மீராபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:வைணவ அடியார்கள் using HotCat |
No edit summary |
||
வரிசை 15:
|footnotes=
}}
'''மீரா''' ('''மீராபாய்''' கி.பி 1498 – கி.பி 1547)
==வாழ்க்கை==
வீர்குமாரி மற்றும் ரத்தன் சிங் தம்பதிகளின் மகளாக ஒரு [[வைணவம் | வைணவக்குடும்பத்தில்]] பிறந்தார் மீராபாய். ஜோத்பூர் அரசை நிர்மாணித்த ராவ்ஜோதாவின் மகனான ராவ்தூதவின் இளையமகன்தான் ரத்தன் சிங். தன்னுடைய ஏழாம் வயதில் தன் அன்னையை இழந்த மீரா பின்னர் தன் பாட்டனாரான ராவ்தூதால் வளர்க்கப்பட்டு கல்வியும் பயின்றார்.அரச குடும்பத்தைச் சார்ந்த இவர் வைணவ சமய மரபில் வளர்க்கப்பட்டார். குழந்தைப் பருவம் முதலே ""கிரீதர கோபாலன்"" எனும் கிருஷ்ணர் சிலை மீது தொடங்கிய ஈடுபாடு நாளடைவில் [[ஆண்டாள்]] போல கண்ணனை தன் மணவாளானாக வரித்துக்கொண்டது. குடும்பத்தின் வற்புறுத்தலில் பேரில் 1516-ல் பதினெட்டு வயதில் சுய விருப்பமின்றி போஜராஜன் எனும் சித்தோர்கர் இளவரசனுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்.
போஜராஜன் குடும்பத்தின் குலதெய்வமான துளஜ பவானி எனும் [[துர்கை]] வழிப்பாட்டை மேற்கொள்ளாத மீராபாயின் கிருஷ்ண வழிப்பாட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியது. 1521-ல் தில்லி சுல்தானின் இசுலாமிய சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக ராஜபுத்திரரகள் ஒன்றுசேர்ந்து போர்புரிந்த போது இறந்த பலர் அரசர்களில் மீராவின் கணவர் போஜராஜனும் ஒருவர். மாமனார் அரவணைப்பில் அரண்மனையில் வாழ்ந்த மீரா, பின்னர் அவரையும் இழக்க கண்ணன் ஒருவனே துணையென சித்தோர்கர் அரண்மனையிலேயே வாழ்ந்து வரலானார்.
---
▲இவர் குரு [[ரவிதாசர்|ரவிதாசரின்]] சீடராவார்.
▲அரச குடும்பத்தைச் சார்ந்த இவர் [[வைணவம்|வைணவ]] சமய மரபில் வளர்க்கப்பட்டார். கிருஷ்ணரிடம் மிகுந்த ஈடுபாடு குழந்தைப் பருவம் முதலே ஏற்பட்டது. தம் கருத்துகளை வட்டார மொழியான ‘பிரிஜ்’ மொழியில் பரப்பினார். பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியினின்று விடுபட்டு பேரின்ப நிலையை அடைய கிருஷ்ணபக்தி அவசியம் என்றார். இவரது பக்திப்பாடல்கள் இனிமையானவை. பக்தி நெறியைச் சுவையான பாடல்கள் வாயிலாகப் பரப்பினர். எளிய பக்தியும், நம்பிக்கையுமே வீடு பேற்றினை அடைய நல்வழி என்றார். பிறப்பால் எவரும் உயர்ந்தவர் இல்லை. உயர்விற்கு காரணம் “செயல்” என்னும் கருத்தைப் பரப்பினார்.
==இதையும் பார்க்கவும்==
|