மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 61:
{{see also|சென் நசேர் திடீர்த்தாக்குதல்|டியப் திடீர்த்தாக்குதல்}}
[[File:Bundesarchiv Bild 101I-291-1205-14, Dieppe, Landungsversuch, alliierte Soldaten.jpg|right|thumb|225px|டியப் திடீர்த் தாக்குதல்]]
1941ல் ஜெர்மனியின் பிரிட்டானியப் படையெடுப்புத் திட்டம் கைவிடப்பட்டவுடன் மேற்குப் போர்முனையில் மந்த நிலை தொடங்கியது. ஜெர்மனியின் கவனம் கிழக்கில் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] திசையில் திரும்பியது. மேலும் ஜெர்மானியப் படைகள் [[வடக்கு ஆப்பிரிக்கக்ஆப்பிரிக்கப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|வடக்கு ஆப்பிரிக்கா]] மீது படையெடுத்தன. பிரிட்டன், பிரான்சில் ஏற்பட்ட தோல்விகளால் சிதறியிருந்த தன் படைகளை சீரமைக்கும் பணியினைத் தொடங்கியது. நாசி ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலிருந்த ஐரோப்பியப் பகுதிகள் மீது அவ்வப்போது [[கமாண்டோ]] தாக்குதல்களை மட்டும் நடத்தி வந்தது. தரையில் அமைதி நிலவினாலும் வான்வழியாக ஜெர்மனி மீது நேச நாட்டு வான்படைகள் தொடர்ந்து [[ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர்|குண்டு வீசித் தாக்கிவந்தன]]. [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலிலும்]] இரு தரப்பு கடற்படைகளுக்கும் இடையெ [[அட்லாண்டிக் சண்டை]] நடந்து வந்தது.
 
ஆனால் மீண்டும் [[ஆங்கிலக் கால்வாய்]] வழியாக மேற்கு ஐரோப்பா மீது படையெடுக்க வேண்டுமென்று நேச நாட்டுத் தலைவர்கள் முடிவு செய்தனர். அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினர். இந்த படையெடுப்புக்கு ஒரு ஒத்திகையாக [[டியப் திடீர்த்தாக்குதல்|டியப் திடீர்த்தாக்குதலை]] மேற்கொண்டனர். இது தோல்வியில் முடிவடைந்தாலும் பின்னாளில் நடக்கவிருந்த நார்மாண்டிப் படையெடுப்புக்கு படிப்பினையாக அமைந்தது. மேற்கிலிருந்து படையெடுப்பு நிகழக்கூடும் என்பதை உணர்ந்த ஜெர்மானியர்கள் மேற்கு ஐரோப்பிய கடற்கரையெங்கும் [[அட்லாண்டிக் சுவர்|அரண்நிலைகளை]] உருவாக்கத் தொடங்கினர்.