உருகுணை இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
== உருகுணை இராச்சியத்தின் அரசியல் பின்னணி ==
கி.மு. நாலாம் நூற்றாண்டு முதல் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை உருகுணை தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது.<ref>சாகுசுந்தர், தாதுவம்சம்</ref><ref name="மயிலையார்" /> இந்நிலையில் வட இலங்கையில் உள்ள அநுராதபுரத்தில் தேவநாம்பிய திச்சன் ஆண்டுவந்தான். தேவநம்பிய தீசனின் பின் அவரது சகோதரனான மகாநாகனே அனுராதபுரத்தின் ஆட்சியாளனாக வரவேன்டும். ஆனாலும் அரச பட்டத்து இராணி தன் மகனுக்கு ஆட்சியை வழங்க எண்ணினாள். மகாநாகனைக் கொல்ல பல சூழ்ச்சிகள் செய்தாள். ஒருமுறை ஒரு மாம்பழத்தில் விசத்தைக் கலந்து அதனை மாம்பழக் கூடையில் வைத்து மகாநாகனுக்கு அனுப்பினாள். இதனை அரசியின் மகன் உண்டு மரணமடைந்தான். இந்தச்சம்பவத்தால் பயந்த மகாநாகன் உருகுணைக்கு தப்பி வந்து அங்கிருந்த தமிழ் அரசர்களிடம் தஞ்சமடைந்தான். பின்னர் யாட்டால என்ற இடத்தில் அவனுக்கு என்னொரு மகன் பிறந்தான். அவன் யாட்டால தீசன் என அழைக்கப்பட்டான். மகாநாகன் தன் மகனான அட்டாலய திச்சனை உருகுணை இராச்சியத்துக்கு அரசனாக்க எண்ணி தஞ்சம் அளித்த தமிழ் அரசர்களையே கொன்று ஆட்சியைப் பிடித்தான்.<ref name="மயிலையார்" /> இவ்வாறு வரலாற்றின் படி இரண்டு நூற்றாண்டுகள் தமிழரிடம் இருந்த உருகுணை இராச்சியம் சிங்களவரிடையே சென்றது.
 
== புகலிடமான உருகுணை ==
[[எல்லாளன்]], [[பஞ்ச பாண்டியர் (அநூராதபுரம்)]], [[இராசராட்டிரப் பாண்டியர்]], [[பல்லவர்]], முதலாம் பாண்டியப் பேரரசை சேர்ந்த பாண்டியர்கள், சோழப் பேரரசர்கள், இரண்டாம் பாண்டியப் பேரரசை சேர்ந்த பாண்டியர்கள் போன்ற தமிழகத்தை சேர்ந்த மன்னர் குலத்தவர் இலங்கையின் மீது படை எடுத்து வட இலங்கையின் அநுராதபுர ஆட்சியைக் கைப்பற்றிய போதெல்லாம் சிங்களவருக்கு உருகுணையே ஒளிந்து கொண்டு ஆட்சி நடத்துவதற்கு புகழிடமாய் இருந்தது. பதினாறாம் நூற்றாண்டில் உருகுணையின் சில பகுதிகள் கண்டி இராச்சியத்தில் இணைந்தன.<ref>http://encyclopedia2.thefreedictionary.com/Ruhuna</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/உருகுணை_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது