இருவேறு இணை உலகுகளில் நடக்கும் கதையே இரண்டாம் உலகம். நம் பூமிக்கு இணையான வேறொரு உலகில் காதல் அறவே இல்லை. ஆதலால், அங்கே பூக்கள் பூப்பதே இல்லை. இவ்வுலகிற்கு காதல் மீண்டும் வர, பூக்கள் பூக்க ஏங்குகிறாள் அம்மா எனும் மந்திர சக்தி மிகுந்த பெண்.
நமது உலகத்திற்கு நிகரான மற்றொரு உலகத்தைப் பற்றிய கதை தான் '''இரண்டாம் உலகம்'''. கதைப்படி ரம்யா ([[அனுஷ்கா செட்டி]]), மது பாலகிருஷ்ணனை ([[ஆர்யா]]) விரும்புகிறார். அதை அவரிடம் செல்லும் போது, மது மறுக்கிறார். ஆனால் கனவுலகில், ரம்யாவை கவர முயற்சிக்கிறார் மது. பின்னர் கனவுலகம் மற்றும் நிஜ உலகம் என மாறி மாறி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மது எப்போது ரம்யாவின் காதலை மறுத்தாரோ, அப்போதே மது ரம்யாவை விரும்ப ஆரம்பிக்கின்றார். தனது காதலை ரம்யாவிடம் கூறும் போது, ரம்யா மறுத்துவிட மேலும் தான் மற்றொருரிடம் காதல் வயப்பட்டுவிட்ட தாகவும் கூறுகிறார். இறுதியில் மது, ரம்யாவின் மனதை வென்று கரம் பற்றுகிறாரா இல்லையா என்பது தான் மீதிக் கதை<ref>http://entertainment.oneindia.in/tamil/reviews/2013/irandam-ulagam-review-125489.html</ref>.