|}[[படிமம்:Emblem of the Papacy.svg|200px|thumb|right|<center>திருத்தந்தையின் ஆட்சிச் சின்னம்</center>]]
'''திருத்தந்தை''', '''பாப்பிறை''', '''பாப்பரசர்''' அல்லது '''போப்பாண்டவர்''' (''Pope'') என்பது [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|உரோமன் கத்தோலிக்க திருச்சபையின்]]யின் தலைவரைக் குறிக்கும் பெயர் ஆகும். கிரேக்கத்தில் πάππας (Pappas) என்றும் இலத்தீனில் Papa என்றும் வழங்கும் சொல் "தந்தை" என்று பொருள்படும். இவர் உரோமையின் ஆயர், உரோமைத் தலைமைக்குரு, [[புனித பேதுரு]]வின் வழிவந்தவர் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். [[இயேசு கிறித்துவின்கிறித்து]]வின் முதன்மைச் சீடராய் விளங்கிய [[பேதுரு (திருத்தூதர்)|தூய பேதுரு]] உரோமையில் கிறித்தவ சமயத்திற்கு வித்திட்டு, அங்கு உயிர்துறந்தார் என்னும் வரலாற்றுச் செய்தியின் அடிப்படையில் இப்பெயர் வழக்கு எழுந்தது.
திருத்தந்தையின் பணிப்பொறுப்பு Papacy என அழைக்கப்படுகிறது. திருச்சபை மீது அவருக்குள்ள ஆட்சிப் பொறுப்பு '''திருப்பீடம்''' (Holy See) அல்லது '''திருத்தூதுப் பீடம்''' (Apostolic See) என அழைக்கப்படுகிறது. முதல் திருத்தந்தையர் பேதுருவின் பதிலாள்(Vicar of Peter) என அழைக்கப்பட்டு வந்தனர். கால வழக்கில் கிறித்துவின் பதிலாள் (Vicar of Christ) என்னும் பெயரையும் பெற்றனர்.
== இறையியல் பார்வையில் திருத்தந்தையின் பணி ==
கத்தோலிக்க [[கத்தோலிக்க திருச்சபை]] திருத்தந்தையின் பணியைத் [[பேதுரு (திருத்தூதர்)|தூய பேதுரு]] என்னும் திருத்தூதரின் பணியின் தொடர்ச்சியாகக் கருதுகிறது. [[இயேசு]] பன்னிரு சீடர்களைத் தெரிவுசெய்து, அவர்களுக்குத் தலைவராக [[பேதுரு (திருத்தூதர்)|பேதுருவை]] நியமித்தார் என்றும், பேதுருவுக்குத் திருச்சபையில் தலைமையிடம் அளித்தார் என்றும் [[நற்செய்திகள்|நற்செய்தி நூல்கள்]] கூறுகின்றன (காண்க: குறிப்பாக, [[மத்தேயு|மத் 16:13:20]]). திருத்தூதர்களின் வாரிசாக ஆயர்களும் பேதுருவின் வாரிசாக திருத்தந்தையும் உள்ளனர் என்பது கத்தோலிக்க திருச்சபையின் கொள்கை. எனவே திருத்தந்தை உரோமையின் ஆயர் மட்டுமல்ல, அனைத்துலகத் [[திருச்சபை|திருச்சபைக்கும்]] அவர் தலைவர் ஆவார். [[இயேசு கிறித்து|இயேசு கிறித்துவின்]]வின் பெயரால் திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கும் ஆயர் குழுவுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்கர் அல்லாத பிற கிறித்தவர்கள்மரபு வழி திருச்சபையினர் திருத்தந்தையின் முதன்மைப் பணியை ஏற்றுக்கொண்டாலும், [[திருச்சபை]] முழுவதற்கும் அவருக்கு ஆட்சி அதிகாரம் உண்டு என்பதைக் கொள்கையளவில் ஏற்பதில்லை.
== வரலாற்றில் திருத்தந்தையர் ==
இன்று 265ஆம்266ஆம் திருத்தந்தையாகப் பணிபுரியும் [[பதினாறாம் பெனடிக்ட்பிரான்சிசு]] [[பேதுரு (திருத்தூதர்)|பேதுருவின்]] வாரிசு என்னும் போது முதல் நூற்றாண்டில் நிலவிய திருச்சபையின் தலைமை அதே முறையில் இருபது நூற்றாண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவந்துள்ளது என்று பொருளாகாது. திருத்தந்தையின் பணி, வரலாற்றில் பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது.
திருத்தந்தையர் வரலாற்றைப் பொதுவாக உரோமைப் பேரரசுக் காலம், நடுக்காலம், தொடக்க நவீன மற்றும் நவீன காலம் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பகுப்பர். அவற்றினுள்ளே கிளைப் பிரிவுகளும் பல உண்டு. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் திருத்தந்தையின் பணிமுறையில் வேறுபாடுகள் துலங்கியதைக் காணலாம்.
|