ஒனகே ஒபவ்வா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Under construction}} '''ஒனகே ஒபவ்வா''' (''On..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:00, 28 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

ஒனகே ஒபவ்வா (Onake Obavva கன்னடம்:ಓಬವ್ವ) என்பவர் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்ரதுர்கா பெண்மனி. சித்ரதுர்கா கோட்டைக் காவளாளி ஒருவரின் மனைவியான இவர், தந்திரமாக கோட்டைக்குள் நுழைய முற்பட்ட ஐதர் அலியின் படைவீரர்களை தனி ஒரு பெண்மனியாக நின்று தடுத்ததன் காரணமாக, கர்நாடகாவின் மிகவும் மதிக்கத்தக்க வீரப் பெண்மனிகளுள் ஒருவராக மதிக்கப்படுகின்றார். எதிரி வீரர்களை தாக்க இவர் உலக்கையை பயன்படுத்தியதால் ஒபவ்வா எனும் இவரின் பெயர் ஒனகே ஒபவ்வா (ஒனகே - உலக்கை) என வழங்களாயிற்று.

பின்னனி

18ம் நூற்றாண்டின் மத்தியில் சித்ரதுர்கா, மதகரி நாயக்கர் என்பரால் ஆளப்பட்டது. இவருடைய கோட்டைக் காவளாளி ஒருவரின் மனைவிதான் ஒபவ்வா. 1779ல் மைசூரை தலைநகராக கொண்டு ஆண்டுவந்த ஐதர் அலியின் படைகள் இந்த கோட்டையை முற்றுகையிட்டன. குன்றின் மீது அமைந்திருந்த இந்த கோட்டையின் உள்ளே நுழைய சிரமப்பட்ட ஐதரின் படைகள், அதில் இருந்த ஒரு சிறு பிளவை பயன்படுத்தி உள்ளே நுழைய முடிவெடுத்தன. பிளவு மிகவும் சிறியதாகவும் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே நுழையும் வன்னமும் இருந்தது. இருப்பினும் வேறு வழி இல்லாததால் அதையே பயன்படுத்த ஐதரின் படைகள் தயராகின. அதே நேரத்தில், அந்த பிளவில் இருந்த ஆபத்தை உனர்ந்த மதகரி நாயக்கரும், அதன் அருகே காவலுக்கு ஒபவ்வாவின் கனவரை நியமித்தார்.

குறிப்பிட்ட நாளில் மதிய உனவுக்காக தனது வீட்டுக்கு வந்த ஒபவ்வாவின் கனவர், தன்னீர் எடுத்துவருவதற்கு தனது மனைவியை பனித்தார். பிளவின் அருகே இருந்த குட்டையில் தன்னீர் பிடிக்க வந்த ஒபவ்வா, பிளவில் இருந்து எதிரியின் படைகள் கோட்டைக்குள் நுழைய முற்படுவதை கண்டார். தொடர்ந்து அருகில் எவரும் இல்லாத்தால், தனது கையில் இருந்த உலக்கையை வைத்து பிளவில் வழியாக வெளியேற முயன்ற முதல் வீரனை தலையில் அடித்துக் கொன்றார். மேலும் தொடர்ந்து வரும் வீரர்கள் அறியாத வன்னம் இறந்த அந்த உடலை அருகில் இருக்கும் பள்ளத்தில் தள்ளிவிட்டார். இதே போல தொடர்ந்து வந்த வீர்ர்கள் அனைவரும் ஒபாவ்வாவினால் கொல்லப்பட்டனர். மதிய உனவை முடித்துவிட்டு தனது பனிக்கு திரும்பிய கனவர், கையில் இரத்தம் சொட்டும் உலக்கையுடன் ஒபவ்வா நிற்பதையும், கீழே எதிரி வீரர்களின் உடல்கள் கிடப்பதையும் கண்டார். நிலைமையை உனர்ந்த கனவர், உடனடியாக மற்ற வீரர்களை எச்சரிக்கை செய்து அபாயச் சங்கை ஊதினார். இதையடுத்து பிளவின் அருகே கூடிய மதகரி நாயக்கரின் படைகள், பிளவின் உள்ளே இருந்த மற்ற எதிரி வீரர்களையும் கொலை செய்தனர். இப்படியாக ஐதர் அலியின் கோட்டை பிரவேசம் தடுத்து நிறுத்தப்பட்டது. இருப்பினும் சம்பவம் நடந்த அதே நாளில் ஒனகே ஒபவ்வாவும் மரணமடைந்தார். இவரின் மரணம் குறித்து, எதிரி வீரர்களால் கொல்லப்பட்டார் எனவும் அதிர்ச்சியில் இறந்தார் எனவும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

அங்கீகாரம்

இவரின் தைரியம் காரனமாக, இவர் கர்நாடகாவின் வீரப் பெண்மனி என அழைக்கப்படுகின்றார். சித்ரதுர்கா கோட்டையில் ஐதர் அலி வீரர்கள் நுழைய முற்பட்ட பிளவு, இவரின் பெயரால் ஒனகே ஒபவ்வா கிண்டி (கிண்டி - துளை) என அழைக்கப்படுகின்றது. மேலும் சித்ரதுர்காவில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்துக்கு இவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒனகே_ஒபவ்வா&oldid=1559510" இலிருந்து மீள்விக்கப்பட்டது