நோஸ்ராடாமஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 73 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 8:
 
நோஸ்ராடாமஸ் [[பிரான்ஸ்]]வடக்கில்[[செயின்ட்-ரெமி-டி-பகுதியில்]] [[டிசம்பர் 14]] [[1503]],அன்று பிறந்தார் என்பதும் அவர் வாழ்ந்த பிரதேசப் பகுதி இன்றளவும் காணப்படுகின்றதென்பதும் குறிப்பிடத்தக்கது,யூத வம்சாவளியினர்களான ''ரெய்னியெர் டி செயிண்ட் ரெமி'' மற்றும் ''நொடாரி ஜௌமெ டி நோஸ்ரடேம்'' தம்பதிகளுக்குப் பிறந்த எட்டுப்பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தார் நோஸ்ராடாமஸ்.ஜௌமேயின் தந்தையான ''கசோனெட்'' 1455 ஆம் ஆண்டின் காலப் பகுதியில் தன்னை ஒரு கத்தோலிக்க மதத்தவராக தம்மை மாற்றிக்கொண்டவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
 
டிசம்பர் 14: நாஸ்ட்ரடமஸ் பிறந்த நாள் இன்று. இப்படி ஆரம்பிப்பதிலேயே அவரின் வாழ்க்கையின் சுவாரசியம் துவங்கி விடுகிறது. அவர் இன்னுமொரு ஏழு நாட்கள் கழித்து பிறந்தார் காலண்டர் குழப்பம் என்று சொல்வதில் இருந்து அவர் சொன்னவை வரை எல்லாமே செம த்ரில் தருபவை. நாளைக்கு என்ன நடக்கும் என்று சொல்கிற ஜோசியர்கள் பலபேரை பார்த்திருப்போம். பல நூறு வருடங்களுக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை பக்கத்தில் இருந்து பார்த்ததைப்போல சொன்னவர்
தான் இவர்
பிரான்ஸ் தேசத்தில் பிறந்தவர் இவர். கலை,மருத்துவம் என்று எதெதையோ படிக்கப்போய் எதையும் முழுதாக முடிக்காமல் வெளியேறினார் இவர். மருத்துவம் படிக்கிற காலத்தில் சொந்தமாக மருந்து தயாரித்தார் என்று சொல்லி வெளியேற்றினார்கள். பின்னர் அவர் வெற்றிகரமான மருத்துவரானார். அவர் கொடுத்த ரோஸ் மாத்திரை ப்ளேக் நோயால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற உயிர்களை காப்பாற்றியது.
 
எகிப்தின் பிரமிடுகள் பற்றிய ரகசியங்கள், ரசவாதம், யூத கிறிஸ்துவ, இஸ்லாம் மதங்களின் மாந்த்ரீக வேலைகள், கப்பாலா என்கிற ஆருட முறை என்று பலவற்றை தேடிக்கற்றுக்கொண்டார் இவர். தீர்க்கதரிசனங்கள் என்கிற நூலை எழுதினார் அவர். அதில் பிக்காடர் எனும் பதினான்காம் நூற்றாண்டு பிரெஞ்சு மொழி பாணியில் சங்கேத மொழியில் பாடல்கள் எழுதி வைத்துவிட்டுப்போனார் இவர்.
ஒருநாள் பிரபு ஒருவரின் வீட்டில் சாப்பிட போயிருந்தார் இவர். அவரின் வீட்டில் வெள்ளை மற்றும் கருப்பு பன்றிகளில் எதை இன்று இரவு உண்போம் என்று கேட்டார் செல்வந்தர். "கருப்பு பன்றி தான் இரவு உணவுக்கு ! வெள்ளை பன்றியை ஓநாய் தின்று விடும் !" என்றார் நாஸ்ட்ரடமஸ். செல்வந்தர்
வெள்ளைப் பன்றியை சமைக்க சொன்னார். இரவு உணவின் பொழுது "எப்படி இருக்கிறது வெள்ளை பன்றி ?" என்று செல்வந்தர் கேட்ட பொழுது வேலையாள் ,"வெள்ளை பன்றி மாமிசத்தை நாய் தின்று விட்டது. கருப்பு பன்றியை தான் உண்கிறீர்கள் " என்றான். அந்த நாயின் பெற்றோரில் ஒன்று ஓநாய் !
தன்னுடைய மகன் ஜோசியத்தால் இறப்பான் என்று சரியாக சொன்னார் அவர். இன்று ஊர்ப்பற்றிக்கொள்ளும் என்று அவன் சொன்னது நடக்காமல் போகவே மக்கள் அவனை
நெருங்கி வந்தார்கள். கம்பளியில் தன்னை சுற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டான் அவன். ஊரும் பற்றி எரிந்தது, அவனும் இறந்து போனான்.
பிரான்ஸ் அரசி அவரைப்பார்க்க அழைத்திருந்தார். அவரிடம் ராஜ வம்சத்தைப்பற்றிய தன்னுடைய ஆரூடத்தை சொன்னார் அவர். ஏழு பிள்ளைகளும் அரசு ஆள்வார்கள் ; கடைசிப்பிள்ளை மட்டும் நிலையான ஆட்சியை தருவான் என்று துல்லியமாக சொன்னார் நாஸ்ட்ரடமஸ் . அவர் அங்கே சொல்லாமல் முன்னரே அவரின் தீர்க்கதரிசனங்கள் நூலில் எழுதியிருந்தது ராணியின் கணவரின் மரணம் பற்றி !
தங்கக்கூண்டில் கண்கள் குத்தப்பட்டு இறப்பார் என்று அவர் எழுதியிருந்த மாதிரியே வீர விளையாட்டின் பொழுது கண்கள் குத்தப்பட்டு அரசர் மரணமடைந்தார்.
நாஸ்ட்ரடஸ் தான் இறக்கிற பொழுது கூடவே ரகசிய ஆவணங்கள் சிலவற்றை தன்னோடு சேர்த்து புதைக்க சொன்னார். அதை சர்ச் தோண்டி பார்த்தது. அவரின் கழுத்தில் 1700 என்று தோண்டி பார்த்த வருடம் கச்சிதமாக குறிக்கப்பட்டு இருக்கவே அப்படியே விட்டுவிட்டார்கள். பிரெஞ்சு புரட்சி சமயத்தில்
நாஸ்ட்ரடமஸ் மண்டை ஓட்டில் மது ஊற்றி குடித்தால் ஆரூடம் சொல்லும் திறன் வரும் என்று நம்பிய வீரர் கூட்டம் ஒன்று அவரின் கல்லறையை நோண்டியது. அதனுள் "நான் இறந்த நூறாவது ஆண்டில் என் கல்லறையை தோண்டி எடுக்கும் இழிவானவன் மரணமடைவான் !" என்று எழுதியிருந்தார் நாஸ்ட்ரடமஸ். அதைப்படித்து கொண்டிருக்கும் பொழுதே தோட்டா பாய்ந்து இறந்து போனான் அந்த வீரன்
'இத்தாலியில் பிறக்கும் பேரரசன் பேரிழப்பு தருவான் ; அவனின் சேர்க்கை அவனின் கூட்டு அவனை மன்னன் என்று சொல்லாது கசாப்பு கடைக்காரன் என்று எண்ண வைக்கும்" என்று அவர் நெப்போலியனை பற்றி முன்னமே சொல்லிவிட்டார். லண்டனில் ஏற்பட்ட பெருந்தீ விபத்தை வருடத்தோடு துல்லியமாக நூறு வருடங்களுக்கு முன்னரே சொல்லியிருந்தார் நாஸ்ட்ரடமஸ். பிரெஞ்சு புரட்சியை ,"இளவரசர்களும், பிரபுக்களும் தலையில்லா மூடர்கள் ஆக்கப்படுவார்கள்
அடக்கப்பட்டவர்களால் !" என்று பாடி சென்றிருக்கிறார்
லூயிஸ் பாஸ்டரின் பெயரோடு அவரை கடவுள் போல மறைக்கப்பட்ட ஒன்றை கண்டுபிடித்ததால் மக்கள் கொண்டாடுவார்கள் என்று முன்னூறு வருடங்களுக்கு முன்னரே பதிந்து விட்டுப்போய் இருக்கிறார். டயானாவின் மரணதைப்பற்றியும் புள்ளி வைத்தது மாதிரி பதிந்து விட்டார் அவர். அவரின் இறுதிக்காதலன் நபியின் துணைப்பெயரை கொண்டிருப்பான் என்றும் சொன்னார். அப்படியே
நடந்தது. அந்த காதலனின் பெயர் முகமது அல் பயத் !
"ஏழைகளின் பிள்ளையொன்று மேற்கு ஐரோப்பாவின் ஆழங்களில் இருந்து எழும் ! நாவால் பெரும்படையை பேச்சால் இழுத்து கிழக்கில் புகழ் பெறுவான் அவன் !" என்று ஹிட்லரை பற்றி அவர் எழுதி இருந்தார். அதை கூடுதலாக கொஞ்சம் மசாலா அயிட்டங்கள் தடவி பிரபலம் ஆக்கினான் ஹிட்லர். சர்ச்சில் அவனின் வீழ்ச்சியைப்பற்றி நாஸ்ட்ரடமஸ் எழுதி இருந்ததை அச்சடித்து விநியோகித்து பதிலடி தந்தார்.
"இரு நகரங்களின் வாசலருகே இருபெரும் ஆயுத தாக்குதல் நிகழும் ! பஞ்சம், கொடிய நோய்கள் வாளின் முனையில் கோரங்கள் அரங்கேறும் ! மக்கள் இறைவனிடம் உதவிக்கு இறைஞ்சி அழுவார்கள் !" என்று ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வெடிப்பு நடப்பதை எச்சரித்து விட்டார் நாஸ்ட்ரடமஸ். "ஆயிரம் வருடங்கள் முடியும் காலத்துக்கு சற்று முன்னர் எழில் வரும் ஓராண்டில்
விளையாட்டில் படுகொலைகள் நிகழும் ! கல்லறையில் இருந்து வருவார்கள் புதைக்கப்பட்டவர்கள் !" என்று முனிச்சில் நடந்த ஒலிம்பிக் படுகொலைகளை ஆருடம் சொல்லியிருக்கிறார்
ஜான் கென்னடியின் கொலை செய்யப்படக்கூடும் என்று முன்னரே உளவுத்துறை எச்சரிக்கும் அவர் இருந்தாலும் சுடப்படுவார் அவரின் சகோதரரும் இறப்பார் என்றும் பாடலில் பாடிவிட்டார். 3797 இல் உலகம் அழியும் என்று வேறு அடித்துச்சொல்லிவிட்டு போயிருக்கிறார் நாஸ்ட்ரடமஸ்.
இந்தியாவைப்பற்றி ஏதேனும் தீர்க்கதரிசனம் உண்டா நாஸ்ட்ரடமஸ் அவர்களிடம் ? உண்டு ! இந்திரா, ராஜீவ், ஜான்சி ராணி, போஸ் என்று நீளும் பட்டியல் அது. "துரத்தப்பட்ட ராஜ்யத்தை மீண்டும் பெறுவாள் அவள் ; சதியாளர்கள் எதிரிகள் ஆவர் ! மூன்று மற்றும் எழில் அவளுக்கு மரணம் நிச்சயம் !" என்று எழுதியிருக்கிறார். இந்திரா 70-3 = 67 வயதில் இறந்தார் என்பதை கொண்டும, எமேர்ஜென்சியால் ஆட்சியை இழந்து மீண்டும் அவர் வந்தார்
என்பதையும் பொருத்திக்கொள்ளுங்கள்.
"தான் தோற்பதை நேரில் காண்பாள் ! ஆணின் வீரத்தோடு போரிடுவாள் ; குதிரையில் ஏறி தனியே நதியை கடப்பாள். இரும்பு தொடர்ந்திட நம்பிக்கைகளை பொய்யாக்கிடுவாள் !" என்று ஜான்சி ராணி பெண் வீட்டில் முடங்கிக்கிடக்க வேண்டும் என்பதை உடைத்து போரிட்டு குதிரையில் தப்பி போனதை நேரில் பார்த்தது போல குறிக்கிறார். எண்ணற்றோரின் தலைவன் வெவ்வேறு பண்புகள் உள்ள
நாட்டில், மொழியில் வீரர்களை உத்வேகப்படுத்துவான் . நீரில் தப்பி போவான் " என்று போஸின் வாழ்க்கை பதிவு செய்யப்படுகிறது. போஸ் நீர் மூழ்கி கப்பலில் தப்பினார். !
ராஜீவ் காந்திப்பற்றிய பாடலோடு முடிக்கலாம். ராஜீவ் பதவிக்கு வந்து ஏழு வருடங்கள் கழித்து இறந்தார். அவரின் மனைவி சோனியா வெனிட்டோ மாநிலத்தை சேர்ந்தவர். அம்மாநில தலைநகர் வெனிஸ் ! "அரச ஆணையால் பெரும் விமானி அனுப்படுவார் ; படையை விட்டு உயரிய இடம்
நோக்கி ; ஏழு ஆண்டுகள் கழித்து ரத்தாகும் ; காட்டுமிராண்டிகளின் கொடுஞ்செயல் வெனிசை பயத்துக்கு உள்ளாக்கும் !"
 
 
 
 
from vikatan.com
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நோஸ்ராடாமஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது