வீடுமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''வீடுமர்''' அல்லது '''பீஷ்மர்''' [[மகாபாரதம்|மகாபாரதத்தின்]] தலையாய கதைமாந்தர்களில் ஒருவர் ஆவர். பீஷ்மர் [[சாந்தனு]]விற்கும் [[இந்து மதத்தில் கங்கை|கங்கை]]க்கும் மூத்த மகனாகப் பிறந்தார். சாந்தனு [[துஷ்யந்தன்|துஷ்யந்தனுக்கும்]], [[பரதன்|பரதனுக்கும்]] அடுத்த அரசன் ஆவார். பீஷ்மர் அரசியலை தேவர்களின் குருவான [[பிரகஸ்பதி]]யிடம் இருந்தும், வேதங்களை [[வசிஷ்டர்|வசிஷ்டரிடம்]] இருந்தும், வில்வித்தையை [[பரசுராமர்|பரசுராமரிடம்]] இருந்தும் கற்றுக்கொண்டார். தன் தந்தை, [[சத்தியவதி]] பால் கொண்ட விருப்பினை நனவாக்க, அரசாட்சியை துறந்தது மட்டுமன்றி, மணவாழ்க்கையையும் துறந்தார். இதனால் இவர் பெற்றதே இச்சா மரணம் - தான் விரும்பும் நாளில், விரும்பும் நேரத்தில் மட்டும் மரணம் என்ற வரமாகும். மகாபாரதப் போருக்குப் பின்னர் [[தருமன்|தருமனுக்கு]] நல்லுபதேசங்களையும், அதனைத் தொடர்ந்து விஷ்ணு சஹசிர நாமம் எனும் பக்தி நூலையும் தந்துள்ளார்.
 
===தேவ விரதன் ===
வரிசை 6:
 
===அம்பையின் சபதம்===
தம்பி [[விசித்திர வீரியன்|விசித்திர வீரியனுக்காக]] [[காசி மன்னன்|காசி மன்னனின்]] மூன்று அரசகுமாரிகளை, சுயம்வரத்தின் போது கவர்ந்து வந்தார். அப்போது [[அம்பை]] மட்டும் [[சல்வன்]] என்ற அரசகுமாரனை விரும்பியதையடுத்து, அவளை [[சல்வன்|சல்வனிடம்]] அனுப்பிவைத்தார். [[சல்வன்]] அவளை ஏற்க மறுத்துவிட்டான். மீண்டும் [[அம்பை]], [[பீஷ்மர்|பீஷ்மரிடம்]] வந்து தன்னை ஏற்கவேண்டினாள். [[பீஷ்மர்|பீஷ்மரோ]] தான் செய்துள்ள சபதத்தைக் கூறி ஏற்க மறுத்தார். "நான் எந்தப் பெண்ணுடனும் இருக்க மாட்டேன் என சபதம் மேற்கொண்டு இருக்கிறேன், [[சல்வன்|சல்வனோ]], [[விசித்திர வீரியன்|விசித்ரவீர்யனோ]] உன்னை ஏற்காததால் நீ எங்கு போக விருப்பமோ அங்கே போகலாம்" என்று கூறிவிட்டார். இந்த அவமானத்திற்குப் பழி வாங்க ஒரு வீரனை உலகம் முழுக்க சுற்றித் தேடினாள், எல்லா சத்திரியர்களும் [[பீஷ்மர்|பீஷ்மருக்காக]] பயந்தார்கள். அவள் இறுதியில் [[பரசுராமன்|பரசுராமனின்]] உதவியை நாடினாள், அவர் [[பீஷ்மர்|பீஷ்மரின்]] குரு. [[அம்பா]]வின் நிலையை அறிந்து அதிர்ந்துபோன [[பரசுராமர்]] தனது சீடருடன் சண்டையிட்டார், சண்டை பல நாட்கள், மாதங்கள் என நீடித்தது. இறுதியில் [[பரசுராமர்]] பீஷ்மரை யாராலும் தோற்கடிக்க முடியாது, அவராக மரணம் அடைவதைத் தவிர அவரை யாராலும் கொல்லவும் முடியாது சண்டையைத் தொடர்ந்தால் இருவரும் நிறைய ஆயுதங்களை விட்டுச்செல்லவேண்டிவரும் அவை உலகத்தையே அழித்துவிடும் என்பதால் சண்டையை நிறுத்திவிட வேண்டும் என்று [[பரசுராமன்]] சண்டையை நிறுத்தினார். குழம்பிய [[அம்பை]], பீஷ்மரை கொல்ல தேவர்கள் எனக்கு வழி சொல்லாத வரை நான் ஊண், உறக்கம் கொள்ளப்போவதில்லை என சபதம் செய்து ஒற்றைக்காலில் நின்று [[சிவன்|சிவனை]] நோக்கி தவம் இருந்தாள். [[சிவன்]] அவள் முன் போன்றி "நீ பீஷ்மரின் மரணத்துக்கு காரணமாவாய் உனது அடுத்தப் பிறவியில்" என வரம் தந்து மறைந்தார். விரைவில் பீஷ்மர் மரணமடைய விரும்பிய [[அம்பா]] தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டாள். [[ஊர்வசி]] ,[[கங்கை]], [[சத்தியவதி]] போன்ற பெண்கள் தங்களை விரும்பிய ஆண்களிடம் தான் விரும்பியதை பெற்றுக் கொண்டது மாதிரி இல்லாமல் [[அம்பை]] வெறும் அலங்காரப் பொருளாக கருதப்பட்டனர். <ref name = "one"> Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK </ref>
 
===போர்க்களத்தில் பெண்===
"https://ta.wikipedia.org/wiki/வீடுமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது