நோய்ப்பரவலியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியாக்கம்
வரிசை 10:
பழங்காலத்து கிரேக்க மருத்துவர் [[ஹிப்போக்ராட்டஸ்]] (Hippocrates) என்பவர்தான் நோய்ப் பரவையலுக்குக் தந்தை என்று கூறுகிறார்கள். இவரே சுற்றுச் சூழல் நிலைக்கும் ஒரு நோய் தோன்றுவதற்கும் உள்ல தொடர்பை முதன்முதல் கண்டு கூறியவர்.
 
16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இத்தாலியில் உள்ள விரேன்சே (விளாரன்ஸ், Florence) நகரத்தைச் சேர்ந்த [[கிரோலாமோ விராக்காஸ்ட்டொரோ]] (Girolamo Fracastoro) என்பவர்தான் நோய் தோன்றுவதற்குக் கண்ணுக்குத் தெரியாத மிகமிக நுண்ணிய உயிரிகள்தான் காரணம் என்னும் கருத்தை முதன்முதலாக முன்வைத்தார். இந்த மிக மிக நுண்ணிய உயிரிகள் காற்றால் பரவவும், தானே இனப்பெருக்கம் செய்யவும் கூடும் என்றும், இவற்றை நெருப்பால் அழிக்கமுடியும் என்றும் கருதினார்கள். இப்படிக் கூறிப் பழங்காலத்தில் வாழ்ந்த ‘கேலன் (Galen) என்னும் கிரேக்கரின் கொள்கையான நோயுற்றவர்கள் உடலில் நச்சு [[வளிமம்]] உள்ளது (Galen's theory of miasms ) என்னும் கருத்தை முறியடித்தார். [[1543]]ல் கிரோலாமா விரக்காஸ்ட்டொரொ தொற்றுநோய்பற்றி “’டி கொண்டாகியோன் எ கொண்டாகியோசிஸ் மார்பிஸ்” ("De contagione et contagiosis morbis") என்னும் [[நூல்|நூலை]] எழுதினார். அதுவே சுற்றுப்புற மற்றும் தன் தூய்மை பற்றி அக்காலத்தில் வலியுறுத்தி எழுதிய முதல் நூலாகும். இவர் கூறிய மிக மிக நுண்ணிய உயிர் பற்றிய கொள்கையானது [[1675]]ல் [[லேவனஃக்|அன்ட்டொன் வான் லேவனஃக்]] (அன் ட்டோன் வான் லேவன்ஹக், Anton van Leeuwenhoek ) [[நுண்ணோக்கி]]யைக் கண்டுபிடிக்கும் வரை நிறுவப்படவில்லை.
 
துணிமணி தொடர்பான பொருள்களின் சிறுவிற்பனையாளரராக இருந்த ஜான் கிரௌண்ட் (John Graunt) என்பவர் தன்னார்வ அறிவியலலளராக. தான் சேர்த்து வந்த நோய்கள் மற்றும் இறப்புகள் பற்றிய குறிப்பகளையும் அதன் தொடர்பான அந்நாளைய புள்ளியியல் குறிப்புகளையும் [[1662]]ல் Natural and Political Observations ... upon the Bills of Mortality என்னும் தலைப்பில் வெளியிட்டார். அதன்வழி அக்காலத்தில் வழங்கிய பல கருத்துக்களை மறுத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/நோய்ப்பரவலியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது