து ஆட்சி செய்தனர் என்பது தெளிவாகிறது. இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியன் சேரலின் மகன் நெடுஞ்சேரலாதன் என்பதும், மூன்றாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ்சேரலின் இரண்டாவது மகன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பதும், நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது பத்துக்களின் பாட்டுடைத்தலைவர்களான களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் ஆகிய மூவரும் உதியஞ்சேரலின் பெயரர்கள் என்பதுவும் தெளிவாகின்றன. காணாமல் போன முதல் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ் சேரலாக இருக்கலாம் என்று ஊகிககவும் முடிகிறது. ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் அந்துவன் சேரலிரும்பொறையின் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன், எட்டாம் பத்தின் தலவன் செல்வக்கடுங்கோவின் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, ஒன்பதாம் பத்தின் தலைவன் பெருஞ்சேரலிரும்பொறையின் மகனான இளஞ்சேரல் இரும்பொறை என்பன புலனாகின்றன. காணாமல் போன பத்தாம் பத்தின் தலைவன் யானைகட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை மீது பாடப்பட்டிருக்கலாம் என்றும் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.
 
பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் [[பதிகம்]] என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார். 10 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளனவும், அவர் அறிந்தனவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. 10, 10 பாடல்களாகத் தொகுக்கப்பட்ட முறைமை இந்த நூலிலும், [[ஐங்குறுநூறு]] நூலிலும் காணப்படுகிறது. கீழ்க்கணக்கு நூல்களில் [[திருக்குறள்]], [[முதுமொழிக்காஞ்சி]], [[ஐந்திணை ஐம்பது]] போன்றவற்றிலும் காணப்படுகின்றன. அவை தொகுப்பில் வேறுபடும் பாங்கினை அந்தந்த நூல்களில் காணலாம். பதிற்றுப்பத்து நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு, ஐங்குறுநூறு நூலிலும், திருக்குறள் நூலிலும் 10 பாடல்களுக்கு ஒரு தலைப்பு என்று அமைக்கப்பட்டுள்ளது.
வரிசை 86:
=== இரண்டாம் பத்து ===
* இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதனை குமட்டூர் கண்ணனார் பாடியது
** இமையத்தில் வில் பொறித்தான். இச்செய்தியை பத்துப்பாட்டு நூல்களுல் மூன்றவதான சிறுபாணாற்றுப்படையில் அதன் ஆசிரியர் அடிக்குறிப்பில் கண்டவாறு <ref> வடபுல விமயத்து வாங்கு விற் பொறித்த/ வெறுவுறழ் திணிதோ ளியரேர்க் குட்டுவன் சிறுபாணாற்றுப்படை 46-47 </ref> புகழ்ந்து கூறுகிறார்.
** ஆரியரை வணக்கினான்
** யவனரை அரண்மனைத் தொழிலாளியாக்கிக் கட்டுப்படுத்தினான்
வரிசை 120:
** கைக்குழந்தையைப் போல் தன் நாட்டைப் பேணிவந்தான்.
=== ஏழாம் பத்து ===
[[கல்வெட்டு - புகழூர் தாமிழி (பிராமி)]]<br /><br />
 
* செல்வக் கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடியது
** பல போர்களில் வென்றான்
வரி 146 ⟶ 147:
 
==உரையாசிரியர்கள்==
* பதிற்றுப்பத்துக்கு பழைய உரை ஒன்று உண்டு. இந்த உரையாசிரியர் யார் என்பதை அறிய இயலவில்லை. இவ்வுரையாசிரியர் [[நேமிநாதம்]] இயற்றிய குணவீர பாண்டியருக்கு காலத்தால் பிற்பட்டவர் என்பது இவ்வுரையில் காணப்படும் குறிப்பிலிருந்து தெரிகிறது. இந்த பழையவுரை குறிப்புரைக்கும் பொழிப்புரைக்கும் அளவில் இடைப்பட்டதாக கருதப்படுகிறது. இவ்வுரை பாடல்களின் தலைப்புப் பொருத்தம் குறித்து பேசுகின்றது. முக்கியமான இலக்கணக் குறிப்புகளும் இதில் காணப்படுகின்றன். <ref>உ.வே சாமிநாதையர் பழைய உரையுடன் தனது ஆரய்ச்சிக்குறிப்புகளையும் சேர்த்து 1904 ல் ஒரு உரை நூலை வெளியிட்டார்.</ref>
* ஔவை துரைசாமிப்பிள்ளை உரை<ref>1950 ல் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் ஔவை சு துரைசாமிப்பிள்ளை உரையுடன் இந்நூலை வெளியிட்டது.</ref>
* யாழ்ப்பாணம் அருளம்பலவாணர் உரை <ref>1960ல் யாழ்ப்பானத்தில் சு. அருளம்பலவாணரின் பழைய உரையுடன் உள்ள இந்நூலை அ. சிவானந்தநாதன் என்பார் வெளியிட்டார்.</ref>
"https://ta.wikipedia.org/wiki/பதிற்றுப்பத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது