பிள்ளைத்தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 40:
# முத்தம் - 11 முதல் 13-ஆம் திங்கள் வரை
# வருகை - 13 முதல் 15-ஆம் திங்கள் வரை
# அம்புலி
# சிற்றில் (ஆண்பால்) / நீராடல்
# சிறுபறை (ஆண்பால்) / அம்மானை
# சிறுதேர் (ஆண்பால்) / ஊசல்
=== 1. காப்புப்பருவம் ===
வரிசை 58:
என பன்னிரு பாட்டியல் குறிப்பிடுகிறது. ஆயினும் இதனை விடுத்து வேறு கடவுளர்களையோ, அடியவர்களையோ காப்பாகக் கூறும் முறையும் உள்ளது.
=== 2. செங்கீரைப் பருவம் ===
பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் இரண்டாவது பருவம் '''செங்கீரைப் பருவமாகும்'''. இது குழந்தையின் ஐந்தாம் திங்களில் நிகழ்வதாகும். "'''கீர்''' இன்பதற்கு '''சொல்''' எனப் பொருள் கொண்டு இது குழந்தைகள் மழலையை விட இனிமையான பொருள் தெரியாத ஓசையை எழுப்பும் பருவம்" என்றும், "ஆடுக செங்கீரை எனப்பாடுவதால் குழந்தை ஒருகாலை உயர்த்தியுமொருகாலை மடக்கியும் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி முகத்தை மேலே உயர்த்தி ஆடுதலாகிய பருவம்" என்றும், "அவ்வாறு ஆடும் பொழுது சுற்றத்தார் சிறந்த சொற்களை மழலை கூற வேண்டும் என்று வேண்டிக் கொள்வர்" என்றும் கூறுவர். (காண்க கலைக்களஞ்சியம், தொகுதி 7 பக்கம்: 370)
வரிசை 82:
# வருந்தி அழைத்தும் வரவில்லையாயின் இன்ன தண்டனை பெறுவாய் என்று கூறுதல்
என சாம பேத தான தண்ட முறையில் அமைவது இப்பருவமாகும்.அவ்வாறு அழைக்கும் பொழுது சிலேடை முதலிய அணி இலக்கணங்கள் அழகுற அமைவதாகும்.
== ஆண்பாற்பிள்ளைத்தமிழுக்கு உரியது ==
=== 8. சிற்றில் இழைத்தல்
ஓடியாடி சுற்றித்திரிந்து விளையாடும் குழந்தையின் பதினேழாம் திங்களில் இப்பருவம் பாடப்படுவதாகும். இதன் முந்தைய பருவத்தில் அம்புலியை விளையாட அழைத்து அது வாராத போது கோபம் கொண்ட குழந்தை பெண்குழந்தைகள் கட்டிய சிற்றிலை சிதைக்கிறது. அப்போது அதனைக் கட்டிய பெண்மக்கள், எல்லா! எம் சிற்றிலைச் சிதைக்க வேண்டா! என வேண்டுமுகமாகப் பாடப் படுவதே இப்பருவமாகும். மற்றா பருவங்கள் எல்லாம் பெற்றோரும் மற்றொரும் பாடுவதாக அமைய இப்பருவம் மட்டும் சிறுமிகள் பாடுவதாக அமையும்.
=== 9. சிறுபறை முழக்கல்
ஆண்பாற் பிள்ளைத்தமிழின் ஒன்பதாவது பருவம் சிறு பறை முழக்கல் ஆகும். இது குழந்தையின் பத்தொன்பதாம் திங்களில் நிகழ்வதாகும் இப்பருவத்தில் ஒலி இன்பங்கள் குழந்தையை மிகவும் ஈர்க்கும் ஆதலால் குழந்தை சிறு பறை முதலியவற்றைக் கொட்டிக்கொண்டு விளையாடும். அவ்வாறான கருவிகளைக் கொடுத்து ஒலி முழக்குமாறு செய்து மகிழ்விப்பதே இப்பருவமாகும்.
=== 10 சிறு தேர்ப்பருவம்
ஆண்பால் பிள்ளைத்தமிழின் பததாவது பருவம் சிறுதேர்ப் பருவமாகும். மரத்தாலான சிறிய தேரினை உருட்டி மகிழும்படி குழந்தையை வேண்டிப்பாடுவது இப்பருவமாகும். மட நடை பயிலும் பருவத்தில் உள்ள குழந்தைகளின் நடைப் பயிற்சிக்கு உதவும் பொருட்டு சிறு தேரினை ஓட்டி மகிழச் செய்வர். குழந்தை வளர வளர நடந்து செல்லுதல் மட்டுமின்றி தேர் முதலிய வற்றின்மீது ஊர்ந்து செல்லுதலையும் விரும்பும் இவ்விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு தேர் முதலியவற்றினை உருட்டி குழந்தையை அமரச் செய்து மகிழ்வூட்டுவர். இது குழந்தையின் இருபத்தோராம் திங்களில் நிகழும் என்பது பொது இலக்கணம் ஆகும். ஆனால் 'இலக்கண விளக்கப்பட்டியல்' இப்பருவம் குழந்தையின் ஏழாம் ஆண்டில் நிகழும் எனக் கூறுகிறது.
|