சில நாடுகளில் சரக்குள்ள சரக்குந்துகளே நேரடியாக தொடர்வண்டியின் மீது வைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் சரக்குகளே ஏற்றி இறக்கும் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் கொங்கண் இரயில்வேயில் இத்தகைய நடைமுறை உள்ளது.<ref>http://www.hinduonnet.com/2004/06/12/stories/2004061211920300.htm</ref>
==இந்தியாவில் தொடர்வண்டி==
இந்தியாவில் ஆங்கிலேயர்களால் தொடர்வண்டி அறிமுகப்படுத்தப்பட்டது.பின் தொடர்வண்டி சேவை இந்தியாவில் பெரும் அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டது.தொடர்வண்டி சேவை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும், மாவட்டங்களையும்,கிராமங்களையும் இணைக்கிறது.
இந்தியாவில் ஐந்து ஆண்டு திட்டங்களின் மூலமாக மீட்டர் பாதைகள் அனைத்தும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. மேலும் சென்னை உட்பட பெருநகரங்களில் பறக்கும் தொடர்வண்டி,மெட்ரோ தொடர்வண்டி ஆகிய சேவைகள் செய்யப்படுகின்றன.
இந்தியாவின் ரயில்வே மண்டலங்கள்
வடக்கு இரயில்வே,
வடகிழக்கு இரயில்வே,
வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே,
கிழக்கு இரயில்வே,
தென்கிழக்கு இரயில்வே,
தென்மத்திய இரயில்வே,
தென்னக இரயில்வே,
மத்திய இரயில்வே,
மேற்கு இரயில்வே,
தென்மேற்கு இரயில்வே,
வடமேற்கு இரயில்வே,
மேற்குமத்திய இரயில்வே,
வடமத்திய இரயில்வே,
தென்கிழக்குமத்திய இரயில்வே,
கிழக்குக்கடற்கரை இரயில்வே,
கிழக்குமத்திய இரயில்வே ஆகிய பதினாறு மண்டலங்கள் ஆகும்.
==இலங்கையில் தொடர்வண்டி==
இலங்கைக்கு ஆங்கிலேயரால் தான் தொடர்வண்டி கொண்டுவரப்பட்டது.இது முதலில் பொருட்களை ஏற்றி செல்லவே பயன்பட்டது.பின்னர் இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு இலங்கை அரசாங்கத்தால் மனிதர்களையும் ஏற்றும் வகையில் செய்யப்பட்டது.