நான்காம் ஏட்ரியன் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆங்கில விக்கியோடு ஒப்பிட்டு ஆதாரமற்றப்பகுதி நீக்கப்படுகின்றது
வரிசை 24:
சிசிலி நாட்டு அரசர் வில்லியம், வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டிருந்தார்.
 
காம்பெக்னாவிலுள்ள் குறுநில அதிபர்கள் தங்களுக்கிடையே சண்டையிட்டதோடு நின்று விடாமல், திருத்தந்தையையும் தாக்க முனைந்தனர். திருத்தூர்களின் கல்லறைகளுக்கு வந்த திருப்பயணிகளையும் கொள்ளையடித்தனர். பிரெசியாவின் ஆர்னால்டு தலைமையில் உரோமைக்குடிமக்களும் வன்முறையில் ஈடுபட்டனர். 1155 ஜனவரியில் கர்தினால் ஜெரார்டஸ் தனது இல்லம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதனால் உரோமையில் தடை உத்தரவுபோடப்பட்டது. இதனால் விட்டர்போ சென்றார் திருத்தந்தை. இயேசுவின் [[உயிர்ப்பு ஞாயிறு|உயிர்ப்புப் பெருவிழா]] நெருங்கிக் கொண்டிருந்தால், உரோமை மக்களும் பிரபுக்களும் (Roman Senate) விடர்போவுக்குச் சென்று திருத்தந்தையிடம் இனி கலவரங்களை உருவாக்காமலிருப்பதாக வாக்குறுதி அளித்தனர். அதனால் திருத்தந்தை உரோமை நகருக்குத் திரும்பினார். பிரச்சனைகளுக்குக் காரணமாயிருந்த ஆர்னாடு நாடுகடத்தப்பட்டார். இவர் 1159 செப்டம்பர் முதல் நாளில் இறந்தார்.
 
இந்த வேளையில், லம்பார்டி வழியாக முன்னேறிக் கொண்டிருந்தான் உரோமை நகருக்கு வந்து திருத்தந்தையினால் மகுடம் சூட்டப்பட வேண்டும் என்பது அவனது விருப்பம். 1155 ஜுன் 9ம்- நாள் சுத்ரி என்ற இடதில் பாப்புவைச் சந்திதான். ஆனால், அவனுக்கு முடிசூட்ட முடியாது என்று பாப்பு மறுத்துவிட்டார். இரண்டு நாள்களுக்குப் பிறகு நேப்பி என்ற இடதில் பாப்புவைச் சந்தித்து, அவர் முன் முழந்தாளிட்டு பாப்புவின் அதிகாரத்திற்க்கு கட்டுப்பட்டு நடப்பதாக உறுதியளித்தான்… இரண்டு நாளுக்குப்பிறகு புனித பேதுரு பசிலிக்காவில், மன்னனாக முடி சூட்டினார் பாப்பு. மன்னன் பிரடெரிக் முடி சூட்டுவிழா நடந்து கொண்டிருந்த போது, உரோமைப் படைவீரர்கள் ஜெர்மனிய படை விரர்களுடன் போராடிக் கொண்டிருந்தனர். இரவு வேளையில் போர் நின்றபோது உரோமானியார் தோற்கடிக்கப்பட்டிருந்தனர். 200 உரோமானியப் போர் வீரர்கள் கைது செய்யப்பட்ட்னர். ஆயிரத்துக்கு மேற்பட்ட படைவீரர்கள் போர்க்களத்தில் பலியாகிருந்தனர். பிரடெரிக் உரோமையில் நீண்டநாள் தங்க முடியாததால் நகரைவிட்டு வெளியேறினான்- பாப்புவுக்கும் உரோமைக் குடிமக்களுக்கும் பகையை மூட்டி விட்டு..! சிசிலி நாட்டு மன்னன் வில்லியம் இத்தாலியில் இருந்தான். அவனை ஏற்றுகொள்ள பாப்பு மறுத்து விட்டார், எனினும் 1156-ல் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டனர்.அதன்படி நேப்பின்ஸ், சலேர்னோ, அங்கோனா நகரங்களின் மீது அரசனுக்கு உரிமையளித்தார் பாப்பு. இதை கேள்விப்பட்ட அரசன் பிரடெரிக் சினம் கொண்டான். ஏனெனில், முறையான உரிமைப்படி இந்த மூன்று நகரங்களும் இவனுக்குச் சொந்தமானவை.
 
இவர் 1159 செப்டம்பர் முதல் நாளில் இறந்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நான்காம்_ஏட்ரியன்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது