சூன் மாதம், 2013ஆம் ஆண்டில் இம்மாநிலத்தில் பெய்த தொடர் பெருமழையால் இம்மாநில ஆறுகளில் வரலாறு காணாத அளவில் வெள்ளம்வெள்ள நீர் கரை புரண்டு ஓடியதால், ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களும், ருத்ரபிரயாக்,பத்ரிநாத் மற்றும் கேதார்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி போன்ற புனித இடங்களில் இருந்த பக்தர்களில் பலர் இறந்தனர். மேலும் கேதார்நாத்[[கேதார்நாத்துக் கோயில்]] முக்கிய கோயில் தவிர அதன் சுற்றுபுறக் கட்டிடங்கள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. நான்கு புனித இடங்கள் என்று சொல்லக்கூடிய [[பத்ரிநாத் கோயில்]], [[கேதார்நாத்துக் கோயில்]], கங்கோத்திரி மற்றும் யமுனோத்ரி ஆகிய இடங்களுக்கு செல்லும் தரைவழிச் சாலைகள் நிலசரிவுகளால் முற்றிலும் சேதம் அடைந்திருப்பதால், இனி பக்தர்கள் இப்புனித கோயில்களுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்ய இன்னும் மூன்று ஆண்டு காலம் ஆகும் என உத்தர்காண்ட் மாநில அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது