இருக்கு வேத கால முனிவர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
[[File:Map of Vedic India.png|thumb|350px|ரிக்வேத கால நிலவியல் வரைபடம்]]
'''
==சில முனிவர்களின் தலைமுறைகள்==
வசிட்டரின் தந்தை மித்ரவர்ணன், சகோதரர் அகத்தியர், மகன் சக்தி. விசுவாமித்ரரின் தந்தை காத்தி, தாத்தா குஷிகர், கொள்ளுத்தாத்தா இசிரத். [[பிருகு]]வின் தந்தை வருணன். பரத்துவாசரின் தந்தை [[பிரகஸ்பதி|பிரகசுபதி]], தாத்தா லோகநாமா. கண்வரின் த்ந்தை கோரர், தாத்தா அங்கிரா ஆவார். காசிபரின் தந்தை மரீசி. கோதமரின் தந்தை ரகூகன். ரிக்வேதத்தில் குறிப்பிட்டுள்ள வசிட்டர், விசுவாமித்திரர், அகத்தியர், வாமதேவர் மற்றும் பரத்துவாஜர் இதிகாச புராணங்களில் வரும் முனிவர்கள் அல்ல.
==முனிவர்களின் பணிகள்==
வேதம் ஓதுதல், ஓதுவித்தல், வேள்விகள் செய்தல், செய்வித்தல், தவம் செய்தல், தானம் பெறுதல், அரசனுக்கு
==ரிக்வேதகால இனக்குழுக்களின் புரோகிதம் செய்யும் சில முனிவர்கள்==
வரி 32 ⟶ 36:
==விசுவாமித்திரர்==
[[விசுவாமித்திரர்]] காயத்திரி மந்திரத்தை இயற்றியவர். இவர் காத்தியரின் மகன், குசிகரின் பேரன், இசிரத்தின் கொள்ளுப்பேரன். இவர் இந்திரன், வருணன், பிரகசுபதி, பூசா, சவிதா, சோமதேவன், மித்திரன் ஆகிய தேவர்களை துதி செய்து சூக்தங்கள் இயற்றியுள்ளார். 33 கோடி தேவர்கள் அல்ல, 33 தேவர்கள் மட்டுமே என்று இவரே
==பரத்துவாசர்==
பிரகசுபதியின் மகன். ரிக்வேதத்தில் 60 சூக்தங்கள் செய்தவர். இவர் ஆன்மீக சக்தியை ஆதரிப்பவர் அல்ல. “எங்கள் உடல் பாறையைப் போன்று இருக்கட்டும்! என வேண்டுகிறார் [ரிக்வேதம் 6-75-12]. இவர் ரிக்வேத கால மன்னர்களான திவோதாசு மற்றும் சுதாசு ஆகியவர்களின் புரோகிதர். திவோதாசின் மகன் சுதாசுவின் மூலம் வசிட்டரைக் கொண்டு [[அசுவமேத யாகம்|அசுவமேதயாகத்தை]] செய்வித்தார். [ஐதரேய பிரமாணம் 8-4-21]. இதுவே அசுவமேதயாகத்தைப் பற்றிய மிகப் பழைய குறிப்பாகும். இவரது சூகதங்கள் மூலம் அக்காலத்தில் வேள்விகளும், பசு தானமும் அதிக அளவில் செய்யப்பட்டது என்றும் மக்கள் அதிகமான குதிரைகளையும், பசுக்களையும் விரும்பினர் என்றும், மன்னன் திவோதாசு அளித்த [[சோம பானம்|சோமபான]] அரங்கங்களில் தான் கலந்து கொண்டதாக பரத்துவாசர் ரிக்வேதம் 6-16-5 ல் குறிப்பிட்டுள்ளார். மன்னன் திவோதாசு 60,000 அசுரர்களை கொன்றதையும், ‘புரு’ குல மன்னன் புருகுத்சன் அசுரர்களின் எழு கோட்டைகளை நாசமாக்கியதை ரிக்வேதம் 6-20-10 ல் குறிப்பிட்டுள்ளார்.
==வாமதேவர்==
கோதம முனிவரின் மகன். ரிக்வேதத்தில் 55 சூக்தங்கள் இயற்றியவர். வசிட்டர், [[விசுவாமித்திரர்]] ஆகியவர்களுக்கு பிந்தைய தலைமுறையை சேர்ந்தவர். இவரின் புகழ் அவர்களுக்கு குறைந்தது அல்ல. விசுவாமித்திரரின் சூக்தங்களை பரவச் செய்தவர். மன்னன் திவோதசு மற்றும் அவன் மகன் சுதாசுவின் வெற்றிகளை விவரிக்கிறார். ‘திவோதசு,அசுரர்களின் நூறு புரங்களை (கோட்டைகள்) வெற்றி கொண்டார்’ (ரி.வே.4-26-3); இந்த நூறு கோட்டைகளும் தாமிரத்தால் கட்ட்ப்பட்டவை’ (ரி.வே.4-27-1). திவோதசுக்காக நூறு மலைக்கோட்டைகளை [[இந்திரன்]] வெற்றி கொண்டார்’(4-30-20). போரில் முப்பதாயிரம் அடிமைகள் மயக்கம் அடைந்தனர். (4-22-2).ஐம்பதாயிரம் கிருஷ்ணர்கள் (கறுப்பு [[அசுரர்]]கள்) கொல்லப்பட்டதாகவும் வாமதேவர் குறிப்பிடுகிறார்.(ரி.வே.4-16-13).வாமதேவரின் சகோதரன் நோதா,தந்தை கோதமர், பாட்டனார் ரகூகண். வாமதேவரின் மகன்கள் மூர்த்தன்வா, பிரகத்திவ், பிரகதுக்த ஆகியவர்களும் முனிவர்களே.
==அகத்தியர்==
வரி 85 ⟶ 89:
==உசாத்துணைகள்==
* ரிக்வேத கால ஆரியர்கள், ஆசிரியர், [[ராகுல் சாங்கிருத்யாயன்]], அலைகள் வெளீட்டகம், சென்னை
*
* Encyclopedia of Indo-European Culture (sv.Indo-Iranian Langugages, p306) 1500-1100BC
|