ஞான யோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
“யோகம்’ என்பதற்கு பல பொருள்கள் கூறப்பட்டுள்ளது. யோகத்தை ’ மனதின் அமைதி ’ என்றும், ’ மனதை சத்வ குணத்திற்கு மாற்றி அமைத்தல் ’ என்றும், நமது எண்ணங்களின் அமைதியே யோகம் என்றும், அலைபாயும் மனதை நமது மனதின் கட்டுப்பாட்டில் நிலை நிறுத்தும் செயல்களுக்கு யோகம் என்பர்.
 
==இங்கு ஞானத்தை (அறிவை) ஏழு வகையாக பிரிக்கலாம்==:
 
1. விவேக புத்தி: ஒன்றின் பொருளைப் பிரித்து அறிந்து கொள்ளும் தன்மையே அறிவே. எடுத்துக்காட்டாக, இது தர்மம்-இது அதர்மம், இது உண்மை-இது பொய், இது நல்லது-இது கெட்ட்து, இது நன்மை-இது இன்பம், இது அழிவற்றது- இது நிலையானது என்று அறிவினால் பிரித்துப் பார்த்து தெரிந்து கொள்வதே ஞானம் ஆகும். இதனை விவேக புத்தி என்பர்.
வரிசை 37:
ஞானம் எனும் அறிவு ஒரு பொருளை, கண்ணாடி போன்று உள்ளது உள்ளபடி மட்டும் காட்டும். எனவே ஒரு பொருளை பகுத்தாராய்வு செய்ய நம் மனதில் உள்ள தீய குணங்களை நீக்கி தெய்வீக குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஞானத்தை அடைய யோகம் எனும் சாதனை அவசியமாகும்.
 
==யோகத்தை அடையும் வழிகள்==:-
 
சத்வ குணத்தில் மனதை நிலை நிறுத்த வேண்டும். பதஞ்சலி முனிவர் தனது யோக சூத்திரத்தில், தியானம் எனும் தொடர் பயிற்சியாலும், வைராக்கியத்தாலும் மட்டுமே மனதை நம் கட்டுக்குள் வரமுடியும் என வழியுறுத்துகிறார். வைராக்கியம் எனில் உலக இன்பங்களில் ஆசைப்பட்டு அதற்கு அடிமையாக இல்லாதிருப்பதே. வைராக்கியத்தை அடைந்தாலே, மன ஒருமுகப்பாடு, மனத்தூய்மை, புலனடக்கம், மனவடக்கம், அகிம்சை, பொறுமை, தவம், தியாகம் ஆகிய சாதனைகளால் யோகத்தை எளிதாக அடைய முடியும்.
 
==மனம் வைராக்கியம் அடைவதற்கான வழிகள்== :-
 
மனப்பக்குவமே வைராக்கியம் என்பர். தவத்தாலேயே வைராக்கியத்தை அடைய முடியும். அந்த மனதுடன் ஆத்மஞானத்தை அறிந்தால் சீவன் முக்தி எனும் மோட்சம் உறுதியாக கிடைக்கும். ஒரு பெருந் துயரத்தை கடக்க சிறிய கஷ்டங்களை தாங்கிக் கொள்ள நம் மனம் பழகிக் கொள்ள வேண்டும். தவத்தின் மூலம் யோகத்தை அடைந்து மனதை கட்டுப்படுத்த வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/ஞான_யோகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது