ஆ. நா. சிவராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஏ. என். சிவராமன், ஆ. நா. சிவராமன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: தமிழ் முதல் எழுத்துகள்
சி திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:A.N.Sivaraman.jpg|right|thumb|250px|ஏ. என். சிவராமன்]]
'''ஆம்பூர் நாணுவையர் சிவராமன்''' என்ற '''ஏ. என். சிவராமன்''' ([[மார்ச் 1]], [[1904]] - [[மார்ச் 1]], [[2001]]) [[தமிழ்நாடு|தமிழகத்தை]]ச் சேர்ந்த பத்திரிகையாளரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். [[தினமணி]] பத்திரிகையின் ஆசிரியராக 54 ஆண்டுகள் பணியாற்றியவர்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
சிவராமன் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்துக்காரர். [[நெல்லை மாவட்டம்]] [[அம்பாசமுத்திரம்|அம்பாசமுத்திரத்துக்கு]] அருகில் உள்ள [[ஆம்பூர் (நெல்லை மாவட்டம்)|ஆம்பூர்]] இவரது சொந்த ஊர். இவர் ஆரம்பக் கல்வியை எர்ணாகுளத்தில் பயின்றார். பின்னர் தம் சொந்த ஊரான ஆம்பூரில் குடிபெயர்ந்து, உயர்கல்வியை அம்பாசமுத்திரம் தீர்த்தபதி பள்ளியில் பயின்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் பயின்றபோது, அப்போது [[மகாத்மா காந்தி]] சிவில் ஒத்துழையாமை இயக்கத்தில் (1921) கலந்து கொள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். மகாத்மாவின் அழைப்பை ஏற்று விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். அதனால் அவருக்கு பதினெட்டு மாத சிறை தண்டனை கிடைத்தது. அதன் காரணத்தால் அவருடைய கல்லூரி படிப்பு தடைப்பட்டது.
 
சிறைத் தண்டனைக்குப் பின் சிவராமன் முன்னணி தமிழ் பத்திரிக்கையாளரான [[டி. எஸ். சொக்கலிங்கம்|டி. எஸ். சொக்கலிங்கத்தின்]] தலைமையில் 'காந்தி' பத்திரிகையில் சேர்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் [[ராஜாஜி]]யின் வேதாரண்ய உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்பதற்காக பத்திரிக்கை வேலையை கைவிட்டார். மீண்டும் சிறை சென்ற சிவராமன் இருபது மாதங்களில் விடுதலையானார். விடுதலையான சிவராமன் 'காந்தி ' பத்திரிக்கையில் மறுபடியும் பணியில் சேர்ந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆ._நா._சிவராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது