ஏரணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
Shrikarsan (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1560814 இல்லாது செய்யப்பட்டது |
||
வரிசை 2:
'''ஏரணம்''' அல்லது '''அளவையியல்''' அல்லது '''தருக்கவியல்''' (''Logic'') என்பது அறிவடிப்படையில் ஒன்று உண்மை, அது ஏற்கக்கூடியது (= ஏலும்) என்று அறியவும், ஒரு முடிவுக்கு வரவும், உறுதியாக நிலைநிறுத்தவும் பயன்படும் ஓர் அடிப்படைக் கருத்தியல் முறைகளைப் பற்றிய அறிவுத்துறை. ஏரணம் மெய்யியலின் ஒரு முக்கியமான துறை. ஏரணம் என்னும் தமிழ்ச்சொல் ஏல் = ஏற்றுக்கொள், இயல்வது, பொருந்துவது என்பதில் இருந்து ஏல்-> ஏர் ஏரணம் என்றாயிற்று <ref> [[கழகத் தமிழ் அகராதி]]யில் இருந்து: ஏலல்= ஒப்புக்கொள்ளல். ஏலாதது = இயலாதது, பொருந்தாதது; ஏலாதன = தகாதன. ஏல் = பொருத்தம். ஏல = இயல, பொருந்த; ஏல் = ஏற்றல் என்றாகும். ஒப்புநோக்குக: கல்-கற்றல், தோல்-தோற்றல், வில்-விற்றல், நில்-நிற்றல், நூல் - நூற்றல்.</ref> ஏரணம் என்பது படிப்படியாய் அறிவடுக்க முறையில் ஏலும் (= இயலும் பொருந்தும்), ஏலாது (இயலாது, பொருந்தாது) என்று கருத்துக்களைப் படிப்படியாய் முறைப்படி தேர்ந்து மேலே சென்று உயர் முடிபுகளைச் சென்றடையும் முறை மற்றும் கருத்தியல் கூறுகள் கொண்ட துறையைக் குறிக்கும். ஆங்கிலத்தில் இதனை Logic (லா’சிக்) என்று கூறுவர்.
மேற்குலக மெய்யியல் வரலாற்றில் முற்காலத்தில் [[இலக்கணம்]], ஏரணம், [[உரைதிரம்]] ([[அணியியல்]]) (rhetoic) ஆகிய மூன்றும் முக்கியமானதாகக் கருதப்பெற்றன. [[இந்திய மெய்யியல்]] உலகில் ஏரணம், [[தருக்கம்]], [[நியாயம்]] முதலான கருத்தியல் துறைகள் இருந்தன. மேற்குலக மெய்யியலில் '''லாச்யிக்''' (ஏரணம்) என்பது [[கிரேக்க மொழி]]ச் சொல்லாகிய ''லோகோசு'' (λόγος, logos) என்பதில் இருந்து பெற்றது.<ref name="argumentative"
அரிசுட்டாட்டில் வளர்த்தெடுத்த [[சில்லாஜிஸ்ட்டிக்]] (syllogistic) அல்லது [[ஏரண முறையீடு]] என்னும் முறை 19 ஆவது நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும் முன்னணியில் இருந்தது. அதன் பின்னர் கணிதத்தின் அடித்தளங்கள் பற்றி கூர்ந்தெண்ணிய போது [[குறியீட்டு ஏரணம்]] அல்லது [[கணித ஏரணம்]] என்னும் துறை தோன்றியது. [[1879]] இல் [[ஃவிரெகெ]] (Frege) ''எழுதிய எழுத்து'' என்று பொருள் படும் ''பெக்ரிஃவ்ஷ்ரிஃவ்ட்'' (Begriffsschrift) என்னும் தலைப்பில் குறியீடுகள் இட்டுத் துல்லியமாய் ஏரணக் கொள்கைகள் பற்றி விளக்கும் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். இதுவே தற்கால ஏரணத்தின் தொடக்கம் எனலாம். இந்நூலை ''குறியீடு மொழியில், எண்கணித முறையை ஒற்றிய, தூய எண்ணங்கள்'' ("a formula language, modelled on that of arithmetic, of pure thought.") என்னும் துணைத்தலைப்புடன் வெளியிட்டார். [[1903]] இல் [[ஆல்ஃவிரட் நார்த் வொய்ட்ஹெட்|ஆல்ஃவிரட் நார்த் வொய்ட்ஃகெட்]] மற்றும் [[பெர்ட்ரண்டு ரசல்]] ஆகிய இருவரும் சேர்ந்து [[பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா]]<ref name="Principia">Alfred North Whitehead and Bertrand Russell, ''Principia Mathematical to *56'', Cambridge University Press, 1967, ISBN 0-521-62606-4</ref> (கணித கருதுகோள்கள்) என்னும் புகழ்பெற்ற நூலை எழுதி கணிதத்தின் அடித்தள உண்மைகளை குறியீட்டு ஏரண முறைகளின் படி முதற்கோள்கள் (axioms) மற்றும் முடிவுகொள் விதிகளால் அடைய முற்பட்டு பல உண்மைகளை நிறுவினார்கள். 1931 இல் [[கியோடல்]] என்பார் முடிவுடைய எண்ணிக்கையில் முதற்கோள்கள் இருந்தால் குழப்பம் தராத (ஐயத்திற்கு இடம்தரா) உறுதியான முடிவுகளை ஏரண முறைப்படி அடைய இயலாது என்று நிறுவினார். இதன் பயனாய் இவ்வகையான வழிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.
|