அரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
==தொடக்கம்==
 
திராவிட வேதம் தொகுத்த [[நாதமுனிகள் | நாதமுனிகளால்]] ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அரையர் சேவையை துவக்கி வைக்கபட்டது<ref>[http://www.tamilvu.org/courses/diploma/p202/p2022/html/p20223l5.htm திருக்கோயில்களில் திவ்வியப்பிரபந்தம் (தமிழ் இணையக் கல்விக்கழகம்)]</ref>. மேலை அகத்து ஆழ்வான் மற்றும் கீழை அகத்து ஆழ்வான் எனும் தன்னுடைய இரண்டு மருமகன்களுக்கும் நாதமுனிகள் நாலாயிர பிரபந்தங்களைப் பண் மற்றும் தாளத்துடன் கற்பித்ததாகவும் இவர்கள் வழி வந்தவர்களும் இவர்களிடம் கற்றவர்களுமே இன்று தமிழகமெங்கும் உள்ள அரையர்கள் என நம்பப்படுகிறது.முதன் முதலில் இச்சேவை [[திருவரங்கம்|திருவரங்கத்]]தில் துவக்கப்பட்டது.
 
==அரையர் சேவை==
 
திருக்கோயில் உற்சவர் முன் நடைபெறும் அரையர் சேவையின் போது அரையர்கள் பஞ்சகச்சம் அணிந்து, அரையர் குல்லாய் எனப்படும் கூம்பு வடிவத் தொப்பியும் இறைவனுக்குச் சாத்தப்பட்ட மாலையோடு வழக்கமான வைணவசின்னங்களையும் அணிந்திருப்பர்.காதுகளை மறைக்கும் வகையில் இரண்டு பட்டைகள் தொங்கும். குல்லாய் முழுவதும் சரிகை வேலைப்பாடுடன் அமைந்திருக்கும். இத்தகு அரிய கலை வைணவ கோயில்களில் மட்டும் காணப்படும்.
 
உற்சவர் முன்பு நிகழ்த்தப்படும் இச்சேவையானது மூன்று பகுதிகளைக் கொண்டது. பிரபந்தத்தின் குறிப்பிட்ட பாடலை பாடுவது முதலாவதாகவும், பாடப்பெற்ற பிரபந்தத்தின் பொருளுக்கு ஏற்றாற்போல் அபிநயம் பிடித்து ஆடுவது இரண்டாவதாகவும், பாடலின் உட்பொருளை விளக்கிக் கூறுவது மூன்றாம் பகுதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது இச்சேவை.
 
இந்நிலையில் அரையர் ஒருவரே பல்வேறு பாத்திரங்களாக வேடப்புனைவு மாறுதல் இன்றி அவிநயிப்பர். காட்சி மாற்றங்களை, மாந்தர் கூற்று வழியே பாகுபடுத்துவர். பாசுரத்தின் ஒரு தொடருக்குப் பல நிலைகளில் அவிநயம் செய்யும் சிறப்பினை இக்கலையில் காணலாம்.
 
==சிறப்பு==
 
பலநாட்கள் பயிற்சிக்கு பின்னே அரையர்களை இச்சேவையை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.மேலும் நிரம்பிய மொழிப்புலமை இச்சேவைக்கு அடித்தலம் என்பதால் பொதுவாகவே அரையர்கள் தமிழ்மொழியிலும், பிர்பந்தத்திலும்பிரபந்தத்திலும் மிகுந்த புலமை மிக்கவர்களாகவும் உள்ளனர்.
அரையர்களுக்குத்அரையர்,அறையர்,விண்ணப்பம் செய்வார்,பாடுவான்,இசைக்காரர்,தம்பிரான்மார் என்றஎன்றெல்லாம் பெயரும்இவர்கள் உண்டுஅழைக்கப்படுகின்றனர். பிரபந்தங்களில் அரையர்கள் தமிழ்ச் சூர்ணிகைகளைச் சேர்த்துள்ளனர்.<ref>{{cite encyclopedia | title=அரையரின் தமிழ்ப் புலமை | encyclopedia=கலைக்களஞ்சியம் | publisher=தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை | year=1954 | volume=1 | edition=1 | pages=203}}</ref>
 
ஆழ்வார் பாசுரங்களை இசையுடன் பாடி அனுபவித்து அவற்றின் விளக்கங்களை அழகுறப் பேசி நடிக்கும் முத்தமி்ழ்க்கலையே அரையர்சேவையாகும். பாசுரத்தைப் பண்ணுடன் பாடுதல், பாசுரத்திற்கு அபிநயம் செய்தல்,பாசுரத்திற்கு உரை கூறுதல் என்னும் முறையில் இக்கலை ஆழ்வார் பாசுரங்களுக்கு இயற்பா, இசைப்பா எனப் பகுப்போடு அமையாது, முத்தமி்ழின் மூன்றாம் கூறான நாடகத் தமிழையும் இணைத்துப் முத்தமிழ் வடிவம் கொடுத்துள்ளது.
 
 
==தற்காலம்==
"https://ta.wikipedia.org/wiki/அரையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது