அனந்தாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
}}
 
சுவாமி [[இராமானுசர்]] மீது அளவுகடந்த பக்தி கொண்ட இவர், கர்னாடகத்தின் மாண்டிய மாவட்டத்தில் சிறுப்புத்தூர் (இன்றைய கிரங்கனூர் -[[மேல்கோட்டை]] அருகில்) எனும் அழகிய சிற்றூரில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அனந்தன் (English:[[Ananthazhwan/Ananthalvan]]) என்னும் இயற்பெயரில் பிறந்தவர். இராமனுசர் ஆணைப்படியே திருமலையில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்து மலர் கைங்கர்யம் செய்வதையே வாழ்க்கையின் பலனாக கொண்டு திருமலையிலேயே வாழ்ந்தவர். இதற்காக தன் மனையாளின் உதவியோடு இவர் ஏற்படுத்திய திருக்குளம் "இராமானுச தீர்த்தம்" என்றஎன்றும், பெயரோடுஅவரின் நந்தவனம் "அனந்தாழ்வார் நந்தவனம்" என்றும் இன்றும் திருமலை மாடவீதியில் காணப்பெறுகிறது.
 
==நூல்கள்==
வரிசை 28:
இவரின் நந்தவனத்தில், திருமலை பட்டத்தரசியான அலர்மேல்மங்கை நாச்சியாரோடு திருவேங்கடவன் இரவு நேரங்களில் உலாவும் போது ஒருநாள் இதனை கண்ணுற்ற அனந்தாழ்வார் யாரோ ஒரு காதல் இணைகள் தன் நந்தவனத்தில் புகுந்து பாழ்ப்படுத்துவதாக எண்ணி பிடிக்க முயற்சித்தார். உடனிருந்த ஆண்மகன் தப்பிக்க பெண்மகள் மட்டும் அனந்தாழ்வரிடம் பிடிபட எப்படியும் இவளை மீட்க அவள் காதலன் வருவான் என அந்நந்தவனத்திலேயே பிணையாக சிறைப்படுத்தினார். பொழுது விடிந்து வழக்கம்போல் அன்றலர்ந்த மலர்களை மாலைகளாக்கி திருவேங்கடவன் சன்னதியடைய அங்கே மார்புறை நாச்சியாராகிய அலர்மேல்மங்கை திருவேங்கடவன் மார்பில் இல்லாதிருக்கக் கண்டு அஞ்சியவருக்கு, முன்னிரவில் தானே தன் மனையாளோடு நந்தவனத்திற்கு வந்ததுவும், அனந்தாழ்வாரின் பிணையாக நந்தவனத்தில் கட்டுண்டு இருப்பவள் அனைத்து உயிர்களுக்கும் அன்னையாகிய அலர்மேல்மங்கை நாச்சியாரே என திருவேங்கடவன் தெரிவிக்க ஒரு நொடியும் ஐயனை அகலாத அன்னை தன் செய்கையால் ஒர் இரவு முழுதும் பிரிய நேரிட்டதை எண்ணி மிக்க வருத்தம் கொண்டார். அதற்கு ஈடுசெய்யும் பொருட்டு அவரே நாச்சியாரின் தகப்பனாராக இருந்து மீண்டும் திருவேங்கடவனுக்கு மணம் முடித்து சேர்த்து வைத்தார். இச்செயலால் திருமலை உறையும் திருவேங்கடவனுக்கு இவர் மாமனார் என அன்றிலிருந்து அழைக்கப்பட்டு வருகிறார்.
 
==தனியன்==
 
திருமலையிலேயே தன்னுயிர் நீத்த இவரை, அவர் வாழ்ந்த குடிலில் பள்ளிப்படுத்தி இன்றும் வழிப்பாட்டிற்காக திருமலை கோயில் நிர்வாகத்தால் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. கீழ்க்கண்ட வடமொழி தனியன் இவரின் மேன்மையை பறைசாற்றுகிறது.
 
:அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்
:ஆச்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்
 
ஆதாரம்(Ref): ஆறாயிரப்படி குருப்பரம்பர பிரபாவம்
 
{{வைணவ சமயம்}}
[[பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள்]]
[[பகுப்பு:வைணவ அடியார்கள்]]
 
</Ref>http://guruparamparai.wordpress.com/2013/03/31/ananthazhwan/<Ref>
"https://ta.wikipedia.org/wiki/அனந்தாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது