லண்டன் வன்முறைகள் 2011: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 40 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி clean up |
||
வரிசை 38:
== பின்னணி ==
வடக்கு லண்டன், டோட்டன்ஹாம் பகுதியில் கறுப்பின இளைஞர் ஒருவர் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன், இங்கு சிக்கல் ஆரம்பித்தது. [[ஆகத்து 4]] ல் மார்க் டக்கன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய கலப்பின இளைஞர் ஒருவரைப் பொலீஸார் சுட்டுக்கொன்றனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் [[ஆகத்து 6]] திகதி புரோட்வோட்டர் பாமில் இருந்து டோட்டன்ஹாம் காவல் நிலையம் வரை அமைதி ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. காவல் நிலையம் முன் திரண்டு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்து கலைத்தபோது, கலவரம் பரவியது. சிறியளவிலான ஆர்ப்பாட்டமே இவ்வாறு பாரிய கலவரமாக அங்குள்ள பல நகரங்களுக்கும் வியாபித்தது.
== தொடரும் கலவரங்கள் ==
வரிசை 47:
== கலவரத்துடன் தொடர்புடைய முதலாவது மரணம் ==
தெற்கு லண்டனில் [[ஆகத்து 8]] அன்று நடந்த வன்செயல்களின் போது சுடப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். கலவரத்துடன் தொடர்புடைய முதலாவது மரணமாக இது கூறப்படுகிறது. பர்மிங்ஹாமில் வின்சன் கிறீன் என்ற இடத்தில் வீதிக் கலவரங்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து தமது குடும்பத்தினரையும் சுற்றுப் புறத்தையும் காப்பதற்காகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பாக்கித்தானிய இளைஞர்கள் மீது ஆகத்து 9 அன்று வன்முறைக் கும்பல் ஒன்று வாகனம் ஒன்றை ஏற்றிக் கொன்றனர்.<ref>
== தகவல் பரிமாற்றம் ==
வரிசை 57:
== நாடு திரும்பிய பிரதமர் ==
[[படிமம்:Welcome to Hackney, 2011 riots.jpg|
[[படிமம்:Greater London UK location map 2.svg|
{{Location map+|England|
|caption=ஆகத்து 8 ஆம் நாளில் கலவரங்கள் இடம்பெற்ற பகுதிகள்
வரிசை 73:
{{location map~|England|lat= 51.454|long= -0.973}} <!-- Reading -->
}}
[[படிமம்:
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் தனது இத்தாலி விடுமுறை சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு, ஆகத்து 9 ம் திகதி நாடு திரும்பினார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பாக, நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். இது குறித்து டேவிட் கேமரன் கூறுகையில், "பிரிட்டனில் மேலும் கலவரங்கள் நடக்காமல் தடுக்க எல்லா முயற்சிகளையும் பொலிசார் எடுப்பார்களென்றும், தேவைப்படும் பட்சத்தில் கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து தாக்குதல் நடத்த பொலிசார் தயங்கமாட்டார்கள்" எனவும் பிரதமர் உறுதியளித்தார்.
வரிசை 90:
லண்டனை சுற்றி 16 ஆயிரம் காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு சற்று அமைதி நிலவியதாகத் தெரிவிக்கப் படுகின்றது. ஆங்காங்கே ஒரு சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெஸ்ட் மிடிலாண்ட் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் கலகக்காரர்கள் இன்னும் ஒடுக்கப்படாததால் அங்கு கலவரங்கள் தொடர்கின்றன. மான்செஸ்டர் நகரின் மையப்பகுதியில் உள்ள மகளிர் ஆடையகம் ஒன்று முழுவதும் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
கலவரத்துடன் தொடர்புடைய 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். கண்காணிப்பு கேமிராவில் பதிவு செய்யப்பட்ட காட்சியினை வைத்து 68 வயது முதியவர் ஒருவரை , 16 வயது சிறுவன் அடித்து கொன்றதாக அவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
== பல ஆயிரம் கோடிக்கு பொருட்சேதம் ==
|