கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎சூழல்: clean up
வரிசை 7:
 
==சூழல்==
முதன் முதலில் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் சில குருக்கள், திருச்சபையின் சில அதிகாரிகள் செய்த செயல்களை கண்டிக துவங்கப்பட்டது சீர்திருத்த இயக்கம் ஆகும்.{{sfn|Thomsett|2011|p=156}} முதன் முதலில் [[பலன்கள் (கத்தோலிக்க திருச்சபை)|பலன்களைக்]] குறித்து மார்ட்டின் லூதர் கேள்வி ஏழுப்பினார். ஆதலால் அவர் 3 ஜனவரி 1521 திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டார். இதுவே கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் துவங்கப்பட முக்கிய காரணமாகும்.{{sfn|Spalding|2010}} [[மார்ட்டின் லூதர்|லூதருக்கு]] முன்பே ஜான் விக்லிஃப் மற்றும் ஜேன் கஸ் என்பவர்கள் திருச்சபையினை சீர்திருத்த முயன்றனர் என்பது குறிக்கத்தக்கது.
 
31 அக்டோபர் 1517இல் விடென்பெர்க், சேக்சோனியில் துவங்கியது இவ்வியக்கம். சகல ஆன்மாக்களின் ஆலயத்தின் கதவில் மார்டின் லூதர் தனது 95 கோரிக்கைகளை ஆணி கொண்டு அடித்தார்.{{sfn|Simon|1966|pp=120-121}} இவற்றில் திருச்சபையையும், அதன் மேல் திருத்தந்தைக்கு உள்ள அதிகாரத்தையும் பலன்கள் விற்பனையையும், உத்தரிப்பு நிலைக்குறித்த திருச்சபையுன் போதனைகளையும் அவர் கண்டித்து இருந்தார். 1517-1521க்கு இடைப்பட்ட காலத்தில் இவர் மரியாள் குறித்த கத்தோலிக்க நம்பிக்கை, புனிதர்களின் பரிந்துரை மன்றாட்டுகள், அருட்சாதனங்களின் நிலை, துறவு நிலை, கற்பு நிலை, சமயம் சார்ந்தவற்றில் சரசியல் குறுக்கீடுகள் போன்றவற்றை எதிர்க தொடங்கினார். இவர் அகுஸ்தீன் சபை குருவாக இருந்ததால் [[ஹிப்போவின் அகஸ்டீன்|ஹிப்போவின் அகஸ்டீனுடைய]] படிப்பினைகள் பலவற்றிற்கு புது விளக்கம் அளித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவச்_சீர்திருத்த_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது