மண்டூர் கந்தசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மண்டூர்க் கந்தசுவாமி கோயில், மண்டூர் கந்தசுவாமி கோயில் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ள... |
No edit summary |
||
வரிசை 1:
'''மண்டூர் கந்தசுவாமி கோயில்''' [[இலங்கை]]யின் கிழக்கு மாகாணத்தில் [[மட்டக்களப்பு]] நகரின் தெற்கே சுமார் 20 மைல்கள் தூரத்தில் [[மண்டூர்]] கிராமத்தில் மட்டக்களப்பு நீர்ப்பரப்பு ஒட்டி அமைந்துள்ள ஒரு தொன்மை வாய்ந்த [[முருகன்]] கோவில். இது ''தில்லை மண்டூர்'' அல்லது ''சின்னக் கதிர்காமம்'' என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது.
==வரலாறு==
[[கதிர்காமம்]], மற்றும் மண்டூர் ஆலயங்கள் மண்டூர் ஆலயங்கள் கந்தன் படையெடுப்புடன் சம்பந்தப்பட்டவை என்று கொள்ளப்படுகின்றன. கந்தன் படையெடுப்பு இராமாயணப் போருக்கு முற்பட்டது எனவும் இது கி.மு. 1800 க்கு முற்பட்டது எனவும் கொள்ளப்படுகின்றது. சூரபத்மனை சங்காரம் செய்த வேலானது உக்கிரம் தாங்க முடியாமல் கடலில் மூழ்கி மூன்று கிளையானது என்றும் அதில் ஒரு கிளையே மண்டூரில் தில்லை மரத்தில் பதிந்து திருத்தலமானது என்றும் மட்டக்களப்பு தமிழகம், [[மட்டக்களப்பு மான்மியம்]] நூல்கள் கூறுகின்றன.<ref name=vk110813>''கதிர்காமமும் - மண்டூரும், ஓர் ஒப்பு நோக்கு'', இ. பாக்கியராஜன், வீரகேசரி ஆகத்து 11, 2013</ref>
==கோவில் அமைப்பு==
இக்கோவில் 1215-1248 காலப்பகுதியில் கட்டப்பட்டது. கோவில் அமைப்பு [[கதிர்காமம்]] போன்று அமைந்துள்ளது. வெளி முற்றத்தில் இரண்டு சிறிய கோயில்கள் உள்ளன. ஒன்று தெய்வயானைக்கும் மற்றையது வள்ளிக்கும் ஆகும். பிள்ளையார், மற்றும் நாகதம்பிரானுக்கும் கோயில்கள் உள்ளன.
==வழிபாட்டு முறைகள்==
இங்குள்ள வழிபாட்டு முறைகள் பண்டைய மற்றும் கதிர்காமத்தை ஒத்து உள்ளன.
கதிர்காமத்தில் திருவிழாவின் போது புறப்படும் சுவாமியின் வீதியுலா வள்ளி அம்பாள் ஆலய முன்றலைச் சென்றடையும். பின்னர் யானையின் மீதுள்ள பேழையுள் இருக்கும் ஒரு பொருளை பூசகர் (கப்புறாளை) வள்ளியம்பாள் ஆலயத்திலும் மறைவாக எடுத்துச் செல்வார். பூசை முடிந்ததும் மீண்டும் மறைவாக கொண்டு வந்து பேழையுள் வைத்ததும் ஊர்வலம் தொடரும். தீர்த்தத்தின் போதும் இப்பொருளே தீர்த்தமாட [[மாணிக்க கங்கை]]யுள் கொண்டு செல்லப்படுகின்றது. இதே நடைமுறை மண்டூரிலும் பின்பற்றப் படுகின்றது. இங்கு யானைக்குப் பதிலாக புட்பக விமானம் எனப்படும் தேரினுள் வைத்தே அப்பொருள் கொண்டு செல்லப்படுகின்றது. மண்டூர் முருகன் ஆலயத்தில் இருந்து புறப்படும் சுவாமியின் வீதியுலா வள்ளியம்பாள் ஆலய முன்றலை அடைந்ததும் புட்பக விமானம் அங்குள்ள மேடையில் வைக்கப்படும். கப்புகனார் (பூசகர்) அதனுள் இருக்கும் பொருளை மறைவாக வள்ளியம்பாள் ஆலயத்தினுள் எடுத்துச் சென்று பூசை செய்த பின்னர் மீண்டும் கொண்டு வந்து வைப்பார்.<ref name=vk110813/>
தீர்த்தத்தின் போது புட்பக விமானம் ஆலயத்திலிருந்து புறப்பட்டு [[மட்டக்களப்பு வாவி]]க் கரையில் உள்ள சபா மண்டபத்தை சென்றடையும். கப்புகனார் அதனுள் இருக்கும் பொருளை மட்டக்களப்பு வாவியில் சீலையால் மறைக்கப்பட்டிருக்கும் பந்தருள் எடுத்துச் சென்று தீர்த்தம் ஆடுவார்.<ref name=vk110813/>
மண்டூரில் பண்டைய காலத்தில் கதிர்காமம் போன்று [[தீ மிதிப்பு]]ம் இடம்பெற்றுள்ளது. முதலியார் எஸ். ஓ. கனகரெத்தினம் மட்டக்களப்பு பற்றி ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவிழாவை ஆரம்பிப்பதற்கான முதல் நிகழ்வாக மாலையில் வீதியுலா வரும் பாதைகளில் சாட்டையடி வீரர்கள் சாட்டை அடிப்பார். வெளிச்சம் இல்லாத காலத்தில் காட்டினுள் ஆலயம் இருந்தபோது அருகிலுள்ள மிருகங்களை கலைப்பதற்காக சாட்டை அடிக்கப்பட்டது. திருவிழாவின் போது மாலையில் ஆலயத்தைச் சுற்றி சங்கு ஊதி சேகண்டி அடிப்பது வழக்கமாகும். கம்பிகளில் சீலையைச் சுற்றி தேங்காய் எண்ணெயில் நனைத்து இங்கு இன்றும் ஒளியூட்டப்படுகின்றது.<ref name=vk110813/>
==மேற்கோள்கள்==
{{reflist}}
[[பகுப்பு:மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோயில்கள்]]
|