அச்சே சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 36:
 
==தோற்றமும் எழுச்சியும்==
1471 ஆம் ஆண்டு [[வியட்நாம்|வியட்நாமியரால்]] [[சம்பா இராச்சியம்|சம்பா இராச்சியத்தின்]] தலைநகரான விசய சம்பா அழிக்கப்பட்டது எனவே சம்பா இராச்சியத்தின் அரசர் சேக் பாவு குபா என்பவர் தம் அரசுக்கு உட்பட்டிருந்த அச்சே பகுதியில் தலைநகரை அமைக்க எண்ணினார். அங்கு தனது மகன் 'சேக் பாவு லிங்' என்பவரை நியமித்தார். இதிலிருந்தே அச்சே சுலதானகத்தின் வரலாறு தோற்றம் பெறுகிறது.
 
அதன் பின்னர் வந்த அச்சே அரசின் ஆட்சியாளர் [[இசுலாம்]] மதத்தைத் தழுவினார்.<ref name="BW114">Barwise and White, 114</ref> 15 ஆம் நூற்றாண்டில் இதன் மன்னர் அலீ முகாயத் சேக் என்பவரால் இது சுல்தானகமாகியது. அவர் 1520 ஆம் ஆண்டு வடக்கு [[சுமத்திரா]]வில் தன்னுடைய அதிகாரத்தை விரிவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.<ref>Ricklefs, 32</ref> [[டெலி சுல்தானகம்]], பெடிர், பசாய் என்பவற்றை வெற்றிகொண்ட அவர் சுமத்திராவில் நிலவிய [[அரு அரசு|அரு நாட்டு]] அரசையும் தாக்கினார். அவரது மகன் அலாவுத்தீன் அல்-கக்கார் தன்னுடைய அதிகாரத்தை தென் சுமத்திரா வரை விரிவாக்கினார். [[சொகோர் சுல்தானகம்]], மலாக்கா என்பவற்றை அவர் தொடர்ச்சியாகத் தாக்கிய போதும் [[மலாக்கா நீரிணை|மலாக்கா நீரிணையில்]] கேந்திர நிலையமொன்றைப் பெறுவதில் குறைந்தளவிலேயே வெற்றி பெற்றார்.<ref>Ricklefs, 33</ref> அவருக்கு உதவியாக உதுமானியப் பேரரசு, 15 கப்பல்களில் ஆட்கள், துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற சுடுகலன்களை ''குர்தொக்லு கிசிர் ரைசு'' என்பவரது தலைமையில் அனுப்பி வைத்தது.<ref name="BW114"/> தென்கிழக்கு ஆசிய இசுலாமிய சுல்தானகங்கள் சுடுகலன்களைப் பயன்படுத்தத் தொடங்கியமைக்கு அதுவே அடிப்படையாகும்.
வரிசை 45:
 
==கலாச்சாரம் ==
[[Image:Banda Aceh's Grand Mosque, Indonesia.jpg|left|thumb|பைதுர் ரகுமான் பெரிய பள்ளிவாசல், [[பண்டா அச்சே]].]]
 
அச்சே சுல்தானகம் தென்கிழக்காசியாவின் முதலாவது முஸ்லிம் அரசாகிய பசாய் வழியே இசுலாமியப் பணியில் ஈடுபட்டது. [[ரோமன் கத்தோலிக்கம்|ரோமன் கத்தோலிக்கரான]] போர்த்துக்கேயர் மலாக்காவைக் கைப்பற்றி ஆட்சி செய்த போதும் மலாக்காவில் தொடர்ந்த இசுலாமியப் பிரச்சாரம் அச்சே சுல்தானகத்தைப் பெரிதும் கவர்ந்தது. இசுலாமிய அறிவுத் துறையில் சிறந்து விளங்கிய அச்சே சுல்தானகம் புனித [[குர்ஆன்]] மற்றும் இசுலாமிய நூல்களை மலாய் மொழியில் பெயர்க்கும் பணியையும் மேற்கொண்டது. அச்சே சுல்தானகம் தன்னை [[மக்கா|மக்காவின்]] தாழ்வாரம் என அழைத்துக் கொள்வதில் பெருமிதம் கண்டது.<ref name="BW114"/> அம்சா பன்சுரி, சம்சுத்தீன், அப்துர் ரவூப், நூருத்தீன் அர்-ரனீரீ ஆகியோர் அச்சே சுல்தானகத்தின் சிறந்த அறிஞர்களாக திகழ்ந்தனர்.<ref>Ricklefs, 51</ref>
"https://ta.wikipedia.org/wiki/அச்சே_சுல்தானகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது