1 பேதுரு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 53 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 4:
'''1 பேதுரு''' அல்லது '''பேதுரு எழுதிய முதல் திருமுகம்''' (''First Letter [Epistle] of Peter'') என்னும் நூல் கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] இரண்டாம் பகுதியாகிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] இருபத்தோராவது நூலாக அமைந்துள்ளது <ref>[http://en.wikipedia.org/wiki/First_Epistle_of_Peter பேதுரு எழுதிய முதல் திருமுகம்]</ref>. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole Petrou A (Επιστολή Πέτρου αʹ) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula I Petri எனவும் உள்ளது.
 
பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் இம்மடல் ''இராயப்பர் எழுதிய முதல் நிருபம்'' என்றிருந்தது.
 
[[திருமுகம்|இத்திருமுகம்]] சின்ன ஆசியாவிலுள்ள [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] [[திருச்சபை|சபைகளுக்கு]] எழுதப்பட்டது என முதல் வசனத்திலிருந்து அறிகிறோம். அங்கு யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்துக் கிறிஸ்தவர்களும் இருந்திருக்க வேண்டும். வாசகர்களுள் பெரும்பாலோர் ஏழைகளாக இருந்திருக்க வேண்டும். அவர்களிடையே அடிமைகளும் இருந்திருக்க வேண்டும்.
வரிசை 10:
==1 பேதுரு திருமுகத்தின் ஆசிரியர்==
 
திருச்சபைத் தந்தையர் காலத்திலிருந்தே [[திருமுகம்|இத்திருமுகம்]] திருத்தூதரான [[பேதுரு (திருத்தூதர்)|பேதுருவால்]] எழுதப்பட்டது என ஏற்கப்பட்டு வந்தது<ref>[http://www.newadvent.org/cathen/11752a.htm கத்தோலிக்க கலைக் களஞ்சியம் - பேதுரு திருமுகங்கள்]</ref>. ஆசிரியரும் தம்மைப் பற்றி "[[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்துவின்]] திருத்தூதனான பேதுரு" (1 பேது 1:2) என எழுதுகிறார். எனினும் இதனைப் பேதுருவே நேரடியாக எழுதியிருப்பாரா என்னும் கேள்வி எழுகிறது.
 
இத்திருமுகம் உயர்ந்த கிரேக்க நடையில் அமைந்துள்ளது; [[பவுல் (திருத்தூதர்)|பவுலின்]] கருத்துகள் பல இதில் பிரதிபலிக்கின்றன. மேலும் [[திருமுகம்]] குறிப்பிடுவது போன்ற பெரிய துன்புறுத்தல் [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]] வாழ்ந்தபோது இல்லை. இத்திருமுகம் அனுப்பப்பட்ட இடங்களில் (1 பேது 1:1) சிலவற்றிலாவது பேதுரு இறக்குமுன்னே (கி.பி. 64) [[திருச்சபை]] தோன்றியிருந்ததா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
 
எனவே, மாறிவிட்ட ஒரு காலக்கட்டத்தில் [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]] என்ன சொல்லியிருப்பார் என்பதை, அவருடைய சீடர் ஒருவர் அவர் பெயரில் [[திருமுகம்|திருமுகமாக]] எழுதியிருக்கலாம் என அறிஞர் பலர் கருதுகின்றனர். இவ்வாறு இத்திருமுகம் கி.பி. 70-90 ஆண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம்.
வரிசை 41:
<br>இப்பொழுது கடவுளுடைய மக்களாக இருக்கிறீர்கள்.
<br>முன்பு இரக்கம் பெறாதவர்களாய் இருந்தீர்கள்;
<br>இப்பொழுதோ இரக்கம் பெற்றுள்ளீர்கள்."
 
<br>"நீங்கள் விடுதலை பெற்றுள்ளீர்கள்; விடுதலை என்னும் போர்வையில் தீமை செய்யாதீர்கள்;
<br>கடவுளுக்கே அடிமைகளாய் இருங்கள்.
<br>எல்லாருக்கும் மதிப்புக் கொடுங்கள்; சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்துங்கள்;
<br>கடவுளுக்கு அஞ்சுங்கள்; அரசருக்கு மதிப்புக் கொடுங்கள்."
 
'''1 பேதுரு 3:8-9, 15-17'''
வரிசை 64:
<br>உங்களை இழிவாகப் பேசியதைக் குறித்து வெட்கப்படுவார்கள்.
<br>ஏனெனில், தீமை செய்து துன்புறுவதை விட,
<br>கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல்."
 
==1 பேதுரு திருமுகத்தின் உட்பிரிவுகள்==
வரிசை 100:
<references/>
 
[[பகுப்பு:புதிய ஏற்பாடு நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/1_பேதுரு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது