சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 17:
'''சரசுவதி''' [[இந்து சமயம்|இந்து சமயத்தினர்]] வணங்கும் முக்கியமான [[இறைவி|பெண் கடவுளரில்]] ஒருவர். படைப்புக் கடவுளான [[பிரம்மா|பிரம்மாவின்]] சக்தியாகக் கொள்ளப்படுகிறார். ''சரசுவதி'' என்னும் சமசுகிருதச் சொல் நகர்தல், ஆற்றொழுக்காகச் செல்லல் ஆகிய பொருள்களைக் கொண்ட ''ஸ்ர்'' என்னும் வேரின் அடியாகப் பிறந்தது. [[இருக்கு வேதம்|இருக்கு வேதத்தில்]] சரசுவதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. நீர், இந்துக்களின் பார்வையில் வளமை, படைப்பு, தூய்மைப்படுத்தல் முதலியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதனால்தான் சரஸ்வதியும் இத்தகைய கருத்துருக்களோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளாள்.
 
'பேச்சுக் கலையின் தேவதை' எனப் பொருள்படும் ‘வக் தேவி' என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள்.<ref name="thehindu.com">[http://www.thehindu.com/news/cities/chennai/chen-arts/chen-music/thesong-of-saraswati/article4218020.ece 'Seasoned Snippets' எனும் தலைப்பில் 'த இந்து' ஆங்கில நாளிதழில் (டிசம்பர் 20, 2012) எழுதப்பட்ட ஒரு துணுக்குத் தோரணம்] </ref>
 
இந்துக்கள், சரசுவதியைக் கல்விக் கடவுளாகவும், எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதுகிறார்கள். [[அறிவு]], ஒளியாகவும், அறியாமை இருளாகவும் கருதப்படுகின்றது. இதனால்தான் சரசுவதியை [[வெள்ளை|வெண்மை]] நிறத்தோடு தொடர்பு படுத்துகிறார்கள். வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளாகவும், சரசுவதியைச் சமய நூல்கள் வர்ணிக்கின்றன.
 
[[சரசுவதி இராகம்|சரசுவதி]] எனும் பெயரில் இராகம் ஒன்றும் உள்ளது.
 
==சமயங் கடந்த தெய்வம்==
வரிசை 36:
மகா சரஸ்வதி, ஆர்ய சரஸ்வதி, வஜ்ரவீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ர சரஸ்வதி என ஐந்து பெயர்களில் சரஸ்வதி பௌத்தர்களால் வணங்கப்படுகிறார்.
 
எனவே டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் சரஸ்வதியை ''கலைமகள் சமயங் கடந்த தெய்வம்'' என குறிப்பிடுகிறார்.
 
== தோற்றமும் குறியீடும் ==
அழகிய தோற்றம் கொண்டவளாகவும், நான்கு கைகளைக் கொண்டவளாகவும், வெள்ளை உடை உடுத்து, வெண் [[தாமரை]]யில் அமர்ந்திருப்பவளாகவும், நான்கு கைகளில் ஒன்றில் செபமாலையும், மற்றொன்றில் [[ஏடு]]ம், இருக்க, முன் கைகள் இரண்டிலும் [[வீணை]]யை வைத்து மீட்டுபவளாகச் சரசுவதி உருவகப்படுத்தப்படுகிறாள். செபமாலை ஆன்மீகத்தையும், ஏடு அறிவையும், வீணை கலைகளையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது.
 
கலைமகளின் கையிலிருக்கும் ஜபமாலைக்கு ''அட்சமாலை'' என்று பெயர். இம்மாலை சமஸ்கிருதத்தின் எழுத்துகளின் எண்ணிக்கைக்கு சமமாக ஐம்பத்தொன்று மணிகளை உடையதாக உள்ளது. மொழி வடிவில் இம்மாலை இருப்பதாக கூறுகிறார்கள்.
 
கலைமகளின் வாகனமாக அன்னப் பறவை உள்ளது.
 
==சரஸ்வதிக்கென நூல்கள் ==
வரிசை 49:
சரஸ்வதியைப் பற்றி தமிழில் சரஸ்வதி அந்தாதி எனும் நூலை கம்பரும், சகலகலாவல்லி மாலை என்ற நூலை குமரகுருபரரும் இயற்றியுள்ளார்கள்.
 
==வழிபாடு<ref name="thehindu.com"/>==
==வழிபாடு<ref>[http://www.thehindu.com/news/cities/chennai/chen-arts/chen-music/thesong-of-saraswati/article4218020.ece 'Seasoned Snippets' எனும் தலைப்பில் 'த இந்து' ஆங்கில நாளிதழில் (டிசம்பர் 20, 2012) எழுதப்பட்ட ஒரு துணுக்குத் தோரணம்] </ref>==
 
* தமிழ்நாடு கூத்தநூரில் தனி ஆலயம் உள்ளது.
வரிசை 68:
 
{{குறுங்கட்டுரை}}
 
{{இந்து தர்மம்}}
 
[[பகுப்பு:இந்து பெண் தெய்வங்கள்]]
[[பகுப்பு:சாக்தம்]]
{{இந்து தர்மம்}}
"https://ta.wikipedia.org/wiki/சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது