சந்திரா இரவீந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''சந்திரா இரவீந்திரன்''' [[பிரித்தானியர்|பிரித்தானிய]], [[ஈழத்து எழுத்தாளர்கள்|ஈழத்து எழுத்தாளர்]]. 1981இல் ''ஒரு”ஒரு கல் விக்கிரகமாகிறது''விக்கிரகமாகிறது” என்ற முதற் சிறுகதை மூலம் [[இலங்கை வானொலி]] வாயிலாக '''சந்திரா தியாகராஜா'''வாக [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கிய]] உலகிற்கு அறிமுகமானார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
சந்திரா இரவீந்திரன் (சந்திரகுமாரி) இலங்கை [[பருத்தித்துறை]]யில் [[ஆத்தியடி]] என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தியாகாராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் நான்காவது புதல்வி. இவர் தனது கல்வியை [[வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி]]யில் பயின்று [[யாழ்ப்பாணம்|யாழ்]] அரசாங்க செயலகத்தில் கடமையாற்றினார். தற்சமயம் [[இலண்டன்|இலண்டனில்]] வசித்து வருகிறார். [[இலண்டன் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்|இலண்டன் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்]] (ஐ.பி.சி.) நிகழ்ச்சித் தயாரிப்பாளராக ஏழு ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர், தற்போது வர்த்தக நிறுவனமொன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மற்றும் 1999ம் ஆண்டிலிருந்து ''''இலண்டன் ஆங்கிலோ தமிழ்ச்சங்கத்'''தின்தமிழ்ச்சங்கத்தின் செயற்குழுவில் இணைந்து தமிழ்ப்பாடசாலையொன்றை நடாத்தும் பணியில் தம்மை அர்ப்பணித்துள்ளதுடன் தற்போது அச்சங்கத்தின் தலைவராகவும் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்..
 
== எழுத்துலக வாழ்வு ==
இவர் [[ஈழம்|ஈழத்தில்]] வாழ்ந்த காலத்தில் இவரின் பல சிறுகதைகள் இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளான [[வீரகேசரி]], [[தினகரன்]], [[ஈழமுரசு]], [[ஈழநாடு]], [[முரசொலி]], [[சிரித்திரன்]], [[மல்லிகை]], [[தமிழ்ஒலி]] ஆகியவற்றில் பிரசுரமாகியுள்ளன. புதுக்கவிதைகளிலும் ஆர்வமுள்ள இவரின் கவிதைகள் சில வானொலிகளிலும், சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுள்ளன. [[1986]]இல் யாழ் இலக்கிய வட்டமும், ஈழமுரசும் இணைந்து நடாத்திய "இரசிகமணி நினைவுக் குறுநாவல்" போட்டியில் இவரது ''"நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்''" இரண்டாவது பரிசினைப் பெற்றுக் கொண்டதுடன், அக் குறுநாவல் பலரது பாராட்டுகளிற்கும் உள்ளாகி, அதே ஆண்டில் "ஈழமுரசு" பத்திரிகையில் தொடராக வெளிவந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிரித்திரன் சிறுகதைப் போட்டிகளிலும் இவரது கதைகள் பரிசில்கள் பெற்றுள்ளன.
 
இவர் இலண்டனுக்குப் புலம் பெயர்ந்த பின்னர் 1992ம் ஆண்டில் பிரான்ஸிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ''"பாரிஸ் ஈழநாடு'" பத்திரிகை நடாத்திய ஐரோப்பிய எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் இவரது ''''"அக்கினியில் கருகும் ஆத்மாக்கள்''''" சிறுகதை தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது.
 
பின்னர் இவர் எழுதிய குறிப்பிடத்தக்க சிறுகதைகள் 'காலச்சுவடு' பதிப்பகத்தினரால் தொகுக்கப்பட்டு, 2011ம் ஆண்டில் 'நிலவுக்குத் தெரியும்' என்ற சிறுகதைத் தொகுப்பாக தமிழ்நாட்டில் வெளியானது.
"https://ta.wikipedia.org/wiki/சந்திரா_இரவீந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது