முக்குணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==சத்வ (சாத்வீகம்) குணம்==
சத்வகுணத்திலிருந்து தோன்றும் இயல்புகள்- மன அடக்கம் (சமம்), புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சப்படுதல் (லஜ்ஜை), தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் (ஆத்மரதி), தானம், பணிவு மற்றும் எளிமை.
பிரகாசம், அறிவு, ஆனந்தம் போன்ற நற்பண்புகளை உடையவர்களை சத்வ (சாத்வீக குணம்) குணமுடைவர்கள் என்பர்.
 
===சத்வ குண பலன்கள்===
சத்வ குணத்திலிருந்து தர்மச்செயல்கள்; தன் செயல்களை பகவானுக்கு அர்ப்பணம் செய்து விடுவது; பலனில் ஆசையில்லாமல் செயல்கள் செய்வது சாத்வீக குணமாகும். சத்வ குணமுடையோன் தெய்வத்தன்மையும், நிவிருத்தி மார்க்கமும்; விழிப்பு நிலையும் மற்றும் மேலுலகங்களை அடைகிறான்.
 
==ரஜோ (இராட்சதம்) குணம்==
ரஜோ குண இயல்புகள்- ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாத்த்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல்.
அதிக செயல்திறன் மிக்கவர்களை ரஜோ (இராட்சதம்) குணமுடையவர்கள் என்பர்.
பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ராஜசமாகும்.
 
===ரஜோ குண பலன்கள்===
ரஜோ குணத்திலிருந்து இன்பப் பற்று; ரஜோ குணப் பெருக்கினால் அசுரத்தன்மையும், பிரவிருத்தி மார்க்கமும், கனவு நிலையும், இறப்பிற்குப்பின் மனித உடலை அடைகிறான்.
 
==தமோ (தாமசம்) குணம்==
தமோ குண இயல்புகள்- கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேசம், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வதும், பகட்டுக்காக செய்யப்படும் செயல்கள் தாமசமாகும். தமோ குணத்தினால் தூக்கநிலையும் உண்டாகிறது.
மோகம், மயக்கம், சோம்பல் போன்ற குணங்கொண்டவர்களை தமோ (தாமசம்) குணமுடையவர்கள் என்று அறிய வேண்டும்.
 
===தமோ குண பலன்கள்===
தமோ குணத்திலிருந்து, சோம்பல் உண்டாகிறது. தமோ குணப்பெருக்கினால் இராட்சசத் தன்மையும், மோகமும் அதிகரிகின்றது. தமோ குணத்தால் விலங்கு, மரம், செடி, கொடி போன்ற தாழ்வான நிலை பிறப்பு உண்டாகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/முக்குணங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது