புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ஆலயம், கண்டன்விளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 22:
}}
 
உலகிலேயே [[லிசியே நகரின் தெரேசா|புனித குழந்தை இயேசுவின் திரேசாளுக்கு]] கட்டபட்ட முதல் ஆலயம் என்னும் பெருமையுடன் திகழும் ஆலயம் கண்டன்விளையில் அமைந்துள்ள புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ஆலயம்.இவ்வாலயம் 1929-ஆம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்டு அதே ஆண்டு திருவிழாவும் கொண்டாடப்பட்டது. இந்த ஆலயம் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்-திங்கள்நகர் நெடுஞ்சாலையில் நாகர்கோவிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் ஒலிக்கும் மணிகள் திரேசாளின் சொந்த சகோதரிகளால் வாங்கி அனுப்பப் பட்டவை. புனிதையின் பேரொளிக்கம் மக்களின் வணக்கத்திற்காக இவ்வாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருவிழா செப்டம்பர் மாதம் கடைசி வெள்ளி கொடியேற்றத்துடன் 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
 
== புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ==
தெரசா பிரான்ஸ் நாட்டில் அலேசான் என்னும் இடத்தில் கி.பி. 1873-ம் ஆண்டு சனவரி திங்கள் 2-ம் நாள் பிறந்தார். இவரது இயற்பெயர் மரி ஃப்ரான்சுவா தெரேஸ் மார்த்தின்.15 வயதே நிரம்பிய தெரேசா தம் இறை ஆர்வத்தால் திருதந்தையின் சிறப்பு அனுமதி பெற்று , 1888-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9-ம் நாள், கார்மேல் சபையில் சேர்ந்தார். கார்மேல் மடத்தில் பெரும்பான்மையான துன்பங்களை பிற சகோதரிகளாலும் நோயினாலும் அனுபவித்தார். அவர் காச நோயால் பாதிக்கப்பட்டு,1897-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 30-ம் நாள் தம் 24ஆம் அகவையில் இறையடி எய்தினார். இவருக்கு முத்திப்பேறுபெற்ற பட்டம் 1923-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29-ம் நாள் வழங்கப்பட்டது.புனிதர் பட்டம் 1925-ம் ஆண்டு மே திங்கள் 17-ம் நாள் திருதந்தை பதினொன்றாம் பயஸால் வழங்கப்பட்டது.
 
== ஆலயத்தில் திருப்பலி ==