திருக்கோட்டியூர் நம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
==இராமானுசரும் நம்பிகளும்==
 
ஆளவந்தாரின் ஐந்து சீடர்கள் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பியிடம் '''எட்டெழுத்து மந்திரத்தை''' பற்றியும் தனக்கு பின்னர் மடத்தையும் சமயத்தையும் காக்க வரும் இராமானுசருக்கு இவற்றை உபதேசிக்கவும் அறிவுறுத்தியிருந்தார். ஆயினும் தகுதியற்றவர்க்கு இதை கற்பிக்ககூடாது எனவும் கூறியிருந்தார் ஆளவந்தார். எனவே இவரிடம் இராமானுசர் எட்டெழுத்து மந்திரத்தின் பொருளை கற்க வரும் பொழுது பதினெட்டு முறைகள் மறுத்து உடையவரின் தகுதியை சோதித்தபின்னரே கற்பித்தார் கோட்டியூர் நம்பிகள். மேலும் இம்மந்திரம் பரம்பரம ரகசியம் என்றும், இதை "எவருக்கும் வெளியிடக்கூடாது" என்ற நிபந்தனையின் பேரிலேயே உபதேசத்தருளினார். ஆனால் உபதேசம் பெற்றவுடன் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேலேறி மாந்தர் அனைவருக்கும் கேட்டு உய்யும்படி, சாதி சமய அதைபேதமற்று எல்லோருக்கும் உபதேசம் செய்தார் இராமானுசர். இதனால் மிகுந்த கோபமுற்ற திருக்கோட்டியூர் நம்பி இரகசிய மந்திரத்தை இப்படி யாவருக்கும் சொல்வது குருவின் சொல்லுக்கு துரோகமிழைப்பதாகும் என்றும் இதற்கு நரகம் புக நேரிடம் என்று கடிந்துக்கொண்டார். இதற்கு பதிலளிக்கும் வண்ணம் இராமானுசர் '''எல்லோரும் முக்தியடையவதாயின் தான் ஒருவன் நரகத்திற்கும் செல்வதும் தன்னுடைய பாக்கியமே''' என்றார். இந்த பதிலைக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி, அரங்கனின் கருணையையும் இவரின் கருணை மிஞ்சிடக்கண்டு இவரோ '''எம்பெருமானார்''' என்று மகிழ்சியினால் ஆலிங்கனம் செய்துக்கொண்டார்.மேலும்அத்தோடு வைணவ வழிப்பாட்டு முறைக்கு அன்றிலிருந்து '''எம்பெருமானார் தரிசனம்''' என்று அழைக்கப்படும் என்றும் அருளினார் திருக்கோட்டியூர் நம்பி.
 
==சிறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/திருக்கோட்டியூர்_நம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது