லுட்விக் விட்கென்ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 66:
வார்த்தைகளை நாம் பயன்படுத்துகையில் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். ஒரு துறையில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை இன்னுமொரு துறையிலும் பயன்படுத்துகிறோம். இதனால் பகுப்பாய்வு என்பது மட்டும் மேற்குறித்த விடயங்களைத் தீர்மானிப்பதில்லையென விட்கென்ஸ்டைன் கருதினார். ஒரு பிரச்சினைக்கு மெய்யியல் ரீதியான தீர்வு என்பது ஒரு நோய்க்குச் செய்யும் பரிகாரம் போன்றதாகும். மொழிகளில் ஏற்படும் பிரச்சினைகள், அவை மனித சிந்தனையில் ஏற்படுத்தும் தாக்கம், வார்த்தைப் பிரயோகங்கள் பற்றி பிந்திய விட்கென்ஸ்டைன் குறிப்பிடுகிறார். மொழி, மொழியின் அலங்காரத்தினால் எமது அறிவில் ஏற்படும் வசீகரத்தன்மைக்கு எதிராக நடத்தப்படும் யுத்தமே மெய்யியல் எனக் குறிப்பிட்டார். நேரம், இடம், மனம் போன்ற வார்த்தைகளை சாதாரண மக்களும் உபயோகிக்கின்றனர். மெய்யியலாளர்களும் உபயோகிக்கின்றனர். வார்த்தைகளை, சொற்களை எமது பேச்சிலும், எழுத்திலும் உபகரணங்களாகப் பயன்படுத்துகின்றோம். அதாவது இவை எமது பேச்சுக்களில் கருவிகளாகக் கையாளப்படுகின்றன. ஒரு கருவியைக் கொண்டு பல இயந்திரங்களை அமைப்பது போன்றதே இதுவாகுமென்றும், மொழியின் பலவகையான செயற்பாடுகளையும் ஆராய்ந்து பார்த்தால் அவை மொழி விளையாட்டுக்கள் என்றும் பிந்திய விட்கென்ஸ்டைன் குறிப்பிடுகின்றார்.
 
அளவையியல் ரீதியான பகுத்தறிவுக் கோட்பாடு ஏற்கப்படக்கூடியதாயினும் மற்றொரு புறத்தில் அங்கு தீர்மானிக்க முடியாத முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்த நிலை மெய்யியலாளர்களுக்கு மகிழ்ச்சியற்றதொன்றாகும். " Tractatus இல் நான் கூறிய மொழியின் அளவையியல் கட்டமைப்பில் மாற்றம் செய்யப்படாவிட்டால் அது தொடர்பாக நான் சொல்ல நினைத்து பூர்த்தியாகாது. அது மனவேதனையைத் தருகிறது. ஒரு விடயத்தை ஆரம்பிப்பவன் தன்னுடைய முயற்சியில் எப்பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவில்லையென்றால் அவனுடைய முயற்சி திருப்தியற்றதாகும். மக்கள் புதிர்களில் நம்பிக்கை வைத்துள்ளனர். புதிர்கள் இல்லையென்றால் அவர்கள் ஆச்சரியத்தை அடைகின்றனர். அர்த்தமற்ற பிரச்சினைகளைக் கடந்து செல்ல வழிகாட்டுவதே என்னுடைய நோக்கமாகும். மெய்யியல் விசாரணைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் தாம் அறிந்துள்ளது சிறிதளவே என்பதை உணர்வர் ". என்றார். இது சோக்கிரட்டீசின் கருத்தை ஒத்ததாகும்.
 
எல்லா மெய்யியலும் அற்புதம் என்ற ஒருவகை மனவெழுச்சியிலிருந்தேதான் தோன்றுகின்றது. புதிர்களில் இருந்தே மெய்யியல் ஆரம்பிக்கின்றது. இந்த மெய்யியல் ரீதியான புதிர்களுக்கு விஷேட தன்மைகள் உள்ளன. ஒரு மொழியைக் கற்பனை செய்வது என்பதன் அர்த்தம் வாழ்க்கையின் ஒரு வடிவத்தைக் கற்பனை செய்வதாகும். பகுப்பாய்வு என்பது வரைவிலக்கணப்படுத்துவது அல்லாமல் அதன் உபயோகங்களை விவரணப்படுத்துவதாகவே இருக்கவேண்டும் என்பது பிந்திய விட்கென்ஸ்டைனின் கருத்தாகும். அவர் பெளதீக அதீத கருத்துக்களில் கவனம் செலுத்தி தர்க்க புலனறிவாளர்களினால் நிராகரிக்கப்பட்டவற்றை அர்த்தமுடையதாக ஆக்க முயன்றார்.
 
இவ்வறான கருத்துக்களின் அடிப்படையில் மொழி, மொழிக்காக அன்றி தத்துவத்திற்குரியதாகவே இருக்க வேண்டும் என்பதில் ஆர்வங்கொண்ட விட்கென்ஸ்டைன் எமது நாளாந்த வாழ்விலே ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மார்க்கமாக மொழியின் அர்த்தத்தை விளக்குவதிலேயே மெய்யியல் ஆய்வின் பெரும்பகுதியைச் செலவிட்டார் எனக் குறிப்பிடலாம். குறிப்பாக பிந்திய விட்கென்ஸ்டைன் Philosophical Investigations ல் மொழியினுடைய சமூக ரீதியான தன்மையை மொழிவிளையாட்டுக்கள் என்பதுடன் தொடர்புபடுத்தி விளக்கினார் எனக் குறிப்பிடலாம்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/லுட்விக்_விட்கென்ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது