ஆலந்துறைநாதர் கோயில், புள்ளமங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
'''திருப்புள்ளமங்கை பசுபதி கோயில்''' - பசுபதீசுவரர் கோயில் [[சம்பந்தர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய விசத்தை இறைவன் அமுது செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
 
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
==இவற்றையும் பார்க்கவும்==
| பெயர் =
* [[பாடல் பெற்ற தலங்கள்]]
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
| படிம_அளவு =
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு = <!--10-->
| நிலநிரைக்கோடு = <!--78-->
<!-- பெயர் -->
| புராண_பெயர் = திருப்புள்ளமங்கை, ஆலந்துறை
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = பசுபதிகோயில்
| மாவட்டம் = தஞ்சாவூர்
| மாநிலம் = தமிழ்நாடு
| நாடு = இந்தியா
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = பிரமபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர், பசுபதீஸ்வரர், பசுபதிநாதர்.
| உற்சவர் =
| தாயார் = அல்லியங்கோதை, சௌந்தரநாயகி.
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் = ஆல் (ஆலமரம்)
| தீர்த்தம் = திருக்குளம், தீர்த்தம்
| ஆகமம் = சிவாகமம்
| திருவிழாக்கள் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை = தேவாரம்
| பாடியவர்கள் = சம்பந்தர்.
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| கலைஞர் =
| அறக்கட்டளை =
| வலைதளம் =
}}
 
'''திருப்புள்ளமங்கை பசுபதி கோயில்''' - பசுபதீசுவரர் கோயில் [[சம்பந்தர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய விசத்தை இறைவன் அமுது செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இத்தலம் [[16|16வது]] [[சிவன்|சிவதலமாகும்]].
 
==தல வரலாறு==
 
*ஊர்ப்பெயர் பண்டை நாளில் 'புள்ள மங்கை' என்றும், கோயிற் பெயர் 'ஆலந்துறை' என்றும் வழங்கப்பெற்றது. இன்று ஊர்ப் பெயர் மாறி 'பசுபதி கோயில்' என்று வழங்குகின்றது. 'புள்ளமங்கை' என்றதற்கேற்ப இப்போதும் கோபுரத்தில் கழுகுகள் இருக்கின்றன.
 
*குடமுருட்டி ஆற்றின் கரையில் திருக்கோயில் உள்ளது. ஆலமரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்கிய நீர்த்துறை தலம் ஆதலின் 'ஆலந்துறை' என்று பெயர் பெற்றிருத்தல் வேண்டுமென்பர்.
 
*அமுதத்தைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் இஃது என்பது தலபுராணச் செய்தி.
 
*பிரம்மா பூஜித்து சாபவிமோசனம் பெற்றமையால் சுவாமி இங்கு பிரமபுரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு விளங்குகின்றார்.
 
==தல சிறப்புகள்==
 
*திருச்சக்கரப்பள்ளியின் சப்தஸ்தானத் தலங்களுள் இத்தலமும் ஒன்று.
 
*அகழி அமைப்புடைய கர்ப்பக்கிருகம்; கீழே கருங்கல் கட்டமைப்பும் மேலே சுதை அமைப்பும் உடையது.
 
*விமானத்தின் கீழ் சிவபுராணம், 108 நாட்டிய கரணங்கள், இராமாயண காட்சிகள் ஆகியன சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.
 
* இக்கோயிலில் நவக்கிரகங்களுக்கு நடுவில் நந்தி உள்ளார்.
 
*இங்குள்ள துர்க்கை - மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கிறது. கருங்கல் குடை நிழலில், எருமைத் தலைமீது நின்று, சங்கு சக்கரம், வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களை ஏந்தி, இருபுறமும் கலைமானும் சிங்கமும் இருக்க; இரு வீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சித்தர; திரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் பின்புறம் அம்பறாத்தூணி விளங்க, துர்க்காம்பிகை விளங்கும் கோலம் - இக்கோலம் தனிச் சிறப்பு. (திருநாகேச்சுரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கை ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை என்றும்; இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.
 
*இக்கோயில் கல்வெட்டுக்களில் "ஆலந்துறை மகாதேவர் கோயில்" என்று குறிக்கப்படுகிறது.
 
*முதலாம் பராந்தகன் காலத்தில் (கி. பி. 907 - 955) கருவறையும், அர்த்த மண்டபமும் திருப்பணி செய்யப்பெற்றுள்ளன.
 
*சம்பந்தர் இப்பாட்டில் 'பொந்தின்னிடைத் தேன்ஊறிய' என்று பாடியிருப்பதற்கேற்ப, கோயில் சாளரத்தில் தேனடை இருக்கின்றது.
 
== திருத்தலப் பாடல்கள்==
 
இத்தலம் பற்றிய [[தேவாரம்|தேவாரப்]] பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
 
[[சம்பந்தர்|திருஞானசம்பந்தர்]] பாடிய பதிகம்
 
<blockquote>
''பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்''
<br />
''போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்''
<br />
''காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்''
<br />
''ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.''
<br />
''பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை''
<br />
''அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானைக்''
<br />
''கந்தம்மலி கமழ்காழியுள் கலைஞானசம் பந்தன்''
<br />
''சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே.''.
</blockquote>
 
==இவற்றையும் பார்க்க==
 
{{multicol}}
* [[சிவத் தலங்கள்]]
* [[தேவாரத் திருத்தலங்கள்]]
* [[மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்]]
{{multicol-break}}
{{வலைவாசல்|சைவம்|boxsize=50}}
* [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞான சம்பந்தர்]]
* [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரர்]]
* [[திருநாவுக்கரசு நாயனார்|திருநாவுக்கரசர்]]
{{multicol-end}}
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_pullamangai.htm தல வரலாறு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்]
* [http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_pullamangai.htm தலவரலாறு, சிறப்புக்கள், அமைவிடம்]
* [http://www.shaivam.org/tamil/thirumurai/thiru01_016.htm சம்பந்தர் பாடிய பதிகம்]
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆலந்துறைநாதர்_கோயில்,_புள்ளமங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது