தியாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
தோழர் தியாகு - வாழ்க்கைக் குறிப்பு
வரிசை 1:
தோழர் தியாகு இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் சமூகப் போராளி. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளரான இவர் இவர் மார்க்சிய சித்தாந்தத்தில் தேர்ச்சி பெற்றவராக அறியப்படுபவர். காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளார். தற்போது “வெற்றி அல்லது வீரச்சாவு” எனும் முழக்கத்துடன் இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது, இந்தியா இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாநிலைப் போரினை மேற்கொண்டுள்ளார்.
'''தியாகு''' இந்தியாவில் இடதுசாரி புரட்சியை நம்பி [[நக்சலைட்]] களமுனைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர். முதலில் [[சாரு மஜூம்தார்]] வழிநடத்தலை ஏற்று "அழித்தொழிப்பு" நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.<ref>http://www.keetru.com/literature/interview/thiyagu_1.php</ref> 1960களில் ஒரு நிலச்சுவாந்தாரைக் கொலை செய்ததற்காக இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிறைவாசத்தின் போது அழித்தொழிப்பு வன்முறை இந்திய சூழலுக்கு ஏற்புடையதல்ல என்று தியாகு மனம் மாறினார். இந்திய பொதுவுடமைக் கட்சியிலிருந்து (மார்க்சியம் லெனினியம்) விலகினார். 1980களில் அவரது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு 1985ல் விடுதலை செய்யப்பட்டார். பின்பு [[சிபிஎம்|மார்கிசிய கம்யூனிஸ்ட் கட்சியில்]] இணைந்தார். தற்போது [[பழ. நெடுமாறன்|நெடுமாறனின்]] தமிழ் தேசிய இயக்கத்துடன் இணைந்து செயல்படுகிறார். அண்மையக் காலங்களில் [[மக்கள் தொலைக்காட்சி]]யில் சங்கப்பலகை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
 
இளமைப் பருவம்:
இவர் இடதுசாரி சிந்தனைகளை தாங்கிய பல படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். இவற்றுள் முதன்மையானது [[கார்ல் மார்க்ஸ்|கார்ல் மார்க்சின்]] [[மூலதனம் (நூல்)|மூலதனம்]] ஆகும். பல தூயத் தமிழ் பள்ளிகளையும் நடத்தி வருகிறார்.<ref>[http://www.keetru.com/literature/interview/thiyagu.php நக்சலைட் பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன்: தியாகு நேர்காணல்: மினர்வா & நந்தன்]</ref> .
 
தோழர் தியாகுவினுடைய பூர்வீகம் சந்திரசேகரபுரம் அருகே உள்ள நல்லம்பூர். அவருடைய அப்பா திருவாரூரில் ஆசிரியராக வேலை பார்த்தார். தோழர் தியாகு பிறந்து வளர்ந்த்து எல்லாம் திருவாரூரில்தான். சிறு வயதிலிருந்தே திருவாரூரில் பெரியார், அண்ணா, ஜீவானந்தம், காமராசர், கலைஞர் போன்ற பல தலைவர்களின் பொதுக்கூட்டங்களை ஆர்வமாக்க் கேட்டு வளர்ந்தார் தோழர் தியாகு. அக்காலத்தில் படிப்பகங்களில் கிடைத்த தி.மு.க, காங்கிரஸ், தமிழ்த் தேசிய ஆற்றல்கள் உள்ளிட்ட அனைத்துப் பத்திரிக்கைகளையும் விடாமல் வாசிக்கும் பழக்கமிருந்தது.
== ஆதாரங்கள் ==
அரசியல் அறிமுகம்:
<references/>
1965 ஆம் ஆண்டு, அவரது குடும்பம் வலங்கைமானுக்கு குடி பெயர்ந்த்து. அங்கு ஒரு தட்டச்சுப் பள்ளியில் சேர்ந்த தோழர் தியாகு, அதனை நடத்திவந்த திரு.அமீர்ஜான் என்பவரோடு நண்பரானார். தீவிர சாதி, சமய மறுப்பாளரான திரு.அமீர்ஜான் தோழர் தியாகுவை நாத்திகனாக மாற்றியதோடு அவரது சிந்தனை முறையிலும் தீவிர தாக்கங்களை உண்டாக்கினார். பெரியாரிடமிருந்து பிரிந்துவந்த குத்தூசி குருசாமி போன்றோர் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினர். அவர்கள் ஏற்பாடு செய்திருந்த முதல் மாநாட்டிற்கு திரு அமீர்ஜானுடன் சென்றபோது அங்கே மார்க்ஸ், லெனின் போன்றோரது புத்தகங்கள் விற்கப்பட்டன. அப்போதுதான் தோழர் தியாகுவிற்கு முதன்முதலில் மார்க்சியத்தோடு பரிச்சயம் ஏற்பட்டது.
 
காங்கிரஸ் அனுபவம்:
[[பகுப்பு:தமிழ் பொதுவுடமைவாதிகள்]]
 
[[பகுப்பு:நக்சலைட்டுகள்]]
பொதுவுடைமை புத்தகங்களை அதிகமாக வாங்கிப் படித்த தியாகு அச்சிந்தனையில் ஈர்க்கப்பட்ட அதேவேளையில், அவரது காங்கிரஸ் கட்சி நண்பர்கள் பலரது வற்புறுத்தலின்பேரில், 1967இல், ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் தனது முதல் உரையை ஆற்றினார். 1967 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தபின் காமராசரின் தூண்டுதலில் தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழு என்ற அமைப்பு உருவானது. அதன் மாநாட்டில் பேசுவதற்காக தோழர் தியாகு முதன்முதலில் சென்னை சென்றார். காமராசர், கண்ணதாசன், ஜெயகாந்தன் உள்ளிட்ட பலர் அமர்ந்திருந்த மேடையில், யாருக்கும் அஞ்சாமல் துணிந்து தன்னுடைய கருத்துக்களை முன்வைத்ததால் அவரது உரைய இரசித்த காமராசர் அன்று முதல் எங்கு மாநாடு நடந்தாலும் தோழர் தியாகுவையே முதலில் பேசுமாறு பணித்தார்.
[[பகுப்பு:தமிழ்த் தேசியர்கள்]]
 
பொதுவுடைமையில் நாட்டம்:
 
பொதுவுடைமைச் சித்தாந்த்தால் முழுமையாக கவரப்பட்ட தோழர் தியாகு காங்கிரஸ் ஒரு பணக்காரக் கட்சி என்பதையும் அது பொதுவுடைமையையும் சமநீதியையும் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை என்பதையும் உணர்ந்து கொண்டார். Liberation பத்திரிக்கையில் வெளியான பேட்டியில் நக்சல் இயக்கத்தின் தலைவரும் இந்தியப் பொதுவுடைமை(மார்க்சிய-லெனினிய) கட்சியின் பொதுச் செயலாளருமான சாரு மஜும்தார், “மாணவர்கள் படிப்பை விட்டு குடும்பத்தைத் துறந்து கிராமங்களுக்குச் சென்று, ஆயுதப் போராட்டத்தை உருவாக்க வேண்டும். அழித்தொழிப்பு(Annihilation) தான் நம்முடைய ஒரே முழக்கம்” எனக் கூறியிருந்தார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியையும் இந்தியப் பொதுவிடைமை(மார்க்சிய) கட்சியையும் அவற்றின் செயல்பாடுகளையும் நிராகரித்த இந்தியப் பொதுவுடைமை(மார்க்சிய-லெனினிய) கட்சியின் அழித்தொழிப்புக் கொள்கையினால் கவரப்பட்ட தோழர் தியாகுவின் மேல் கீழ்வெண்மணி சாதீயப் படுகொலை மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. ஆதிக்கச் சாதியனராகவும் பெரிய நிலச்சுவாந்தாரகளாகவும் இருந்த ஆதிக்கக் கும்பலை அழிக்கும் நோக்கில் 1969 இல்,தன் கல்லூரிப் படிப்பைத் துறந்து, வீட்டைவிட்டு வெளியேறி நக்சல் இயக்கத்தில் இணைந்தார்.
 
சிறைவாசம்:
 
அமைப்புத் தோழர்களுடன் சேர்ந்து அழித்தொழிப்பு வேளையில் ஈடுபட்டிருந்த தோழர் தியாகு 1970 ஆம் ஆண்டு,தனது பத்தொன்பதாவது வயதில் சிறையிலடைக்கப்பட்டார். 1971 இல் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னரே தன் தோழர்களுடன் தப்பிக்க முயற்சி செய்தார். சிறையில் இருந்தாலும் தோழர்கள் சோர்ந்துவிடவில்லை எனும் செய்தியைக் கட்சிக்கு அனுப்புவதே அவர்களது நோக்கமாக இருந்தது. பின்னாட்களில் அவரது தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது, சிறையிலடைக்கப் பட்டாலும் பிற தோழர்களுடன் சேர்ந்து தங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடினார். ”சிறைப்படுத்தப்பட்டோர் நல உரிமைச் சங்கம்”, “எழுத்தறிவு இயக்கம்” போன்ற பல செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்துவந்தார். சிறையிலிருந்த காலகட்ட்த்தில் லெனினின் எழுத்துக்களை அதிகம் வாசிக்கத் தொடங்கிய தோழர் தியாகு, இந்தியப் பொதுவுடைமை(மா.லெ) கட்சியின் எதார்த்தத்துக்குப் புறம்பான அழித்தொழித்தல் கொள்கையின் தோல்வியை உணர்ந்தார்.
 
மூலதனம் மொழிபெயர்ப்பு
 
1975 இல் தோழர் தியாகு சிறையிலிருந்தவாறே காரல் மார்க்ஸ் எழுதிய ”மூலதனம்” புத்தகத்தின் முதல் பகுதியை மொழிபெயர்க்கத் தொடங்கினார். தோழர் பாலசுப்பிரமணியத்தின் வேண்டுகோளுக்கிணங்கி மீதமுள்ள மூலதனத்தின் இரண்டு பகுதிகளையும் 1980, ஜனவரியில் தொடங்கி, நவம்பரில் முடித்தார். அந்தப் புத்தகம் NCBHஆல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.1983 இல், தமிழகத்தில் ஈழப் போராட்டம் வலுப் பெற்றபோது, சிறைக்குள்ளும் பெரிய எழுச்சிகள் ஏற்பட்டன. அக்காலத்தில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தோழர் தியாகு, 1500 கைதிகளைத் திரட்டி ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தினார். சிறையிலிருந்தபோதே தன்னை இந்தியப் பொதுவுடைமை(மார்க்சிய) கட்சியில் இணைத்துக் கொண்ட தோழர் தியாகு,1985 நவம்பர் மாத இறுதியில் சிறையிலிருந்து விடுதலையானார்.
 
அரசியல் செயல்பாடுகள்:
 
தொடக்கத்திலிருந்தே இந்தியப் பொதுவுடைமை(மார்க்சிய) கட்சியின் ஈழம் சார்ந்த தவறான கொள்கைகளை துணிவுடன் சுட்டிக்காட்டியவர் தோழர் தியாகு. 1989 செப்டம்பர் 11 அன்று, ஈழத்தில் திலீபன் தன் உண்ணாநிலைப் போராட்டத்தைத் துவக்கினார். அவருக்கு ஆதரவாக தோழர் தியாகுவும் சிலரும் சேர்ந்து ”திலீபன் அறிமுக மன்றம்” ஒன்றை ஆரம்பித்தனர். அன்று நடைபெற்ற கூட்டத்தில், தோழர் தியாகு ஈழப் போராட்டத்தைப் பற்றி மக்களிடம் விரிவாக விளக்கினார். ஈழப் போராட்டம் குறித்து தவறான பார்வையை விமர்சிக்கவும் அவர் தயங்கவில்லை. மறுநாள் அவர் இந்தியப் பொதுவுடைமை(மார்க்சிய) கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். 1993 இல் சுப. வீரபாண்டியனுடன் இணைந்து தோழர் தியாகு “தமிழ்த் தமிழர் இயக்கம்” துவங்கினார். பின்னாளில் அதிலிருந்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உருவானது.தமிழ்த் தமிழர் இயக்கம், தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட நான்கு அமைப்புகள் இணைந்து தமிழ்த் தேசிய முன்னனியை உருவாக்கின. தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளான காவிரி நதிநீர்ப் பங்கீடு, முல்லைப் பெரியாறு உள்ளிட்டவைகளுக்கு வீரியத்துடன் இக்கூட்டமைப்பு முன்னெடுத்த்து. தமிழ்த் தேசிய விடுதலைக் கட்சி உருவானபோது அதன் விடுதலை முழக்கமாக ”சமூகநீதித் தமிழ்த் தேசம்” முன்வைக்கப்பட்டது. சமூக நீதியை உள்ளடக்கிய தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.
 
இனப்படுகொலைக்குப் பின்:
 
2009 இன் ஈழப் போரின் இறுதியில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இயக்கங்களும் கட்சிகளும் பிரபாகரன் திரும்பி வருவார், அடுத்தகட்ட ஈழப் போர் நிகழும் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில் ஈழப் போராட்டத்தில் புலிகளின் பாத்திரம் முடிந்துவிட்டது, ஈழப் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது என்பதை உணர்ந்து வெளியிட்டவர் தோழர் தியாகு. ஈழப் போரின் உச்சத்தில் தமிழகத்தினால் இந்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்க முடியாதமைக்குக் காரணம் வெகுமக்கள் அணிகளைக் கொண்ட ஒரு வலிமையான தமிழ்த் தேசிய இயக்கம் இல்லாததே இதற்கு காரணம் என்று உணர்ந்துகொண்டவர் தோழர் தியாகு.
தாய்த் தமிழ் பள்ளி:
தோழர் தியாகு தமிழ்த் தேசிய விடுதலை உணர்வை மக்களிடம் கட்டி எழுப்பும் முயற்சியின் ஒரு பகுதியாக தாய்த் தமிழ்ப் பள்ளிகளைத் துவக்கினார். நாளைய தலைமுறையினரான குழந்தைகளுக்கு தமிழுணர்வு ஊட்டுவதும், அதன்மூலம் தமிழ்த் தேசிய உணர்வுக்கான அடித்தளத்தை அமைப்பதே இப்பள்ளிகளின் பிரதான அரசியல் நேக்கமாக இருந்து வருகிறது.தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள தாய்த் தமிழ்ப் பள்ளிகள், தமிழகமெங்கும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
 
வெற்றி அல்லது வீரச்சாவு:
 
ஈழப் போருக்குப் பிந்தைய காலத்தில் பல்வேறு தமிழக அரசியல் இயக்கங்கள் அடையாளப் போராட்டங்களிலே சிக்குண்ட இக்காலகட்டத்திலே, தமிழர்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் விதமாக அக்டோபர் 1, 2013 லிருந்து, இலங்கையைக் காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும், இனப்படுகொலை நடந்த அம்மண்ணில் காமன்வெல்த் நடைபெறக் கூடாது. மீறி நடந்தால் இந்தியா அதில் கலந்துகொள்ளக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, “வெற்றி அல்லது வீரச்சாவு” எனும் முழக்கத்துடன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/தியாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது