சீர்காழி இரா. அரங்கநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
==இளமைக் காலமும் கல்வியும்==
அரங்கநாதன் 12 ஆகத்து 1892 ஆம் ஆண்டு அக்காலத்துச் சென்னை மாகாணத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த சீர்காழியில் பிறந்தார். பெற்றோருக்கு இவர் மூத்த மகன். இவரது தந்தையார் இராமாமிருதம், தாயார் சீதாலட்சுமி. இராமாமிருதம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உபயவேதாந்தபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர், படித்த பண்பாடுள்ள மனிதர். இவர் நடுத்தர அளவில் நிலமொன்றை வைத்து நெற்செய்கையில் ஈடுபட்டிருந்தார். மக்களுக்கு இராமாயணக் கதைகூறும் வல்லமை பெற்ற இவருக்கு சுற்றாரிடம் நல்ல மதிப்பு இருந்தது. இராமாமிருதம் 1898 ஆம் ஆண்டில் அவரது 30 ஆவது வயதில் திடீரெனக் காலமானார்.<ref>
1909ல் [[சென்னை கிறித்தவக் கல்லூரி]]யில் (Madras Christian College) சேர்ந்த அரங்கநாதன் 1913ல் இளங்கலைப் பட்டத்தையும், 1917 ஆம் ஆண்டில் கணிதத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்று வெளியேறினார். பின்னர் [[சைதாப்பேட்டை]]யில் இருந்த ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியத் தகுதிச் சான்றிதழையும் பெற்றார்.
|