ஐந்திணை ஐம்பது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
[[பதினெண்கீழ்க்கணக்கு]] நூல்களுள் அகப்பொருள் கூறும் நூல்களுள் ஒன்று '''ஐந்திணை ஐம்பது'''. இதை எழுதியவர் [[மாறன் பொறையனார்]] என்னும் புலவர். இது கி.பி நான்காம் [[நூற்றாண்டு|நூற்றாண்டைச்]] சேர்ந்த நூல் எனக் கருதப்படுகின்றது.
 
[[முல்லைத் திணை|முல்லை]], [[குறிஞ்சித் திணை|குறிஞ்சி]], [[மருதத் திணை|மருதம்]], [[பாலைத் திணை|பாலை]], [[நெய்தற் திணை|நெய்தல்]] என நிலங்களை ஐந்து திணைகளாகப் பிரிப்பது பண்டைத் [[தமிழர்]] வழக்கு. அக்காலத் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியங்களிலும்]], அவ்விலக்கியங்களில் எடுத்தாளப்படும் விடயங்களுக்குப் பின்னணியாக இத்திணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. சொல்ல விழைந்த கருப்பொருளின் தன்மைகளுக்கேற்ப உருவாக்க வேண்டிய மனநிலைகளுக்குப் பொருத்தமான பின்னணிச் சூழ்நிலைகளை இத் திணைகளில் ஒன்றோ பலவோ வழங்கின.
 
ஐந்திணை ஐம்பதில், மேற்காட்டிய ஒவ்வொரு திணையின் பிண்னணியிலும் பத்துப் பத்துப் பாடல்களாக ஐம்பது பாடல்கள் உள்ளன.
 
==எடுத்துக்காட்டு==
 
பாலைத் திணையைப் பின்னணியாகக் கொண்ட ஒரு பாடல் இது. வாழ்ந்த சூழலின் வசதிகளையும், பசுமையான நினைவுகளையும் விடுத்துக் [[காதலன்|காதலனுடன்]] வரண்ட பாலைநிலப் பகுதியூடாகச் செல்கிறாள் தலைவி. பாலை நிலத்துக்கே இயல்பான கடுமை வாட்டும் எனினும் [[காதல்]] வயப்பட்ட உள்ளங்களுக்கே இயல்பான விட்டுக்கொடுப்புக்கள் அவர்களை மேலும் நெருக்கமாக்கும். இக்கருத்தை விளக்கும் இனிய பாடலொன்று இந் நூலில் வருகின்றது.
 
: ''சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்''
"https://ta.wikipedia.org/wiki/ஐந்திணை_ஐம்பது" இலிருந்து மீள்விக்கப்பட்டது