தூய அமலோற்பவ அன்னை பேராலயம், புதுச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 58:
==வரலாறு==
[[File:PondicherryChurch.jpg|250px|left]]
[[இயேசு சபை]] குருக்கள் அப்போது பிரெஞ்சு குடியேற்ற நாடாக இருந்த [[புதுச்சேரி]]க்கு மறைப்பணியாற்ற 1689இல் வந்தனர். [[பிரான்சின் பதினான்காம் லூயி]] மன்னரிடம் நிதியுதவிப்பெற்று 1692ஆம் ஆண்டு அப்போதைய பிரெஞ்சுக்கோட்டைக்கு மேற்கில் ஒரு ஆலயம் எழுப்பினர். அது மறு ஆண்டே இடச்சுக்காரர்களின் படையெடுப்பால் இடிக்கப்பட்டது. இரண்டாம் கோவில் 1699இல் கட்டப்பட்டாலும், அதுவும் நிலைக்கவில்லை. 1728 முதல் 1736வரை தற்போதையக்கோவில் இருக்கும் இடத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டது. 1761இல் இது ஆங்கிலேயர்களால் [[ஏழாண்டுப் போர்|ஏழாண்டுப் போரின்]] போது இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
1765ஆம் ஆண்டு இப்போது உள்ள நான்காம் ஆலயம் கட்டப்பட்டது. 20 ஜூன் 1791 ஆம் நாள் ஆலய வேலைகள் முடிந்து ஆயர் செம்பெனோயிஸால் இவ்வலயம் அருட்பொழிவு செய்யப்பட்டது. ஆலய மணி கோபுரம் பின்னாளில் கட்டப்பட்டது. 1905ஆம் ஆண்டு இடப்பக்க விரிவாக்கப் சேர்க்கப்பட்டது. 1970ஆம் ஆண்டு ஆலய மைய பீடம் சீரமைக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு ஆலய முகப்பில் உள்ள இடம் சீரமைக்கப்பட்டது.
இவ்வலய விழா [[அமலோற்பவ அன்னை]]யின் விழாவாகிய டிசம்பர் 8 அன்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.
இவ்வாலயம் [[புதுச்சேரி]]யின் குறிக்கத்தக்க சுற்றுலா மையமாகும்.
==படக்காட்சி==
|