கீற்று முடைதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
[[படிமம்:Sri Lankan Tamil refugees camp11.jpg|thumb|250px|வலது|இலங்கையில் பெண்கள் கீற்று முடையும் ஒரு காட்சி]]
'''[[கீற்று முடைதல்]]''' அல்லது '''கிடுகு முடைதல்''' என்பது [[இந்தியா]], [[இலங்கை]] போன்ற நாடுகளில் குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்படும் ஒரு [[கைத்தொழில்]]ஆகும். தமிழர்கள் தாங்கள் கொண்டாடும் அனைத்து விழாக்களிலும் முடைந்த கீற்றுகளைப் ([[கிடுகு]]) பயன்படுத்தியே பந்தல், மேடைகள், கொட்டகைகள், வீடின் கூரைகள் போன்றவற்றை அமைப்பார்கள். பண்டைகாலத்தில் விழா அலங்காரங்கள் அனைத்தும் பல மரங்களின் [[இலை]]கள், [[பூ]]க்கள், காய்கள் ஆகியவற்றை வைத்தே வடிவமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் கீற்று முடையும் தொழில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
 
== வரலாறு ==
வரிசை 7:
== மூலப்பொருள் ==
 
[[தென்னை]] ஓலை, பன ஓலை போன்றவை இந்த தொழிலின் மூலப்பொருட்கள் ஆகும். தென்னை ஓலைகளில் பட்டை பட்டையான பல கீற்றுகள் (இலை) இருபுறமும் இருக்கும். இவ்வகையான கீற்றுகள் இரண்டு நீளப் பட்டைகளை ஒரு குச்சியால் இணைக்கப் பட்டது போன்று இருக்கும். கீற்றுகள் முதலில் அகலமானதாகவும் கடைசியில் ஊசி போன்று சுருங்கியதாகவும் இருக்கும். ஒவ்வொரு கீற்றும் ஒன்று முதல் மூன்று [[முழம்]] வரை நீண்டு இருக்கும். ஒரு ஓலை மட்டையோ 10-12 [[முழம்]] நீளம் கொண்டதாகும்.
 
சிலர் இந்த தொழிலில் சிறியக் [[கத்தி]]களையும் பயன்படுத்துவர். இந்த கத்திகள் [[மட்டை]] பின்னும் பொழுது சில நுனிகளை வெட்ட அல்லது நறுக்க பயன்படுத்துவர்.
வரிசை 22:
 
== கீற்றுமுடையும் முறை ==
கீற்று பின்னும் பொழுது, பச்சை மட்டையானாலும், காய்ந்ததானாலும் ஒரே வகையில் தான் பின்னுவார்கள். பின்னுதலை மட்டையின் தடித்த பகுதியில் இருந்து தொடங்க வேண்டும். அதில் முதல் இரண்டு கீற்றை விடுத்து மூன்றாம் கீற்றை கால் [[விரல்]] தூரத்தில் தடித்த மட்டை பகுதியை (அடிமட்டை) நோக்கி கீற்று ஈரை ஒடித்து மடக்க வேண்டும். அவ்வாறு ஒடிக்கையில் கீற்றுகள் கிழிந்து விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். பின் அதனை இரண்டாம் கீற்றின் மேல் பகுதியிலும், முதல் கீற்றின் கீழ் பகுதியிலும் செல்லும் மாறு 25-30 கோண அளவில் (மட்டையில் இருந்து ) பின்ன வேண்டும். அடுத்து நான்காம் கீற்றை விடுத்து ஐந்தாம் கீற்றை, முன்னர் மூன்றாம் கீற்றை பின்னியது போல், ஒரு கீற்றின் மேற் புறமும், மறு கீற்றின் கீழ் புறமும் செல்லும் மாறு பின்ன வேண்டும். அனைத்து கீற்றுகளும் இறுக்கமாக பின்னி, கடைசியில் நான்கு புறமும் கொசுறு போன்று உள்ளதை முடுச்சு போட்டு பின்னிய ஓலையை செவ்வக வடிவில் அமைக்க வேண்டும். ஆனால் தோரண கீற்றை முற்றிலும் வேறு வகையாக பின்னுவார்கள்.
 
== பயன்கள் ==
வரிசை 57:
நிகழ்வாகும்.<ref name="கீற்று">{{cite web | url=http://www.tamilvu.org/courses/diploma/a081/a0814/html/a0814113.htm | title=வாழ்க்கை வட்டச் சடங்குகள் | publisher= தமிழ் இணையப் பல்கலைக்கழகம் | accessdate=மே 04, 2013}}</ref>
திருமணத்திற்கான தொடக்க நிலைச் சடங்காக பச்சைக் கீற்றுகளாலான திருமணப்பந்தல் அமைப்பது தமிழர்களிடம் இன்றும் வழக்கிலுள்ளது. இறந்த பின்னர் பச்சை ஓலைகளால் 'பாடை கட்டுதல்' என்ற வழக்கமும் சில தமிழ் இனக்குழுமத்தாரிடம் காணப்படுகிறது.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கீற்று_முடைதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது