தருமபுரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சுருக்கம்
வரிசை 23:
|இணையதளம்=www.municipality.tn.gov.in/Dharmapuri}}
 
'''தர்மபுரி''' ([[ஆங்கிலம்]]: Dharmapuri)[[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள ஒரு [[நகராட்சி]] ஆகும். இதுவே [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி மாவட்டத்தின்]] தலைநகரமும் ஆகும். இது பழங்காலத்தில் '''தகடூர்''' என அழைக்கப்பட்டது. இந்நகரை தலைநகராக கொண்டு சங்க கால மன்னன் [[அதியமான் நெடுமான் அஞ்சி]] ஆட்சி புரிந்தார்.தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் தர்மபுரி, கோயில்களுக்கும், ஆலயங்களுக்கும் சிறப்புப் பெற்ற ஸ்தலமாகும். கர்நாடக மாநில எல்லைக்கு அருகில் இருக்கும் இந்த நகர், இயற்கை எழில் கொஞ்சும் புண்ணிய இடமாக விளங்குகிறது. அதே நேரத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையிலும் அமைந்திருக்கிறது.சென்னை மற்றும் பெங்களூருக்கு நடுவில் தர்மபுரி அமைந்திருப்பதால் இந்த நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள் தர்மபுரிக்கு அடிக்கடி வருகை தருகின்றனர்.தர்மபுரியைச் சுற்றி மிகப் பிரபலமான இந்து சமய கோயில்கள் உள்ளன. முக்கியமாக கோட்டை கோவில் சென்றாய பெருமாள் கோயில் மற்றும் இங்கிருக்கும் தீர்த்தமலையில் அமைந்திருக்கும் திரு தீர்த்தகிரீஸ்ரர் கோயில் போன்ற இந்து சமய திருத்தலங்கள் பக்தர்களைக் கவரும் வகையில் உள்ளன.
 
1964 ஏப்ரல் 1ம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1971 ஆகஸ்ட் 5ம் தேதி இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987 ஆகஸ்ட் 31 ம் தேதி முதல் நிலை நகராட்சியாகவும் உயர்த்தப்பட்டது. டிசம்பர் -02, 2008 லிருந்து தேர்வு நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. [[ஒகேனக்கல் அருவி]] இங்கிருந்து 46 கிமீ தொலைவில் உள்ளது. [[சேலம்|சேலத்திலிருந்து]] [[பெங்களூரு|பெங்களூருக்கு]] செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7 இந்நகரின் வழியாக செல்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/தருமபுரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது