[[இந்தியா]]வில் மாநில அரசின்அரசுகளின் நிர்வாக வசதிக்காக மாநில எல்லைக்குள் உள்ள பகுதி முழுமையும் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் தலைமை அலுவலராக '''மாவட்ட ஆட்சித் தலைவர்''' செயல்படுகிறார். மாவட்ட ஆட்சித் தலைவர்கள், [[இந்திய ஆட்சிப் பணி]]க்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய அரசால் ஒவ்வொரு மாநில பணித் தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பட்டியலிலிருந்து, அந்தந்த மாநில அரசால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்படுகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைக் கவனிப்பதற்காக இவருக்கு மாவட்ட நீதித்துறை நடுவர் பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.