போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 28 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி clean up |
||
வரிசை 1:
'''போட்டி''' என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட ஆள்கள், குழுக்கள், நாடுகள் போன்றவை நிலம், பதவி, வளங்கள் போன்றவற்றை அடைவதற்காகத் தமக்குள் எதிரிடைப்பட்டுப் போராடுவதைக் குறிக்கும். அழகுப் போட்டி, ஆயுதப் போட்டி, விளையாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, பாடல் போட்டி, அரசியல் போட்டி, என்று எல்லாத் துறைகளிலுமே போட்டி புகுந்துவிட்டது.
==போட்டியை ஆதரிப்போர் கூறும் காரணங்கள்==
வரிசை 14:
என்பவையே போட்டியை ஆதரிப்போர் காட்டும் காரணங்கள்.
*போட்டி ஆற்றல்களை வளர்க்கிறதா?
வரி 21 ⟶ 20:
பாடல் போட்டிக்கு வருகின்ற சிறார்கள் தங்களால் பாட இயலும் என்ற நம்பிக்கையோடுதான் போட்டியில் கலந்துகொள்கிறார்கள். ஓரிருவரை மட்டும் தேர்ந்தெடுத்துவிட்டு எஞ்சியோரைத் திருப்பி அனுப்பும்போது அவர்கள் தாம் ஆற்றல் குன்றியவர்கள் என்னும் உணர்வோடு வீடு செல்கிறார்கள். போட்டியினால் ஆற்றல் வளர்கிறது என்பதற்குப் பதிலாக, ஆற்றல் வளர்ந்தவர்கள் போட்டியில் கலந்துகொள்கிறார்கள் என்பதே அதிகப் பொருத்தமாகும். அப்படியென்றால் ஆற்றல்களை வளர்க்க வேறு வழிகளைத் தேட வேண்டும்.
*போட்டி தன்வளர்ச்சிக்கு உந்துதல் தருகிறதா?
வரி 27 ⟶ 25:
போட்டி என்பது தன்வளர்ச்சியை ஊக்குவிக்க இயல்பாகவே மனிதரிடத்தில் உள்ள இயக்குசக்தி என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. தன் வளர்ச்சிக்கான ஓர் இயற்கை உந்துதல் உள்ளது என்பதை நாம் மறுக்கவியலாது. ஆனால் அதற்குப் போட்டி வேண்டுமா என்னும் கேள்வி எழுப்பப்படுகிறது. உண்ணுதல், உடுத்தல், ஓய்வெடுத்தல் போன்ற செயல்களைப் புரிவதற்கு யாரும் போட்டியில் ஈடுபடுவதில்லை. சில வேளைகளில் அதிலும் கூட போட்டி புகுத்தப்படுகிறது. 5 நிமிடங்களில் யார் அதிக எண்ணிக்கையிலான இட்லிகளை விழுங்குகிறார்கள் என்றொரு போட்டி வைத்தால் அப்போது இயற்கைக்கு முரணான விதத்தில்தான் அப்போட்டி நிகழ்கிறது.
விலங்குகளிடையே உணவுக்காகப் போட்டி ஏற்படக் கூடும். ஆனால் அது மனிதரிடையே நடப்பதுபோல் திட்டமிட்டு நிகழ்வதன்று.
*போட்டி நிறைவளர்ச்சிக்குத் துணையாகிறதா?
ஒரு குறிப்பிட்ட துறையில் ஒருவருக்கு ஏற்கெனவே இருக்கின்ற திறமையை நிறைவுசெய்ய போட்டி உதவுகிறது என்பது இன்னொரு வாதம். இங்கேயும் சிலரின் வளர்ச்சி பிறரின் தளர்ச்சி என்றே அமைகிறது.
*போட்டி செயல்பாட்டைத் தூண்டுகிறதா?
போட்டி செயல்பாட்டைத் தூண்டுகிறது, எனவே நல்லது என்பது இன்னொரு வாதம். இதற்கு மறுப்பாக, மனிதர் செய்யும் முக்கிய செயல்பாடுகள் போட்டியின்றியே நிகழ்கின்றன என்பதைக் காட்டலாம். செயல்பாட்டைத் தூண்டி வளர்ச்சிக்கு உதவிட வேறு வழிகள் இல்லையா என்பது எதிர்வாதம்.
*போட்டி வெற்றி-தோல்விக்குப் பயிற்சியளிக்கிறதா?
போட்டிகள் வெற்றி-தோல்வி அனுபவங்களை வாழ்க்கையில் ஏற்பதற்குப் பயிற்சியாக அமைகின்றன என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, தோல்விகள் ஏற்படும்போது அவற்றை மன உறுதியோடு ஏற்பதற்கு போட்டிகள் பயிற்சி அளிக்கின்றன என்பர் சிலர். இதற்கு மறுப்பாக, அன்றாட வாழ்வில் சிறுவர்க்கும் பிறருக்கும் ஏற்படுகின்ற தோல்விகள் ஏற்கெனவே பல இருக்கும்போது, செயற்கையாக வேறு தோல்வி அனுபவங்களை உருவாக்கி அவர்கள் வாழ்க்கையை இன்னும் அதிய இன்னலுக்கு உட்படுத்த வேண்டுமா என்னும் வாதம் எழுப்பப்படுகிறது.
==போட்டிகள் வேண்டாம் என்போர் முன்வைக்கும் மாற்று வழிகள்==
வரி 53 ⟶ 48:
பெரும்பாலான செயல்களை மனிதர் பிற மனிதரின் தொடர்பின்றி, தாமாகவே செய்கின்றனர். பிறரோடு தொடர்புகொண்டு செய்யப்படும் செயல்களைப் போட்டி மூலமாகச் செய்வதைவிட ஒத்துழைப்பு மூலமாகச் செய்வதே அதிகப் பலன் நல்குவதும், தீய பின்விளைவுகளை ஏற்படுத்தாமலும் அமையும். இங்கு, "நான் முதலில் வர வேண்டும்" என்னும் தன்னல வேட்கை மாறி, "நாம் சேர்ந்து வளர்வோம்" என்னும் பொதுநல எண்ணம் தோன்றும்.
==கல்வித் துறையில் போட்டி தவிர்த்தல்==
வரி 60 ⟶ 54:
தர எண் வரிசை முறையில் முதல் எண் ஒருவருக்குத்தான் கிடைக்க வாய்ப்புள்ளது. அதைப் பெறுவதற்குப் போட்டி இருக்கும். ஆனால், தரநிலை முறையில் எல்லாரும் முதல் நிலைக்கு வரும் வாய்ப்பு உள்ளதால் போட்டிகள் குறைந்து, ஒருவர் ஒருவருக்கு உதவும் நிலை தோன்றும்.
==கலைவிழாக்களில் போட்டி தவிர்த்தல்==
வரி 76 ⟶ 69:
பல நேரங்களில் பயிற்சியாளர்களின் படைப்பாற்றலின்மையே போட்டிகளில் ஈடுபடத் தூண்டுகிறது. பயிற்சியாளர்கள் தங்கள் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். பங்கேற்பவர்களை முனைப்போடு செயல்பட வைக்கும் பல உத்திகள் உள்ளன. கதைகள், பாடல்கள், குறுநாடகங்கள் முதலியவற்றோடு, குழு வழிமுறைகளான குழு விளையாட்டு, குழு வேலைகள், குழு ஆய்வுகள் போன்றவை மிகுந்த ஈடுபாட்டையும் ஒத்துழைப்பையும் உருவாக்குபவை. இவ்வழிமுறைகள் சிறுவர்க்கு மட்டுமன்றி, பெரியவர்களுக்கும் பொருத்தமானவையே.
பலர் பங்கேற்கும் வாய்ப்பு அளிப்பது, போட்டிகளால் ஏற்படும் மனத்தாங்கல் போன்ற தீய விளைவுகளைத் தவிர்ப்பது பயிற்சியாளரின் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தால் நல்விளைவுகள் பல உண்டாகும். பள்ளிகளில் நிகழ்கின்ற போட்டிகளில் ஓராண்டு பங்கெடுத்தவர்களே மீண்டும் மீண்டும் பங்கேற்கும் நிலையைத் தவிர்க்கலாம். கலைவிழாக் கொண்டாட்டத்தின்போது பாடல், சொற்பொழிவு, கவிதை, கட்டுரை, ஓவியம் என்று பல நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பாடல், சொற்பொழிவு போன்றவை மேடையில் நிகழ்த்தப்படலாம். ஓவியங்கள் அரங்கச் சுவரில் கண்காட்சியாக இடம்பெறலாம். கவிதை, கட்டுரை போன்றவை இதழாக வெளியிடப்படலாம். பங்கேற்கும் அனைவருக்கும் பரிசோ சான்றிதழோ வழங்கலாம். அனைவருடைய படைப்புகளுக்கும் வரவேற்பு இருக்கும்போது, முதலிடம் பெற வேண்டும் என்னும் முனைப்பும் இராது, அவ்விடம் பெறவில்லையே என்னும் தோல்வி மனப்பான்மையும் ஏற்படாது.
விளையாட்டுகளில் பங்கேற்கும்போது எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்ற குறுகலான நோக்கத்தோடுதான் பங்கேற்க வேண்டும் என்றில்லை. நல்ல விளையாட்டை எல்லாரும் மகிழும் வண்ணம் விளையாடுவதே முக்கியமானது. வெற்றிக்காகவும் பரிசுக்காகவும் மட்டுமல்ல, மனமகிழ்ச்சிக்காகவும் செயல்கள் செய்யப்பட வேண்டும். மனமகிழ்ச்சி என்பது போட்டியிட்டு வெற்றிபெறுவதில் ஏற்படுவதிவிட, ஒரு செயலைச் செவ்வனே செய்துமுடிப்பதில் அடங்கியிருக்கிறது.
குழந்தைகளிடமும் சிறாரிடமும் எந்தச் சூழ்நிலையிலும் பிறரோடு அவர்களை ஒப்பிட்டுப் பேசுவது தவிர்க்கப்பட வேண்டும். அப்படிப் பேசும்போது பிஞ்சு உள்ளங்களில் போட்டி மனப்பான்மை உருவாவதற்கான வித்துக்கள் தூவப்பட்டுவிடுகின்றன.
பிறரை முறியடித்து, அவர்களுக்கு மனவேதனை உண்டாக்கி அதனால் மகிழ்வடைகின்ற மனப்பாங்கு ஒரு மூர்க்க குணம் என்றால் மிகையாகாது.
போட்டியுணர்வையும் தன்னலத்தையும் தவிர்த்து, ஒத்துழைப்பு உணர்வைச் சிறுவர்களுக்கு ஊட்டுகின்ற முயற்சி சிறு பருவத்திலேயே தொடங்கப்பட வேண்டும். போட்டியில்லாப் புதிய சமுதாயம் உருவாகிட அனைவருமே ஒத்துழைக்கலாம், ஒத்துழைக்கவும் வேண்டும்.
|